Monday, August 9, 2010

இலங்கையையும் விட்டு வைக்காத அண்ணன்.

மதிப்பிற்குறிய மௌலவி பீஜே அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களது இணையத் தளத்தில் “உங்கள் கருத்து” ப் பகுதியில் களுத்துறையைச் சேர்ந்த சகோதரர் பர்ஹான் என்பவரின் கேள்விக்கு அளித்த பதிலை வாசித்தேன்.


http://onlinepj.com/YFeedback/

சூனியம் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று என்பதை மறுக்கும் தங்களது நிலைப்பாட்டைப் பற்றி நான் விவாதிக்க எனது இணையதளத்தில் தாங்களை அழைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு நீங்கள் “இப்போது அவர் மிக மிக அசிங்கமான செயலில் ஈடுபட்டு இனிமேல் தஃவா செய்யக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் குறித்த குறுந்தகடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடைப்பதற்கே விவாத அழைப்பு” என்று பதில் அளித்துள்ளீர்கள்.

அவர் குறிப்பிட்டதைக் கொஞ்சம் நீங்கள் உறுதிப்படுத்தியபின் மேற்கூறியவாறு சொல்லியிருந்தால் குறுற்தகடுகளை மறைக்கத்தான் இந்த விவாத அழைப்பு என்ற குற்றச்சாட்டு உண்மையெனலாம். நான் தங்களுடன் எப்பொழுதும் களந்துரையாடுவதையும் கருத்துப்பறிமாற்றம் செய்வதையுமே விரும்பியுள்ளேன். தங்களுக்கு எங்கேயும் விவாத அழைப்புக்கள் விடுத்ததில்லையே. என்னைப் பற்றிய குறுந்துகடுகளை தாங்கள் வைத்திருப்பதனாலோ அல்லது வேறு காரணங்களிற்காகவோ இந்த நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. அதற்கு முன்னரே பல உரைகளிலும் எழுத்துக்களிலும் நான் அவ்வாறுதான் நடந்துள்ளேன்.


“ஏற்கனவே முஜாஹிதிடம் விவாதம் செய்வது குறித்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் அவர் அதற்கு ஒத்துவரவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நான் நல்லதொரு கலந்துரையாடலுக்குத் தயாராகவே உள்ளேன் என்று ஒரு மடலை எஸ் எல் டி ஜேயிற்கு எழுதியதும் அது டி என் டி ஜேயிற்கு கிடைத்ததும் தாங்கள் அறிந்தேயிருப்பீர்கள். பின்வரும் லின்கில் அந்தக் கடிதம் உள்ளது.

ஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம்


“முஜாஹிதிற்கு நிகரான கேவலமான ஒருவர் இந்த உம்மத்திலேயே கிடையாது” என்று சொல்லியுள்ளீர்கள். அந்த ஓடியோப் பதிவை தாங்கள் கேட்டதால்தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அதைக் கேட்பவர்கள் அந்த முடிவுக்குத்தான் வருவார்கள் என்றும் எழுதியுள்ளீர்கள்.

நான் ஒரு இணைய அரட்டையின்போது மிகமோசமான முறையில் ஒரு அழைப்பாளனுக்குத் தகாத முறையில் பேசினேன் என்பதை உலகறிய நான் ஏற்கனவேயே ஏற்றுக்கொண்டுவிட்டேன். அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன் கேட்டுக்கொண்டுமிருக்கிறேன். அப்படியொரு அரட்டை நடந்ததை எண்ணிப் பார்க்கும் நேரமெல்லாம் நான் மனம் வருந்தி தவ்பா செய்கிறேன். ஆனால் பதிவுசெய்யப்பட்ட அந்த அரட்டை சம்பந்தமான குறுந்தகடுகளை நான் தஃவா செய்யக் கூடாது என்பதாக நிபந்தனையிட்டு தடுத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளதுதான் ஆச்சரியமாக உள்ளது. மரணம் வரை எனது பிரச்சாரத்தை எந்தக் குறுந்தகடும் தடுக்காது இன்சா அல்லாஹ்.

