Saturday, September 24, 2011

'உள் ஒதுக்கீடு' குறித்து கேள்வி எழுப்பினால் விவாத பூச்சாண்டியா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ததஜ வசூலித்த சுனாமி காசிலிருந்து உணர்வுக்கு இரண்டு லட்சம் உள்ளிட்ட பல லட்சங்களை சுருட்டியது வசூலித்த நோக்கத்திற்கு  முரணில்லையா என்ற கேள்விக்கு, சுனாமி கணக்கு வழக்குகளை பாக்கர் தான் கையாண்டார். எனவே அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று திரும்ப திரும்ப பொய்ஜே' யின் பினாமி புலம்பி வந்த  நிலையில்,

''மக்களிடம் சுனாமி நிவாரண நிதியை கேட்டு  பாக்கர் தான் கோரிக்கை வைத்தார்.பாக்கரை நம்பி மட்டும் தான் மக்கள் பணம் தந்தார்கள். அண்ணன் ஜமாத்துக்காக தரவில்லை. எனவே சுனாமி நிதிக்கும் அண்ணன் ஜமாஅத்திற்கும் சம்மந்தமில்லை என்று துணிவிருந்தால் அண்ணனின் இணையதளத்தில் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் பாக்கரின் சட்டையை பிடித்து உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட அனைத்திற்கும் பதில் கேட்க நாம் தயார் என்று அறைகூவல் விடுக்கிறோம். என்று நாம் கூறியிருந்தோம்.

இதற்கு மீண்டும் அர்ச்சனை வாந்தி எடுத்துள்ள இந்த பொய்யனின் பினாமி, தன்னையறியாமல் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது, ''நான் கடைசியா ஒன்னு சொல்றேன். சுனாமி காசும் சரி! வேறு எந்தக் காசும் சரி,.பீஜே உள்ளிட்ட எந்த தனி நபருக்காகவும் மக்கள் தருவது இல்லை.தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கத்துக்காக மட்டுமே தரப்படுகிறது' என்று  கூறியுள்ளது. 

அதையேதான் நாங்களும் சொல்கிறோம். ஜமாத்தை நம்பி  மக்கள் தந்த காசில் களவாடிய பத்திரிக்கைக்காக 2 லட்சம் களவாடியது ஏன் என கேட்டால், ஜமாத் பதில் சொல்ல வேண்டும். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தலைவராக உள்ள பீஜே, சுனாமிக் கணக்கு நூறு சதவிகிதம் 'ப்யூர்' என்று கூறி வருகிறார். சுனாமியில் அண்ணன் ஜமாஅத் ஊழலே செய்யவில்லை என்பதில் அசைக்கமுடியாத உறுதியுடன் இருக்கும் அண்ணன், உணர்வுக்கு சுருட்டிய 2 லட்சம் சரிதான் என்பதற்கும், சுனாமிக்காசில் ததஜ சீருடை  வாங்கியது கொண்டது சரிதான் என்பதற்கும், இன்னும் இதையொட்டிய அனைத்துக் 
குற்றச்சாட்டுகளுக்கும்  நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்ல வேண்டியது தானே?  அதை விடுத்து  பாக்கர் தான் 
பதில் சொல்ல வேண்டும் என்றால், அப்படியானால் பாக்கர் என்ற மனிதர் மட்டும் தான் ஜமாத்தா?
மேலும், பொய்யன் பீஜேயை காப்பாற்ற இந்த பினாமி, விவாதத்திற்கு தயாரா? என வெற்றுக் கூச்சலிடுகிறது. விவாதம் பண்ணுவதற்கு இதில் என்ன இருக்கு? நீங்க ஊரறிய வெளியிட்ட சுனாமிக் கணக்கில் ஒத்துக்கொண்ட 'உள் ஒதுக்கீடு' குறித்து கேள்வி எழுப்பினால் விவாத பூச்சாண்டியா? அட அதில் கூட நேரடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வர துப்பின்றி, தன்னைத்தானே 'பொறம்போக்கு' என்று கூறிக்கொள்ளும் பினாமியின் தளத்தில் விவாத 
அழைப்பா? நல்லாத்தான் இருக்கு உங்க வீரம்?
மீண்டும் சொல்கிறோம். பொய்யனின் பினாமியின் கூற்றுப்படி ஜமாத்தை நம்பி தந்த சுனாமி பணத்தில்  செய்து கொண்ட உள் ஒதுக்கீடு குறித்து அண்ணன் ஜமாஅத் பதில் சொல்ல வேண்டும். இல்லையேல், 'இவங்கள நம்பி பணம் குடுத்துட்டு கணக்கு கேட்டா, அமைப்பை விட்டு போனவங்கள கைய காட்டீருவாங்க' என்று இந்த சமுதாயம் புரிந்து கொள்ளும் இறைவன் நாடினால்.
-அப்துல் முஹைமின்.

0 comments:

Post a Comment