Monday, August 9, 2010

முஸ்லிம்களிடம் இனப்பற்று ஏன் இல்லை?

அன்புள்ள நண்பர் வெங்கடேஷ் இனப்பற்று தான் அறிவியல் பூர்வமானது என்று எங்கிருந்து கண்டு பிடித்தார் என தெரியவில்லை! எண்ணிலடங்கா சாதிகள் அனைத்தும் தமிழ் இனத்தில் தான் உள்ளது! கருணாவும் கருணாநிதியும் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் தான் ! விடுதலை புலிகள் முஸ்லிம்களை கொன்றதை ஆதரித்து , நாம் தமிழ் இன வாதம் பேசுவது சரி என்றால் சிங்களன் செய்வது எப்படி 'பேரின' வாதமாகும்? இதனால் தான் இஸ்லாம் ஒட்டு மொத்த மனிதர்களும் ஒரு தாய் மக்கள் என 'மனித குல வாதம் பேசுகிறது! 'இன வாதம் பேசுவோர் எம்மை சார்ந்தவர் இல்லை'! என கூறும் நபிகளார் 'தன இனத்தை சார்ந்தவன் தவறு செய்தாலும் அதை ஆதரிப்பது தான் இனவாதமாகும்' என இன வாதத்திற்கான அளவு கோலையும் கூறியுள்ளார். எனவே தவறு செய்வோர் யாராக இருப்பினும் தட்டி கேட்பதும் சுட்டி காட்டுவதும் தான் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நன்மை பயக்கும்!

0 comments:

Post a Comment