அதே நேரம் அந்த அரட்டையை டீ என் டீ ஜேயின் இலங்கைக் கிளை முன்னால் தலைவர் ரஸ்மிதான் தன்னை ஒரு பெண்ணாக “பஸீரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டு செய்தார்.(ஆனால் தற்பொழுது அந்தச் சகோதரர் அவ்வாறு தான் செய்ததை எண்ணி மனம் வருந்துகிறார்). அதனால் அவரைப் பற்றி தவறாக இங்கே சொல்ல வரவில்லை. அவர் அவளாக எழுத்திலும் நான் நானாக எனது குரலிலும்தான் அந்த அரட்டை நடந்தது. அதில் தான் எப்படி அந்த அரட்டை அமைய வேண்டுமென்று விரும்பினாரோ அதற்கேற்ப கேள்விகளைக் கேட்டார். சைத்தானின் மாய வலையில் சிக்கியிருந்த நான் மோசமாக அதற்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். அதைப் பதிவு செய்து டி என் டி ஜே இலங்கைக் கிளையினர் மூலம் தஃவா செய்யக் கூடாது என்று ஒப்பந்தம் எடுக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுக்கப்பட்ட வீடியோவும் அரட்டை ஓடியோவும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அந்தப்பதிவைத்தாங்கள் பத்திரமாக வைத்திருப்பதும் முதல் விவாதமாக அது அமைய வேண்டும் என்று சொல்வதும் எந்த வகையிலும் மார்க்கம் அனுமதிக்கும் முறையல்ல. ஒருவேளை நான் அதுபொய்யான பதிவு என்று சொன்னால் நீங்கள் சொல்வதில் ஒரு ஞாயம் உள்ளது என்று சொல்லலாம். ஆனால் நான் ஏற்றுக்கொண்ட ஒரு தவறை மறுபடி விவாதிக்க வேண்டும் என்று சொல்வது முறையல்ல.

இதில் இன்னும் பல விடயங்கள் பேசப்பட வேண்டியுள்ளன. ஆனாலும் ஒருபொழுதும் நான் பாவமன்னிப்புக் கேட்டு தவிர்ந்துகொண்ட ஒன்றை பாதுகாத்து வைத்துக் கொண்டு என்னை அச்சமுற வைக்கலாம் என்ற தப்பான எண்ணங்கள் இருந்தால் அதை இன்றோடு தவிர்ந்துகொள்ளுங்கள். டிவீடிகளாக அரட்டையை மாற்றி டி என் டி ஜேயின் இளவச விநியோகங்களில் ஒன்றாக இதைச் செய்தாலும் என்னை அவமானப்படுத்தலாம் ஆனால் அது மாத்திரமல்லாமல் ஒரு முஸ்லிம் தன் தவறை ஏற்றுக்கொண்ட பின்னர் அவரது மானத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது உங்கள் தகுதிக்கும் பிரச்சாரத்திற்கும் உகந்ததல்ல. தாங்களே ஒரு முஸ்லிமுடைய மானம் சம்பந்தமாக தனித்தலைப்பில் உரை கூட நிகழ்த்தியுள்ளீர்கள். “தவறாக நடக்கும் போலிகளைத்தான் அடையாளப்படுத்துகிறோம்” என்று பதில் சொல்லிவிடாதீர்கள். அவ்வாறே வைத்துக்கொண்டாலும் தவறை உணர்ந்து நான் 6 மாதகாலம் மௌனமாக இருந்து அமைதிகாத்த பின்னரே மறுபடி பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். கொஞ்சம் சிந்தியுங்கள். தயவுசெய்து இந்த வழிமுறை நல்லதல்ல. தங்களின் மீது நான் மிகுந்த மரியாதையுடையவன் என்பதனால் இந்த மடலை தங்களுக்கு வரைந்துள்ளேன். பதிலை எதிர்பார்க்கிறேன்.



