Friday, August 6, 2010

ஏகத்துவம் மாத இதழ்! மார்க்க பத்திரிக்கையா......!? அல்லது வேறு ஏதுமா.....???

நம் கட்டுரையின் தலைப்பை பார்த்து சில சகோதரர்கள் புருவத்தை தூக்கலாம். ஆனால் கடந்த மாத ஏகத்துவம் மாத இதழை படித்திருந்தால், நாம் சொல்வது உண்மை என்றே ஒத்துக் கொள்வீர்கள். அந்த அளவிற்கு ஒரு ஆபாசச் சிறப்பிதழுக்கு சமமாக பக்கத்திற்கு பக்கம் பலான செய்திகளை தாங்கி வந்திருக்கிறது.
பரிகாசிக்கப்படும் பால்குடிச் சட்டம்” என்ற கட்டுரையில் இவர்களின் உள் மன வக்கிரங்களை வெளிப்படுத்தி ஸவூதியில் யாரோ தங்கள் மனோ இச்சைப்படி இம்ரானா விவகாரத்தில் கொடுத்த ஃபத்வா போன்ற ஒரு ஃபத்வாவை வைத்துக் கொண்டு படிக்க கூசும் வார்த்தைகள் கொண்டு எழுதி உள்ளனர். மேலும் "பருவ வயதினருக்கு பால் கட்டுதல்' என்ற கட்டுரையில் "பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது' என்று தங்களுடைய ஆழ்மான வக்கிரங்களை, ஆபாசங்களை வெளிப்படுத்தி உள்ளதன் மூலம் அந்த நபிமொழியில் இல்லாத வார்த்தைகளை இட்டுக்கட்டி ஸஹ்லா (ரழி), ஸாலிம் (ரழி), அபு ஹுதைஃபா (ரழி) ஆகியோரை மட்டுமல்லாது நபி (ஸல்) வழங்கிய மார்க்க சட்டத்தையும் கேலிக் கூத்தாக்கி உள்ளார்கள்.
கண் வலிக்கு கண்ணில் தாய்ப்பால் உற்றுவது போன்று அந்த ஹதீûஸ அணுகினால், நபித் தோழர்களின் கண்ணியத்தையோ, நபி (ஸல்) அவர்களின் சட்டத்தையோ, அறிவிப்பாளர் வரிசையில் சரி காணப்பட்ட நபி மொழியையோ குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை எனும் போது "மார்பகத்தில்' என இல்லாத வார்த்தையைச் சேர்த்து மார்க்கத்தையே இழிவுபடுத்தும் இவர்கள் உண்மையிலேயே மார்க்க அறிஞர்கள்தானா? அல்லது மஞ்சள் பத்திரிகை நடத்தும் பச்சை மனிதர்களா என்பது தெரியவில்லை.
"அடுத்ததாக இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லா தலைவர்கள்” எனும் கட்டுரையில் "மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய்“ மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொண்டு இறங்க மாட்டேன் என அடம் பிடிக்கின்றனர். பாக்கரைப் பற்றி கூற வேறெதுவும் கிடைக்காததால் அதை தேவைப்படும் போதெல்லாம் தூசி தட்டுவார்கள். அதன்படி 6 மாதத்திற்குள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை அழித்து விடலாம் என்று கண்ட கனவு சிதறுவதையும், தமிழகம் முழுவதும் இதஜவிற்கு பெருகி வரும் மக்கள் ஆதரவையும் கண்டு பொறுக்க முடியாமல் பிறாண்டியுள்ளனர்.
பஸ்ஸில் பாலியல் விளையாட்டு நடத்திய ஒருவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்குகிறது. அவர் தவ்ஹீத் பெயரில் இயக்கம் துவங்கலாமா? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என பெயரிடலாமா? என ஒரு மகா மட்டமான பொய்யை இட்டுக்கட்டி உள்ளனர். இதெல்லாம் இலக்கா? வெட்கக் கேடு! என ஏதோ பஸ்ஸில் நேற்றுக்கு முந்திய நாள் பயணம் செய்தது போலவும், அதை அறிந்து நேற்று இவர்கள் நீக்கியது போலவும், இன்று பாக்கர் இயக்கம் தொடங்கியது போலவும் இப்போது பேசும் வெட்கங் கெட்டவர்களே... இந்த வெட்கக் கேட்டுக்கு பின்னர்தான் 2 ஆண்டு உங்கள் பரிசுத்த இயக்கத்தில் பொதுச் செயலாளராக அவர் பணிபுரிந்தார். அவர் தலைமையில்தான் வல்லம் மாநாடு மிகச் சிறப்புற நடைபெற்றது.
