Sunday, August 8, 2010

இந்து இளைஞருக்கு கை வெட்டு" ஆர்.எஸ்.எஸ் வெறிச்செயல்

கேரளாவில் அபிலாஷ் என்ற அப்பாவி இந்து இளைஞனின் கையை எட்டு பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் முழங்கைக்கு கீழே துண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.



ஆற்றமுழா என்ற பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(25). இவர் ஒரு ஹோட்டல் உரிமையாளர், இவரின் உறவினரான ஒரு இளம்பெண்ணிடம் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த மனோஜ் என்பவன் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளான். இந்த அநியாயத்தை மனோஜ் தட்டிக் கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு எட்டு பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அபிலாஷின் கையை வெட்டியுள்ளனர். இத்தாக்குதலில் அபிலாஷின் தாயார் உட்பட நான்குபேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஹிந்துத்துவா சிந்தனையுடைய ஆர்.எஸ்.எஸ்ஸினால் ஒரு அப்பாவி ஹிந்து இளைஞர் அநியாயமாக தாக்கப்பட்ட சம்பவம் ஆர்.எஸ்.எஸ்ஸின் போலி முகத்தை ஹிந்துக்களுக்கு கிழித்து காட்டியுள்ளது.

கம்யூனிச அரசு(?)

கடந்த மாதம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக தேர்வு வினாத்தாள் தயாரித்த கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கையை சில மர்ம நபர்கள் வெட்டினர். இந்த சம்பவத்தை "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா" என்ற முஸ்லீம் அமைப்போடு தொடர்புபடுத்தி "தாலிபான் அடயாளம், திவிரவாதிகள் ஊடுருவல்" என்று கூறி பிரபல ஊடகங்கள் மத கலவரத்தை ஏற்ப்படுத்த முயற்ச்சி செய்தது.

ஆனால் இன்று அபிலாஷின் கைவெட்டப்பட்ட சம்பவத்தில் அனைத்து ஊடகங்களும், ஆளும் மாநில கம்யூனிச அரசும் மெத்தன போக்கையே கடைபிடிக்கிறது.

ஜோசப்பின் கைவெட்டு வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் பங்குக் குறித்து எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அபிலாஷின் கைவெட்டு சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு தெளிவான பிறகும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வரும் கேரள அரசின் சிறுபான்மை விரோத போக்கு நடுநிலையாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கம்யூனிசத்தில் ஹிந்துத்துவா சிந்தனை புகுந்துவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment