Friday, September 16, 2011

[இவரை[PJ]த் தெரிந்து கொள்ளுங்கள்!] பொய்யர் பீ ஜே வுக்கு இரண்டு கேள்விகள்.


அல்லாஹ்வின் அழகிய திருநாமத்தால் .....

கடந்த சில வாரங்களாக சகோ:முகவை அப்பாஸ் அவர்கள், பொய்யர் பீ ஜே வின் மனோ இச்சைகளால் மார்க்க சட்டங்கள் முன்பும்  பின்பும் எப்படியெல்லாம்  மாற்றப்பட்டன என்பதை தக்க சான்றுகளுடன் "அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் சமூதாயத்தின் பார்வைக்கு எடுத்துரைக்கப்பட்டு அவருடைய மார்க்க தடுமாற்றத்தை அடையாளப்படுத்தி வருகிறார்.

"தான்" தடுமாறவில்லை நிதானமாகத் தான் இருக்கிறேன்! என்பதை உரிய சான்றுகளுடன் உரிய முறையில் விளக்கமளிப்பதிளிருந்து விலகி வெருண்டோடி வருகிறார் பொய்யர் பீ ஜே .இவரது ஓட்டமே இவரது தடுமாற்றத்தை உறுதி செய்ய போதுமானதாகும்.

சமுதாயத்தின் முன்னிலையில் சரிந்து கிடக்கும் தனது செல்வாக்கு மென்மேலும் சரிந்து விடாமலிருக்க "அப்பாசின் லீலைகள் "என்ற தலைப்பில் ஒரு உண்மையுடன்  பல பொய்களை புனைந்து  ஒரு ஆபாச தொடரை எழுதி வருகிறார்.

திரைப்பட இயக்குனரும், ஒரு கவிஞனும் தன்னிடம் தோற்று விடும் அளவுக்கு தொடரின் இடை இடையே  காம கவிதைகளை படைத்தும் கச்சிதமாக கதைகளை அமைத்தும் தனது கற்பனை காவியத்தின் கதாநாயகனாக அப்பாஸை அமைத்தும் அதை  நீல தளத்தில் பதிந்தும்  தனது அபிமானிகளை திருப்பதிப் படுத்தி வருகிறார்.சுருக்கமாக சொல்வதானால் பொய்யன்தளத்தை இயக்கி வருகிறார்.

சிறிதும் இறையச்சம் இல்லாத ஒரு மனிதராகவே  இவர் இருக்கவேண்டும். என்பதை தான்  இவரது  இந்த நடவடிக்கைகள் நமக்கு காட்டுகிறது.உண்மையிலேயே இறையச்சம் உள்ளவராக இவர் இருந்திருந்தால் எதற்கு விளக்கமளிக்க வேண்டுமோ அதற்க்கு மட்டும்  விளக்கமளித்திருப்பார் . மாறாக இவர் ஒரு "கோழை" என்பதால் தான்  தன்னை தற்காத்துக்  கொள்ள குறுக்கு வழியில் பயணம் செய்கிறார்.
குறுக்கு வழியில் பயணம் செய்வதென்பது இவருக்கு ஒன்றும் புதிதும் அல்ல!

இலங்கையை சேர்ந்த முஜாஹித் என்ற அறிஞர்,இந்த பொய்யரின் மார்க்க முரண்பாடுகளை சுட்டிக்காட்டி இவரது தோலை உரிப்பதற்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்த போது அவரிடமிருந்து தப்பி ஓடி ஒளிய இவர் கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.

அபூசுமையா என்ற சகோதரர் இவரது முரண்பாடுகளை சான்றுகளோடு சுட்டி காட்டிய பொழுது அவரிடமிருந்தும் தப்பி ஓடி புகழிடம் தேட  கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பாக்கர் அவர்கள் ததஜ விலிருந்து விலகியதற்கு முழுக்க முழுக்கமுதல் காரணம் பொய்யர் பீஜே தான் என்று சான்றுகளுடன் சமுதாயப் பார்வைக்கு சமர்ப்பித்த பொழுது அதிலிருந்து தப்பி ஓடி புகழிடம் தேட கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த வரிசையில் தான், தற்பொழுது  அப்பாஸ் தொடங்கி இருக்கும் "பீ ஜே அன்றும் இன்றும்"என்ற தொடரிலிருந்து ஓடி ஒளிந்து தன்னை தற்காத்துக்கொள்ள கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.
இனி இந்த பொய்யரை நோக்கி இரு கேள்வியை கேட்க்கின்றோம் .
1 ஆதமுடைய மகன் தவறு செய்பவன் என்பது அடிப்படை .தான் செய்த சிறிய பெரிய தவறை எண்ணி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடி அதிலிருந்து ஒரு மனிதன் விலகி விடுவானேயானால் அந்த தவறை சமுதாயத்தில் பரப்பி சுய ஆதாயம் அடைய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

2 சிறு தவறையும் யூகத்தின் அடிப்படையில்,தனது வார்த்தை வித்தைகளால் மிகைப்படுத்தி கூறுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் குர் ஆண் மற்றும் நபி ஸல் அவர்களின் வாழ்வியல் முறையிலிருந்தும் உறுதியாக நிருபித்து விட்டு தனது பணியை தொடரட்டும்.இல்லையேல் இவரது பேச்சும்,இவரது எழுத்தும் இவருக்கு எதிராக சாட்சி சொல்லும்  அந்த நாளை குறித்த இறைவசனத்துக்கு அஞ்சி அடங்கட்டும்.
“மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)
நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான். 78:40

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. 6:51
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 7:8

நன்றி;- முபாரக்.

0 comments:

Post a Comment