Thursday, August 19, 2010

மதானி கைதுக்கு பாக்கர் கண்டனம்



கேரள மார்க்க அறிஞரும் மக்கள் ஜனநாயக கட்சி
தலைவருமான அப்துல் நாசர் மதனி அவர்களை
சங்க்பரிவார சக்திகளின் தூண்டுதலின் பேரில்
கைது செய்துள்ள கம்னிஸ்ட் அரசை இந்திய
தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம் பாக்கர்
வன்மையாக கண்டித்தார். பாபா மசூதியை இடித்த
வழக்கில் முதன்மை குற்றவாளிகள் எல்லாம் கைது
செய்யபடாமல் சுதந்திரமாக உலவும் போது,
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அறுபதாவது
இடத்தில உள்ள மதானியை கைது செய்திருப்பது
உள்நோக்கம் கொண்டது என்றும் வழக்கை சந்திக்க
தயாராக உள்ள அவருக்கு , உடல் நிலையை கருத்தில்
கொண்டு மேல் முறையீடு தீர்ப்பு வரும் வரை
கைதை தவிர்த்திருக்க வேண்டும் என கூறினார்.

0 comments:

Post a Comment