Tuesday, August 31, 2010

பள்ளிவாசல் சொத்துகளை மீட்க INTJ அபாபீல் குழு


திங்களன்று வேலூர் மாவட்டம்
பெர்ணம்பெட் அருகில் துத்திபெட்
கிளை சார்பில் இப்தார் நிகழ்ச்சியும்
அதனை தொடர்ந்து சகோதரர்.
செங்கிஸ்கானின் பயான் நிகழ்ச்சியும்
நடை பெற்றது! இதில் மாநில செயலாளர்
இனாயத்துல்லாஹ் , தாம்பரம் ரஹ்மத்துல்லாஹ் ,
வேலூர் மாவட்ட தலைவர் அத்திக் , மற்றும்
வாணியம்பாடி ,திருப்பத்தூர் கிளை நிர்வாகிகள்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு
பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்திருந்தனர்
பெர்ணம்பெட் நகர தலைவர் சர்பாராஸ்
தலைமையிலான குழுவினர்.நிகழ்ச்சியில்
வேலூர் மாவட்டத்திலுள்ள வக்ப் சொத்துக்களை
மீட்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 'அபாபீல்' குழு'
அமைக்க தலைமை அனுமதி பெறவும்
முடிவு செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment