Thursday, September 22, 2011

பொய்யர் பீஜே வின் குறுக்கு புத்தியை உறுதிப்படுத்தும் குறுந்தகடு!

அல்லாஹ்வின் அழகிய திருநாமத்தால் ...

பொய்யர் பீஜே வின் குறுக்கு புத்தியை உறுதிப்படுத்தும் குறுந்தகடு!
குர் ஆண் ஹதீஸ் என்ற இந்த சத்திய கொள்கை தமிழகமெங்கும் வேறு பிடிக்க
பொய்யர் பீஜே மட்டும் காரணமில்லை. அவரோடு அன்றைக்கு இருந்த அறிஞர்களும்
முக்கிய காரணமாகும்.தன்னுடன் இருந்த அறிஞர்கள் தனக்கும் தனது
ஆணவத்துக்கும் அடிபணியாத ஒரே காரணத்துக்காக ஆக்கிரமித்து வைத்துள்ள
அமைப்பிலிருந்து அவர்களை வெளியேற்றினார் பொய்யர். இறுதியாக
வெளியேற்றப்பட்டவர் தான் சைபுல்லாஹ் .



பொய்யர் பீஜே வின் சூழ்ச்சி:

சைபுல்லாஹ்வின் மீது காழ்ப்புணர்வின் உச்சியில் இருந்த பொய்யர் பீ ஜே
அவருக்கு எதிரான சூழ்ச்சிக்கான வலையை பின்னிவிட்டு கலந்துரையாடல் என்ற
பெயரில் ஓர் அழைப்பு விடுத்துள்ளார் .ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள சென்ற சைபுல்லாஹ்வுக்கு அதிர்ச்சி.காரணம்
அவருக்கே தெரியாமல் அறையில் "கேமரா" பொருத்தப்பட்டுள்ளது.பொருத்தப்பட்ட
கேமராவை அகற்றினால் தான் நான் பேசுவேன் என்று சைபுல்லாஹ்
கொந்தளிக்கிறார். ஆனாலும்  கேமராவை நீக்காமல் தனது வாய் வித்தையால்
சைபுல்லாவை சமாதானப்படுத்தி தனது வலையில் சிக்க வைத்து விடுகிறார்
பொய்யர் பீ ஜே .


”நம் மத்தியில் போட்டு பார்க்க தான் இந்த பதிவுகள்” என்று கூறிவிட்டு
இன்றைக்கு  சைபுல்லாவுக்கு எதிராக அதை திசை திருப்புகிறார்.

இருவருக்குமிடையே நடைபெறும் ஒப்பந்தமாக இருந்தாலும் கலந்துரையாடலாக
இருந்தாலும் அதன் ஷரத்துகள் ஏற்க்கனவே சம்மந்தப்பட்டவருக்கு
தெரிவிக்க வேண்டும் .ஆனால் சைபுல்லாஹ்வுக்கு அறிவிப்பு செய்யாமலேயே
உரையாடலை பதுவுசெய்ய கேமரா  வைத்தது கண்டிக்கத்தக்கது.மனிதன் என்ற
முறையில் கூட குறைய வார்த்தைகள் ஏதேனும் வெளிப்பட்டுவிடுமேயானால்
அதைபதிவு செய்து பாதுகாத்து  சம்மந்தப்பட்டவருக்கு எதிராக சமயம் பார்த்து
 அதை திருப்புவதற்கு தான் இந்த பொய்யர் முயன்றுள்ளார்.அன்று முயன்றதை
இன்று சைபுல்லாவுக்கு எதிராக அந்த சீடி வெளியிட்டு நிரூபித்தும் விட்டார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் அவர்களுக்கும்  இதே வழிமுறையை
பின்பற்றி தான் அநீதி இழைத்தார் இந்த பொய்யர்.பாக்கர் கலந்துரையாடலின்
போது  எடுக்கப்பட்ட பதிவுகளை "பாக்கர் விசாரணையில் போது என்று
தலைப்பிட்டு சமுதாயத்தில் பரப்பி பொய்யர் தப்ப முயன்றதை இங்கு நினைவு
கூறுகிறோம்.

சைபுல்ல்லாவுக்கு எதிரானவை என்று  பொய்யர் பீஜே வெளியிட்டுள்ள அந்த
பதிவுகள் உண்மையில் இந்த பொய்யருக்கு தான் எதிராக இருக்கிறது என்பதை
கவனமாக  பார்ப்பவர் எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.

வெளிப்பட்டது உண்மை :

ததஜ வை தனது ஐம்புலன்களால் அடக்கியாள்பவர் பொய்யர் பீஜே தான் என்பதை பல
முறை நாம் நிரூபித்தும் அவரது அபிமானிகளில் சிலர் ஏற்க்க மறுத்து,கண்டபடி
மெயில் அனுப்பி நம்மை திட்டி தீர்த்தனர்.ஆனால் இந்த கலந்துரையாடலில் ததஜ
வை அடக்கியாள்பவர் பொய்யர் பீஜே தான் என்ற உண்மையை போட்டு உடைத்து
விட்டார் சைபுல்லாஹ்.ஆம்!

