விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கண்ணியமிகு இந்த ரமதானில் மார்க்கப் பணிகளை ஆற்றி வருகிறது.
ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் “இஃப்தார்” நிகழ்ச்சியில் நூற்றும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் சமுதாய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அதில் தேசியலீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மது அவர்கள், சமுதாய பிரமுகர் அப்போலா ஹீனிஃபா அவர்கள் கலந்து கொண்டர்கள்.
இன்று 27.08.2010 அன்று தமுமுகவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொள்கிறார். அவரைத் தொடர்ந்து முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பிரஸிடண்ட் அபூபக்கர் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இந்த நிகழ்சிகள் வின் டிவியில் சகர் நேரத்தில் ஒளிபரப்பாகிறது.
இஷா தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும் இரவு தொழுகைக்கு பின் மவ்லவி அப்துல் காதர் மன்பஈ அவர்களால் நடத்தப்படும் தொடர் பயானும் நடைபெற்று வருகிறது. அவ்வாறே நூற்றுக்கு மேற்ப்பட்ட சகோதரர்கள் தினமும் நம் தலைமையகத்தில் ஸஹரில் நோன்பு பிடிக்க உணவு ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, இஃப்தார் நிகழ்ச்சிக்கு உங்களால் முடிந்த உதவிகளை அள்ளி வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : +91-9791145050 / +91-9600191610
0 comments:
Post a Comment