Monday, September 5, 2011

இதஜ ராமநாதபுரம் சார்பாக பெருநாள் தொழுகை மற்றும் பித்ரா விநியோகம்.




இதஜ ராமநாதபுரம்  சார்பாக பெருநாள் தொழுகை மற்றும் பித்ரா விநியோகம்.

இன்று (31.08.2011) ஈதுல் ஃபித்ர் எனும் ஈகை திருநாள் தொழுகை நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழக்கரை நகர் கிளை சார்பாக கீழக்கரை 500 பிளாட் பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குத்பா பேருரையை இராமேஸ்வரம் கடாஃபி அவர்கள் நிகழ்த்தினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக 25 ஆயிரம் ரூபாய் மதிப்பலான ஃபித்ரா பொருட்கள் கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழை மற்றும் புதியதாக இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் முஸம்மில்ஹார், ஹாஜா, கமால் நாஸர், அணீஸ் ஹாஜா உள்ளிட்ட சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
-அபூ அவ்ன்.

0 comments:

Post a Comment