Filed Under: தவறான செய்திகள், நன்நெறிகள், மறுப்புக்கள், விமரிசன விளக்கங்கள்
Tags: chatting, setting, கடிதம், செடிங்கில், பீஜே, பீஜேயிற்கு, மௌலவி, ஸெடிங்
12 Responses to ““செடிங்கில் ஒரு ஸெடிங்” மௌலவி பீஜேயிற்கு ஒரு கடிதம்”
saneej says:
August 4, 2010 at 11:45 pm
அல்லாஹ் நமது பாவங்களை மறுமை நாளில் மறைப்பதற்காய் இது போன்ற சந்தர்ப்பங்களை பயன் படுத்திக் கொள்வோமாக. நமக்குள்ளேயே இருக்கட்டும். மற்றவர்கள் மறை படுவதை விரும்பவில்லை என்றால், நம்மால் என்ன தான் செய்ய முடியும்? சும்மா மறைக்கிறேன், மறைக்கிறேன் என்றால் சரியாகி விடுமா? பொறுமையின் உச்சிக்குப் போனாலும் மறைக்கொனும். உச்சி அல்ல, தூண்டுபவர்களின் சிறு சதிக்கே சட்டென்று சரிகிரார்கர். ஆட்பட்டு, வீராப்போடு கடுகடுக்கிரார்கள். அல்லாஹ்வின் தூதரின் அழகிய முன் மாதிரியை விட்டு விட்டு அனுமதித்ததில் தாழ்ந்ததட்கே செல்வதால் ஜாஹிலியத்தில் இலகுவாக வீழ்கிறார்கள். இது சம்பந்தமான எந்த ஆராய்ச்சியும் நமக்குத் தேவையில்லை. தவறை ஒப்புக் கொண்டார். அதற்காக இறைவனிடம் மன்றாடினார். இந்த அளவில் நமக்குப் போதும். இருவரும் அறிஞர்கள். இருவரும் மனிதர்கள். சகோதரர் முஜாஹித் மட்டுமல்ல, சகோதரர் பீ ஜே யும் மனிதர் தான். அவரும் தவறு விடக்கூடியவர் தான். இந்த விடயத்தில் சகோதரர் முஜாஹிதின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். நானும் அதில் தான் நிற்கிறேன். சகோதரர் பீ ஜே விடுகின்ற சில தவறுகளுக்காய் அவரை வெறுக்க முடியாது. அவர் நம்பிய யாரோ அவரை திசை திருப்பி இருக்கலாம். நான் உட்பட பல கொள்கை வாதிகள் நேசிக்கும் மனிதர் அவர். அவர் செய்த தியாகங்களை இலகுவில் மறந்து விடவும் முடியாது.
ஒன்றும் இல்லை கொள்கை வாதிகளுக்கு மத்தியில் ஜாஹிலியமும், அறிவின்மையும் தலை தூக்குகிறது. இது தான் இந்தக் குழப்பங்களுக்கு காரணம்.

சகோதரர் முஜாஹிதிற்கு ஒரு வேண்டுகோள்; இது சம்பந்தமாக அறிஞர் பீ ஜே எழுதி இருந்த விதத்திற்கு நீங்கள் சற்றும் நிதானமிழக்காது பதிலளித்த விதம் அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருள். முதற் கண் அதற்காய் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். அதே போன்று உங்கள் மனம் பட்ட வேதனைக்காய் அவரை மன்னிக்காது விட்டு விடாதீர்கள். நம்மில் பலரை அடிக்கடி தௌஹீத் பிரச்சாரத்தின் பக்கம் மூழ்க வைத்து, களத்தை உயிரோட்டமாகக பாடு பட்டவர்களில் அவரும் ஒருவர். இதை நீங்கள் நன்கு அறிந்தவர். அடிக்கடி ஞாபகப் படுத்துபவரும் கூட. மற்றவர்கர் (நிதானம் கடந்து விமர்சிப்பதால்) நடிப்பாய் எடுத்துக் கொண்டாலும் நான் இவ்விடயத்தில் நல்லெண்ணம் தான் கொண்டுள்ளேன். ஏன், என் போன்ற பல சகோதரர்கள் அப்படித் தான் நினைக்கிறோம். அல்லாஹ்வுக்காக இது சம்பந்தமாய் தவறு விட்ட அனைத்து கொள்கைச் சகோதரர்களையும் மன்னித்து விடுங்கள். அல்லாஹ் திருமறையில் மன்னிக்கச் சொல்வதால், இதன் மூலமாக மறுமையில் அந்த சகோதரர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்க இருப்பதை விட மேலான ஒன்றை தருவான். இல்லாவிட்டால் நீதமான அவன் பாதிக்கப் பட்டவனை பார்த்து இவ்வாறு மன்னிக்கச் சொல்லி இருக்க மாட்டானல்லவா? நமது பிரச்னை மறுமை ஸ்கோர் தானே?

Reply
Zain says:
August 4, 2010 at 1:29 pm
பாமர மக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய படித்தவர்கள் நீங்களே இப்படி சண்டையிட்டுக்கொள்ளும்போது….?? உண்மையில் வேதனையாகவே இருக்கிறது.
மெலளவி அவர்களே, ”அவர் அவளாக எழுத்திலும் நான் நானாக எனது குரலிலும்தான் அந்த அரட்டை நடந்தது. அதில் தான் எப்படி அந்த அரட்டை அமைய வேண்டுமென்று விரும்பினாரோ அதற்கேற்ப கேள்விகளைக் கேட்டார்.” என நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால் இது ஒரு ஸெட்டிங் என நீங்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. அல்லாஹ் ஒருவனே அனைத்தும் அறிந்தவன்!
பெண்ணாக நடித்துப் பேசிய நபர் இலங்கை தஹ்வாக் களத்திலிருந்து உங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற டிஎன்டிஜே யின் திட்டத்தின்படிதான் இந்த நாடகத்தை அரங்கேற்றினார் என நீங்கள் நினைக்கின்றீர்களா? அப்படியிருந்தால் அதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பீர்களா..??
செய்த பாவத்தை உணர்ந்து, வருந்தி, தவ்பாச் செய்த நீங்கள் ஏன் இனி தஹ்வாச் செய்வதில்லை என ஒபப்ந்தம் செய்தீர்கள்??? இந்த ஒப்பந்தத்தின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு அமானிதமாகத் தந்திருக்கின்ற ஆற்றல்களை அவனது தீனைப் பரப்புவதற்காக பயண்படுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்ததுபோல் அல்லவா இருக்கிறது….???
உங்கள் பதிலை எதிர்பார்ப்பதோடு உங்களது தஹ்வாப் பிரச்சாரம் தொடர்வதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

