Friday, February 25, 2011


நியாயமின்றி ஒரு கொலை எங்கு நடந்தாலும், எவரால் நிகழ்த்தப் பட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத் தக்கதே! அதே நேரத்தில் அந்த கொலை பற்றிய செய்தியை வெளியிடும் ஊடகங்கள், அதன் மூலம் ஒரு சாரார் மீது தப்பெண்ணம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிடக் கூடாது. தினத்தந்தியில் வெளிநாட்டு செய்திகள் என்று ஒரு பகுதி உண்டு. இப்பக்கத்தில் இடம்பெறும்  செய்திகளை  தினத்தந்தி தனது சொந்த நிருபர்கள் மூலமாக சேகரித்து வெளியிடுகிறதா? என்பது நமக்கு தெரியாது. ஆனால் அப்பக்கத்தில் வெளியாகும் செய்திகளில், பல நேரங்களில் முஸ்லிம் நாடுகள் குறித்த  செய்திகள் மிகைப்பைடுத்தப்படுகிறதோ என்று எண்னும் வண்ணம் உள்ளன.  
 
பாகிஸ்தானில் ஒருவரை சிலர் சுட்டுக்கொன்றதாக ஒரு செய்தியை தினத்தந்தி தொடர்ந்து இரு நாட்களாக இப்பகுதியில் வெளியிடுகிறது. ஒரு கொலை செய்தியை வெளியிட்டால், கொலையாளியின் பெயரையும், அவரை கொன்றவர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். ஆனால் தந்தியோ,
 
''பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் சுட்டுக்கொலை'' என்று முதல் நாளும், அதே செய்தியை  
''பாகிஸ்தானில் இந்து வியாபாரி சுட்டுக்கொலை'' என்று இரண்டாம் நாளும் வெளியிடுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொல்லப்பட்டவர்கள் குறித்து இதுவரை எத்தனையோ செய்திகளை  வெளியிட்ட தினத்தந்தி, அப்போதெல்லாம் இந்து சுட்டுக்கொலை- முஸ்லிம் சுட்டுக்கொலை-கிறிஸ்தவர்   சுட்டுக்கொலை என்று போடவில்லையே! மாறாக, பாகிஸ்தானில் நடந்த ஒரு கொலையை ஒரு மத அடையாளத்தோடு , மறுபடி- மறுபடி செய்தியாக்குவது, பாகிஸ்தான் இந்து விரோத நாடு என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கிவிடும் என்பது தினதந்தி அறியாத ஒன்றா?
 
எனவே ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது, குற்றத்தைக் கண்டியுங்கள். குற்றவாளியை தண்டிக்க உறுதுணையாய் இருங்கள். ஆனால் எவனோ ஒருவன் செய்யும் செயலுக்கு மத அடியாளம் காட்டி, மத நல்லிணக்கத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் உங்கள் எழுத்துரு அமையவேண்டாம் என்பதே எமது அவா.
 

0 comments:

Post a Comment