சைபுல்லாஹ் அவர்கள் ஊரில் இல்லாத நேரம் பார்த்து தனது அமைப்பின் கிளையை
நிறுவியிருக்கிறார் பொய்யர் பீஜே .பொய்யரின் இந்த நடவடிக்கைக்கு
கலந்துரையாடலில் கண்டனத்தை பதிவு செய்கிறார் சைபுல்லாஹ் .
இதனால் கோபமடைந்த பொய்யர் கடைய நல்லூரையே உங்கள் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொள்ள விரும்புகிறீரா? என்று வினா தொடுக்க,தமிழகத்தையே உங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துள்ளீர்களே! என்று உண்மையை போட்டு உடைத்து விட்டார்
சைபுல்லாஹ்.இதற்க்கு மறுக்க திராணியற்ற தீயவர் பீஜே எந்த தம்படியும் என்
பெயரில் இல்லை என்று கூறுகிறார்.சைபுல்லாஹ்வோ  அதிகாரம் குறித்து கேள்வி
எழுப்புகிறார்.பொய்யர் பீ ஜே வோ சொத்து குறித்து பதில்
தருகிறார்.சிந்திபோர்க்கு மட்டுமே இதன் மூலம் பொய்யரை அடையாளம் காண
முடியும்.

மிரட்டும் பொய்யர்:

அடுத்து மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிக்காக வாங்கிய நிலத்தை தனது அமைப்பின்
பெயரில் மாற்றித்  தருமாறு பொய்யர் பீஜே நிர்பந்திக்கிறார்.எதற்க்காக
அந்த நிலம் வாங்கப்பட்டதோ அதன் பெயரில் தான் பதிவு செய்ய பட வேண்டும்
என்று திட்டவட்டமாக கூறிவிடுகிறார் சைபுல்லாஹ்.இடம் வாங்குவதற்காக
நன்கொடை கொடுத்தவர்கள் நாளை வழக்கு தொடர்ந்தாலோ பிரச்சனை செய்தாலோ
நாங்கள் வரமாட்டோம் என்று மிரட்டுகிறார் பொய்யர்..மாறாக நாமே அந்த
காரியத்தை செய்வோம் என்று வெளிப்படையாக கூறாமல் சூசகமாக
உணர்த்துகிறார்.



தனது வார்த்தை ஜாலத்தால் சைபுல்லாஹ்வை வளைக்க முடியாததால்
முபாரக் பள்ளிக்கும் ததஜ வுக்கும் ஏற்க்கனவே  தொடர்பில்லை எனவே ததஜ வின்
பெயரில் உங்களிடம் உள்ள சொத்துக்களின் ஆவணங்களையாவது  கொடுத்துவிடுங்கள்
என்ற கோரிக்கையை  வைக்கிறார்.இந்த கோரிக்கைக்கு சைபுல்லாஹ் செவி
சாய்த்தும்,"நீங்கள் ஆவணங்களை ஒப்படைக்காத பட்ச்சத்தில் அத்து மீறி
முபாரக் பள்ளியை கைப்பற்றுவோம் .பிறகு ஜாக்கிர்க்கும் நமக்கும் ஏற்ப்பட்ட
நிலைதான் இங்கேயும் ஏற்ப்படும் என்றும் மிரட்டுகிறார்.ஆக ஜாக்கோடு ததஜ
வுக்கு ஏற்ப்பட்ட மோதலுக்கும் இவரே காரணம் என்பதை புரிந்துக்கொள்ள
முடிகிறது.

கொக்கரித்த அல்தாபி:

பொய்யர் பீஜே தெளிவாகவே சொல்கிறார் ததஜ வுக்கும் மஸ்ஜிதுல் முபாரக்
பள்ளிக்கும் சிறிதும் தொடர்பில்லை என்று .ஆனால் அல்தாபியோ அன்று பள்ளியை
மீட்டெடுப்போம் என்று கொக்கரித்தது ஏன்?எப்படி துணிச்சல் வந்தது? அடுத்தவன் சொத்தை அபகரிப்பது என்பது இவர்களுக்கு கை வந்த கலையாச்சே!
ஆக சைபுல்லாவுக்கு எதிராக இந்த பொய்யர் வெளியிட்ட சீடி அவருக்கு தான்
எதிராக இருப்பது மட்டுமல்லாமல் அவரது குறுக்கு புத்தியை உருதிப்படுத்துவதாகவே உள்ளது  என்பது தான் உண்மை. இனியும் பொய்யர்களின் புரட்டு வாதங்களை புத்திவுள்ளவர்கள் புரிந்துக்கொள்ளவில்லையானால் மீள்வது கடினமே!

- முபாரக்

0 comments:

Post a Comment