Reply
Abu abdullah dubai says:
August 4, 2010 at 11:27 am
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆடு கசாப்புக்காரனை நம்புவதுப்போல் பீ.ஜே வை நம்பி இருந்தீர்கள். வேண்டுமென்றே செய்த சதியில், உங்களை சிக்க வைத்ததால் நீங்கள் இப்படி தவரு செய்தீர்கள் என்று தெரிந்துக்கொண்டே,உங்களை கேவலப்படுத்தும் பீ.ஜே வை இன்னும் நீங்கள் நம்பிதான் இருக்க வேண்டுமா? பித் அத்தை எதிற்த்தால் மட்டும் போதாது. பித் அத்தை வளர்க்கும் பீ.ஜே வை எதிர்க்கவேண்டும்.

Reply
saneej says:
August 5, 2010 at 12:02 am
விமர்சிப்பில் கண்ணியம் வேண்டும் என்னருமைச் சகோதரனே! நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மட்டும் மூழ்குங்கள். விமர்சிப்பில் நிதானம் வரும். மறுமைக்குப் பயந்து யாரையும் விமர்சியுங்கள். இது கொள்கைச் சகோதரனான உங்களில் வைத்த அன்பில் சொல்லும் ஞாபகமூட்டல். கவலையில் இருக்கும் ஒருவரை இப்படியா தேற்றுவது? வழி நடத்துவது? நமக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாம்? ஏட்டிக்குப் போட்டி! இஸ்லாம் காட்டித் தந்த உயர் தர வழி காட்டல் எங்கே!!!!!!!!! இது உங்களுக்கு மட்டும் அல்ல. நான் உட்பட நம் அனைவருக்குமாய் தான் சொல்கிறேன். நான் இது போன்று சொன்னால் நீங்களும் ஞாபகமூட்டுவதை எதிர் பார்கிறேன். நானென்றால் மனிதன் தான்.

Reply
Abu Abdullah, Dubai says:
August 6, 2010 at 10:18 am
அஸ்ஸலாமு அலைக்கும். முஜாஹித் அவர்களை நான் கன்னியக்குரைவாக எழுத என்னம் எனக்கு இல்லை. நம்பிக்கை துரோகம் செய்பவர்களையும் நம்பி இருக்கும்போது,”ஆடு கசாப்புக்காரனை நம்புவதுபோல்” என்ற ஒரு வழக்கமொழியை தான் நான் சொன்னேன். இது அவர் மனதை புன்ப்பட வைத்திருந்தால், என்னை மன்னிக்கவும்.பீ.ஜே மோசமானவர் என்று நான் முன்பே அவரிடம் பேசி இருக்கிறேன். அவர் அப்போது பீ.ஜேவை பற்றி நல்லென்னம் கொண்டு இருந்தார்கள். பீ.ஜே வின் அந்த பதிலை கண்டு ,” முஜாஹித் அவர்களை இப்படி வர்னித்துள்ளாரே ” என்று நான் கோபம் அடைந்தேன். அந்த கோபத்தில் எழுதியது தான் இது. பித் ஆவை மட்டுமே எதிற்து, பீ.ஜே மேல் பாசம் வைத்திருந்தால், மக்களுக்கு ஹக் எதுவென்று தெரியாது.

