தங்கள் பைலாவை தாங்களே மீறும் தக்ளித் ஜமாஅத்
பைலாவுக்கு முரணாக வெளிநாட்டு விருதுகளை பெறும் அண்ணன் ஜமாஅத்.
7. வெளிநாட்டு விருதுகள்:
இவ்வமைப்பு எந்த வெளிநாட்டு அரசிடமிருந்தோ நிறுவனத்திடமிருந்தோ எந்த பொருளாதார உதவியோ, பரிசோ, விருதோ பெறக்கூடாது.
இது அண்ணன் ஜமாத்தின் பைலாவில் உள்ள விதி. ஆனால் பைலா என்பது 'சம்பிரதாயத்திற்காக' உண்டாக்கப்பட்டதுதான் என்பதையும், நாங்கள் நினைத்தால் பைலாவை காற்றில் பறக்கவிட்டு பட்டங்களை பாய்ந்து பெறுவோம் என்பதற்கு அண்ணன் ஜமாஅத் வெளிநாட்டில் வாங்கிய விருதுகளில் சில உங்கள் பார்வைக்கு;
அபுதாபி இரத்த வங்கியின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் விருது பெற்றது. |
கிங் ஃபஹத் மருத்துவமனை சார்பாக வழங்கப்படும் விருதை பெறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – தம்மாம் மண்டலம் |
அபுதாபி ரத்த வங்கியின் விருது 2009 |
இதுக்கு பிறகும் அண்ணன் ஜமாஅத், பைலாவை உருவாக்கி பக்காவாக செயல்படும் அமைப்பு என்று நீங்கள் நம்பவேண்டும். இல்லையேல் தடம்புரண்டவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறக்கூடும்.
'[பாக்கரை வெளியேற்ற இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது ! என காமராஜர் அரங்கப் பொதுக் குழு நாடகத்தின் போது 'நாம உருவாக்கின பைலாவை நாமலே பின் பற்றலனா வேற யாரும்மா பின்பற்றுவான் ? தமுமுகவை பார்த்து பைலாவை மீறிட்டானுங்க பாருன்னு நாம சொல்லிட்டு நாமலே மீறலாமா?' என்றெல்லாம் பி.ஜே. பேசியதும் பின்னர் தானே அதை மீறி பதவிக்கு மூன்றாம் முறையாக முடி சூட்டிக் கொண்டதும் யாருக்கும் நினைவுக்கு வந்து விடக் கொடாது ]
Posted in:
0 comments:
Post a Comment