அப்போது உங்களுக்கு வெட்கம் வரவில்லையா? சூடு, சொரணை எதுவும் அப்போது இருந்ததில்லையா? மருந்துக்காவது மானம், ரோஷம் இருந்ததா? அப்போது உங்களது வாய்களெல்லாம் பாக்கர் வீசிய எலும்புத் துண்டு அடைத்துக் கொண்டு இருந்ததா?
பொது வாழ்வில் இருந்து ஒதுங்க வேண்டிய ஆசாமி, தக்வா இறையச்சம், மறுமை, மஹ்ஸர் என பேசித்திரிவது நயவஞ்சகம் என்றால் 2006 முதல் 2008 வரை இந்த நயவஞ்சகத்தை அனுமதித்த நயவஞ்சகர்கள் நீங்களல்லவா? பாக்கர் பேசுவது நடிப்பு என்றால் இந்த நடிப்புக்கு இரண்டாண்டு காலம் திரைக்கதை எழுதி இயக்கியவர்கள் நீங்களல்லவா?
பாக்கரின் பஸ் பயணத்தை ஆதரிப்பது, இறை மறுப்பு என்றால் கடலூர் பொதுக் குழுவிலும், முபாஹலாவிலும், நியாயப்படுத்திய மறுப்பாளர் யார்? திருச்சி செயற்குழுவில் கலந்து கொண்டு பாவ மன்னிப்பு வழங்கிய பாவிகளின் நிர்வாக குழு எது? பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளராக ஆக்கிய செயற்குழு உறுப்பினர்கள் எல்லாம் இறை மறுப்பாளர்களா?
இவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மேலும் "தங்கள் மனைவியரை இவரோடு பஸ்ஸில் அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்று ஒட்டுமொத்த கொள்கை சகோதரர்களையும் இழிவுபடுத்தும், ஏகத்துவ வியாபாரிகளே! நீங்கள் உங்கள் மனைவிமாரை பாக்கரோடு அனுப்பி வைத்து விட்டுத்தான் மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கினீர்களா? என்று கேட்டால் மேலப்பாளையம் மேலாண்மை ஷம்ஸுல்லுஹா தாங்குவாரா? தாங்கினாலும் தாங்குவார். ஏனென்றால், "ஊறுகாய் வியாபாரம் செய்யும் என் மனைவியோடு ஊறுகாய் வியாபாரி உள்வீடு வரை வந்து பேசிக் கொண்டிருக்கிறான் என்று கூறியவர்தானே.
அது மட்டுமின்றி "பழ்லுல் இலாஹி தன் மனைவிக்கு நெக்லஸ் வாங்கி கொடுத்ததை பலர் அறியக் கூறியவர்தானே! பிடிபட்டவுடன்,பாக்கரை வீட்டுக்கழைத்து விருந்து கொடுத்துவிட்டு அதற்கும் பில்போட்டு பணம் வாங்கியவர்தானே! பள்ளிவாசல் பணத்தை கையாடி விட்டு, கையும் களவுமாக பீஜேவிடம் கெஞ்சி சம்பளத்தில் கழித்து சரிக்கட்டியவர்தானே மேலாண்மை!”
மேலும் "எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டு வைக்காத மக்கள், அறிவீனர்களை தலைவர்கள் ஆக்கிக் கொள்வார்கள்'' என்கிற ஹதீஸ் நூற்றுக்கு நூறு நமக்குப் பொருந்துமாம்! இதன் மூலம் பூமியில் பீஜே உள்பட எந்த மார்க்க அறிஞரும் இல்லை என்பதையும் தாங்களில் யாரும் மார்க்க அறிஞர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்! இல்லையெனில் தாங்களும் அறிவு கெட்ட தலைவர்களில் உள்ளவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
"மைக்கை பிடித்து கத்திவிட்டால் போதும். மக்கள் தக்பீர் முழக்கமிட்டால் போதும். இவர்கள் மக்கள் தலைவராக மார்க்க அறிஞராக ஆகிவிடுகிறார்கள்' என்று தங்கள் அரிப்பை வெளிப்படுத்தியதன் மூலம், பாக்கருக்கு மக்கள் கூடுவதையும், தக்பீர் முழக்கமிடுவதையும் தாங்க முடியவில்லை என்பது புரிகிறது.