saneej says:
August 6, 2010 at 11:08 pm
வஅலைக்குமுஸ்ஸலாம். நான் குறிப்பிட்டது பீ ஜே பற்றிய விமர்சிப்பின் விதத்தை. முஜாஹித் அவர்களைப் பற்றி அல்ல. நீங்கள் மட்டுமல்ல பார்க்கும் எவருக்கும் பீ ஜே வர்ணித்த விதத்தில் அழகிய வழிமுறை தெரிய வாய்ப்புக் குறைவு என்பது தான் எனது கருத்தும் கூட. ஏன் அறிஞர்கள் இப்படி நிதானம் இழக்கிறார்கள் என்பது சங்கடமாக தோன்றினாலும், அவரும் மனிதர் தானே!!!! அவர் விமர்சித்த பாணியில் நீங்களும் விமர்சித்தால் அது எப்படி சரியாகும்? நீங்கள் விமர்சித்த தோரணையில் எழுத அந்த இடத்தில் முஜாஹித் அவர்களுக்கு அனுமதி இருந்தும் அனுமதித்தை தவிர்த்து அழகிய முறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அது அழகிய முன்மாதிரி. அதையே உங்களிடம் எதிர்பார்கிறேன். பிடிவாதம் வேண்டாம். மனக்கசப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். கொள்கை வாதிகளின் உள்ளங்கள் பிளவு பட வேண்டாம். அவர்கள் விலக்கி நடந்தால், நாம் சேர்த்து நடப்போம். நமது எதிர்பர்ரப்பு மறுமை தானே???

Reply
faleelsrilanki says:
August 4, 2010 at 11:02 am
சகோதரா்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

முஜாஹித் அவா்கள் குறிப்பிட்டுள்ள ரஸ்மி என்பவா் வேறு ரஸ்மின் என்பவா் வேறு ரஸ்மின் என்பவா் இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறார் அவரைப் பற்றி அறிய ******************* / *********************** என்ற இணையத்தளத்தையும் ************@gmail.com என்ற மின்னஞ்சலையும் தொடா்பு கொள்ளவும்.இதை அறியாமல் உங்களில் சிலா் முஜாஹி்த் விஷயமாக ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி என்பவரை அவா்தான் ரஸ்மி என்று நினைக்கிறீா்கள் அதனை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியப் போதுமானவன்.

இவன்
பளீல் (இலங்கை) கத்தரிலிருந்து.

Reply
Ahmed Ruzik says:
August 4, 2010 at 9:55 am
//அதே நேரம் அந்த அரட்டையை டீ என் டீ ஜேயின் இலங்கைக் கிளை முன்னால் தலைவர் ரஸ்மிதான் தன்னை ஒரு பெண்ணாக “பஸீரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டு செய்தார். //

ஒரு முஸ்லீமை பவத்தில் விழ வைக்க வேண்டும் எற நோக்கத்தில் இப்படிப்பட்ட வேலைய் செய்வது மிகவும் ஓர் அசிங்கமான வேலையாகும்.

அதிலும் இதைச் செய்திருப்பது தமிழ் நாடு தவஹீத் ஜமாத் இலங்கைய சார்ந்த வர்களா !!! அதற்கு பீஜேயும் இணக்கம் தெரிவித்துமிருப்பது இன்னுமோர் அசிங்கமான வேலை

இப்படி பாவத்தை செய்வதற்கு தூண்டுவது சரியேயில்லை..!

Reply
asfar says:
August 4, 2010 at 8:01 am
stop this battle between you and PJ, both are not angles, we all are mankind, so we must give mistake including PJ according to our sunnath.

Reply
sharafaqsa says:
August 4, 2010 at 6:21 am
I was wondering when I was reading this article really TNTJ had shit job ithrough Rasmin how dame he can record a voice without his permission also he did with bad willing? Also I’m wondering TNTJ take this as a big issue Brother Mujahid is not angel he is human being also beware of almighty allah even to dame Rasmin or Brother PJ don’t have right to spread about his personal life I don’t know you all talking about Quran and Hadeed I don’t know under which context of prophet muhammed (pbuh) you record this chat and audio?

sharafaqsa

Reply
M.C.Kasim says:
August 3, 2010 at 11:06 pm
Assalamu alikum,

I think moulovi PJ should not take this chat incident as a trump to prevent the debate with molovi mujahid.
This chat incident is a different topic clearly as per the article, moulovi mujahid already asked tawba for this incident and corrected his mistake. So should not take this issue as tool to prevent the debate. come on! let’s both of you have a nice debate on sooniyam topic very soon.

Kasim

Reply
sharafaqsa says:
August 4, 2010 at 6:30 am
This is right whether mujahid Brother ask tawba or not this is not our matter that is between Allah and him? If allah accept this tawba what is going to happened to Brother Rasmin and PJ trying to spread his personal life there was a hadeed “ if you hide one person’s bad attitude allah will hide your bad attitude in front of the whole world in the here after (AHIR) I don’t know if you leak one person bad attitude so society purposely what allah will ? Rasmin I think he is angel if you leak others personal allah is enough BE WARE OF ALLAH HE IS GREATEST AND ALL KNOWS

Reply

0 comments:

Post a Comment