பூவையில் சமூக தீமை எதிரப்பு தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பரப்புரை!
திருவள்ளுவர் மாவட்டம் பூவையில் சமூக தீமை எதிர்ப்பு தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம்.
மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது. சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை மாநிலம் முழுவதும் செய்து வருகிறது.
அந்த வகையில், திருவள்ளுவர் மாவட்டம் பூவை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன், மாவட்ட நிர்வாகிகள் ஆவடி ஃபாரூக், முஹம்மது ஆபீத் அலி, மவ்லவி அக்பர் அலி, ஆகியோர் சமூக தீமைகளின் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள். அவர்களின் ஆக்கப்பூர்வமான உரைகளால் மக்கள் பயன் அடைந்தனர்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
-மசூதா ஆலிமா.
0 comments:
Post a Comment