Monday, February 7, 2011

குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு!


குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
குவைத் மண்டல தலைமையகத்தில்  வாரம்தோறும் நடைபெற்று வரும், வாராந்திர  மார்க்க சொற்ப் பொழிவு நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை (04-02-2011) மாலை 7 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.   நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், அமல் செய்வதால் ஆதாயம் யாருக்கு...? என்ற தலைப்பில்  உரை நிகத்தினார். 
அவர் தனது உரையில், இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் உள்ளிட்ட கடமைகளை நாம் நிறைவேற்றுவதால், அல்லாஹ்வுக்கு எந்த அந்தஸ்தும் உயர்ந்து விடுவதிலை. மாறாக இக்கடமைகளை நிறைவற்றுவதன்  மூலம் பயனடைவது மனிதர்களே! மனிதனுக்கே இம்மை-மறுமைக்கு பயனளிக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment