Saturday, August 7, 2010

ஏகத்துவத்துக்கு கண்டனம்!

செங்கிஸ்கான் அவர்களின் ஏகத்துவம் பற்றிய செய்தி அறிந்தவுடன் ஏகத்துவம் பத்திரிக்கை வாங்கி படித்தேன். நவுதுபில்லாஹ் இது ஒரு மஞ்சள் பத்திரிக்கையின் மாதிரி வடிவம் என்றால் அது மிகையாகாது.
அல்லாஹ்தான் இவர்களை பாதுக்காக்க வேண்டும், என்னை போன்ற இயக்கம் சாரா நபர்களையும் அசிங்கப்படுத்தி எங்கள் மனைவிமார்களை கொச்சைப்படுத்தி எழுதி இருக்கும் இந்த ஏகத்துவம் இதழை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் குடும்ப கஷ்டம் காரணமாக அயல் நாடுகளில் வேலை செய்து சம்பாதிக்கும் எங்கள் போன்ற நபர்களிடமிருந்து நன்கொடை பெற்றுதான் இவர்கள் ஜுலை 4 பேரணி நடத்தினார்கள்.நான் மிகவும் வேதனைப்படுகிறேன் தவ்ஹீத் என்ற போர்வையில் இத்தனை அசிங்கம் தாங்கிய ஆலிம்களா..!? வேதனைதான் மிச்சம்.
இன்ஷா அல்லாஹ் நாங்கள் இது போன்ற இதழுக்கு அல்லது இயக்கத்திற்கு எந்த வகையிலும் ஒத்துழைக்க போவதில்லை. அயல் நாட்டில் வேலை பார்ப்பவர்களின் குடும்பங்களை கொச்சைப்படுத்தும் இவர்களுக்கு உண்மையில் மானம் ரோஷம் உடையவர்களாக இருந்தால் உண்மையில் அயல் நாட்டில் வேலை பார்க்கும் எங்கள் போன்றவர்களிடம் நன்கொடை கேட்கக்கூடாது.
இறைவா! இதுபோன்ற மஞ்சள் ஆலிம்களை மக்களிடமிருந்து புறம் தள்ளி வைப்பாயாக!
-அபூதாலிப், தோஹா, கத்தார்.

» அச்சுக்கு இலகுவாக‌ இத்தகவலை நண்பருக்கு

0 comments:

Post a Comment