இந்த மைக்கை பிடித்து கத்தும் ஆசாமியை வைத்துதானே இயக்கம் வளர்க்க ஊர் ஊராக அனுப்பினீர்கள். அப்போதெல்லாம் அரிக்காத அரிப்பு இப்போது மட்டும் அரிக்க காரணம் என்ன? இப்போது ஏன் சொறிகின்றீர்கள்! தவ்ஹீத் ஜமாஅத்துக்கு வந்த மக்கள் வெள்ளத்தை இனி ஒருபோதும் காணப் போவதில்லை. இவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் வரப்போவதில்லை என ஜோசியம் வேறு! வருங்காலத்தை கணித்துச் சொல்லும் இந்த வல்லுனர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளோம் என்பதை மறந்து விட்டனர்.
கண்ணியமும், இழிவும் அல்லாஹ்வின் கைகளில் உள்ளது என்பது மறந்து அகங்காரம் கொண்டு ஆணவத்தின் உச்சிக்குச் சென்று தங்களுக்குத்தான் மக்கள் கூட்டம் என மமதை யில் பேசுகின்றனர்.
தேவநாதனின் மேடையில் எப்படி அமர முடியும்? ஏறிட்டு பார்க்கலாமா? என்ற கேள்வியை பெரிய குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தியாகி முருகனின் திருவுருவ படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பீஜேயிடம் முதலில் கேட்கட்டும். பெரியகுளம் சகோதரர்கள் நிரூபிக்கத் தயார் என சவால் விடுகின்றனர்! அந்த சவாலை முதலில் ஏற்கட்டும். பிறகு பெரியகுளம் ஒளியில் நெல்லையை ஆய்வு செய்வோம்.
தேவநாதனின் கொள்கை பற்றி, ஜாதி பற்றி இன்றைக்குப் பேசும் ஏகத்துவ வியாபாரிகளுக்கு வல்லம் "தவ்ஹீத் எழுச்சி' மாநாட்டில் தேவநாதனை மேடையேற்றியபோது தெரியவில்லையா?
"பணக்காரத் தலைவர்' தேவநாதன் கொடுத்த 2 லட்சம் எலும்புத் துண்டு உங்களின் வாயை அடைக்கச் செய்து விட்டதா? தண்ணியடித்துவிட்டு வர வேண்டாம் என்ற தலைவனை பாராட்டும் போது யாரோ போதையில் மிதந்தது வீடியோவில் பதிவாகி உள்ளது என்கிறீர்களே! எங்களது மாநாட்டில் பீடி, சிகரெட் இல்லை என பெருமை பேசும் உங்கள் இயக்கத்தின் மாநிலப் பேச்சாளர்கள் புகை பிடிக்கிறார்களே! இது எவ்வளவு பெரிய கேவலம். பரிசுத்தமான இயக்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் சிகரெட் பிடிக்காறாரே இது எவ்வளவு சின்னத்தனம்!
அவரவர்கள் தங்களின் ஜாதிக்கு இடஒதுக்கீடு கேட்பது ஜாதி வெறி என்பது எவ்வளவு மோசமான சிந்தனை. இந்த வாதத்தை பத்திரிகையாளர் மன்றத்திலோ இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியிலோ எடுத்து வைக்கத் தயாரா? நீங்கள் எங்கள் சகோதரர்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டு, ஜாதி மத பேதமின்றி பாடுபடுகிறோம் என்று வெளிவேஷம் காட்டி விட்டு மற்றவர்கள் இடஒதுக்கீடு கேட்பது ஜாதி வெறி என்பது எவ்வளவு பெரிய இரட்டை வேடம், கேடு கெட்டத்தனமல்லவா?
"மூஸா நபி எந்த மக்களுக்காகப் போராடினார்கள். முஸ்லிம்களுக்காகவா? சரி உங்கள் வாதப்படியே இடஒதுக்கீடு கேட்பது ஜாதி வெறி என்றும், இனவெறிக்காகப் போராடுபவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் என்றால்... "நீங்கள் எந்த கொள்கையிலும் இருந்தாலும், என்ன பாவங்கள் செய்திருந்தாலும் பரவாயில்லை. இடஒதுக்கீட்டுக்காக முஸ்லிம்களே வாருங்கள்' என்று அழைத்தது தகுதி உள்ளவனை தவிர்த்து, கொள்கைகளை விட்டு குருட்டுக் கொடியின் கீழ் இனத்தை ஆதரித்து விடுத்த அழைப்பாகாதா?
