Thursday, February 10, 2011

நாகூரில் இ.த.ஜ.வின் பொதுக்கூட்டம் + போராட்டம்

நாகூரில் இ.த.ஜ.வின் பொதுக்கூட்டம் + போராட்டம் 


நாகூரில் சச்சா முபாரக் போன்ற தர்காவாதிகளோடு த.த.ஜ.கரம் கோர்த்து உண்ணாவிரதம் [!?] போராட்டம் என ஒன்று கலந்து கொண்டு இருக்கும் போது அல்லாஹ்வின் அருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன் ஏகத்துவ பிரச்சாரத்தையும் , எதிர்ப்பாளர்களின் போராட்டத்தையும் ஒரு சேரச் செய்து கொண்டிருக்கிறது!


அந்த அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்று 10.2.11.மாலை 8 மணியளவில் 
நாகூர் ஆபிதீன் சதுக்கத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடை பெறுகிறது!  


இதில் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் 'நேர்ச்சைகள் யாருக்கு?' என்ற தலைப்பிலும் ,மற்றும் 'மவ்லீதும் மீலாதும்' எனும் தலைப்பில் ஆபித் அலி பிர்தவ்சியும் உரை நிகழ்த்துகின்றனர்

அது மட்டுமின்றி நாகூர் இ.த.ஜ. தலைவர மீது கொலை வெறி தாக்குதல் நடந்து அவர் மருத்துவ மனையில் எட்டு தையல்களுடன் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தாக்குதல்   நடத்திய தமிழக தர்கா பேரவை தலைவர் சச்சா முபாரக்கின் தம்பி மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் மீது  இன்று இரவுக்குள் நடவடிக்கை இல்லை எனில் இன்ஷா அல்லாஹ் நாளை மாலை 4 மணிக்கு காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தையும் அறிவித்துள்ளது!
  

0 comments:

Post a Comment