ஒவ்வொரு ஜாதிக்காரனிடமும் போய் இடஒதுக்கீடு கேட்டு போராடு என்று கூறுவதற்கு எந்த மார்க்கம் அனுமதித்தது என்று கேட்கும் மடையவர்களே! "தனக்கு விரும்புவதை தன் சகோரனுக்கும் விரும்பாத வரை அவன் முஸ்லிம் அல்லன்' என்ற ஹதீஸ் தெரியாதா?
ஆளுக்கு ஆள் இடஒதுக்கீடு கேட்பது நமக்கு ஆபத்து என அறியாமை பேசுகின்றீர்களே! அவரவர் விகிதாச்சாரப்படி வழங்கினால் யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரியாதா? ராமதாஸýம், திருமாவும், கிருஷ்ணசாமியும், தேவநாதனும் நமக்கு இடஒதுக்கீடு கேட்டு நம்முடைய பேராட்டங்களில் பங்கெடுக்கும்போது அவர்களுடைய போராட்டக் களங்களில் நாம் பங்கேற்பது தவறா? நாம் நினைப்பது போல் அவர்களும் நினைத்து எதிர்த்தால் என்னாவது?
ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று ஆதரவாய் இடஒதுக்கீட்டுக்காக போராடிக் கொண்டிருக்கும் வேளையில், உங்களின் இந்த முட்டாள்தனமான வாதம் இணக்கத்தை ஏற்படுத்துமா? நீங்கள் பேசுவது தான் இனவாதம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
"கற்பா, காசு - பணமா? என்ற கட்டுரையில் மிகவும் தரம் தாழ்ந்து, வெளிநாட்டில் வேலை செய்யும் ஆயிரக் கணக்கான சகோதரர்களின் குடும்பப் பெண்களை எல்லாம் மிகவும் கேவலமாக, கணவனின் அண்ணன் தம்பிகளோடு, கண்டக்டரோடு, பால்காரனோடு, ஆட்டோக்காரனோடு, வட்டிக்காரனோடு, மேஸ்திரியோடு, ஆலிமோடு, மின்வாரிய ஊழியரோடு, மாற்று மதத்தவரோடு, வங்கி ஊழியரோடு என சகட்டு மேனிக்கு சம்பந்தப்படுத்தி எழுதி உள்ளனர். படித்தாலே ரத்தம் கொதிக்கிறது. இதெல்லாம் உண்மைச் சம்பவம் என்று முன்னுரை கொடுத்துள்ள இவர்களால் ""கற்புள்ள பெண்களின் மேல் களங்கம் சுமத்துவோர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இது பற்றி பேசக் கூடாது. இது தெளிவான அவதூறு என்று கூற வேண்டும்'' என்ற இறைக் கட்டளையை மறந்து எழுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம் வியர்வையை காசாக்கி வாரிக் கொடுக்கும் வளைகுடா சகோதரர்கள், இந்த அவதூறுக்கு நான்கு சாட்சிகளை கேட்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் இவர்களே பொய்யர்கள்! இவர்களது கூற்றை ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவர்களின் எழுத்து விபச்சாரத்தை வெளியிடும் ஏகத்துவம் இதழை புறக்கணிக்க வேண்டும்.

குறிப்பு : நாம் விமர்சனம் செய்யக்கூடாது என இருந்தாலும், நம்மை ததஜவின் மேல் மட்ட தலைவர்கள் வம்புக்கு இழுக்கின்றனர்.
வளைகுடாச் சகோதரர்கள் (அதிலும் குறிப்பாக துபை தவ்ஹீத் சகோதரர்களின்) கடுமையான உழைப்பில் உருவான ஏகத்துவம் என்ற மாத இதழ் இந்த மாதிரியான ஆக்கங்களைதான் உருவாக்க வேண்டுமா? சகோதரர்கள் சிந்திக்க கடமைப்படுள்ளனர்.

-செங்கிஸ்கான்.

0 comments:

Post a Comment