Sunday, September 4, 2011

பொடா' பாணியில் புலம்பும் பொய்யனின் பினாமி!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்விஅல்லாஹ்வின் மீது ஆணையாக முகவைத்தமிழன் உங்களின் நிர்வாகி இல்லை. உங்களுக்கும் அவருக்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லை என்றும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள். இதை நாங்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறோம் என்று பொய்யன் பீ[டி]ஜே கூறியுள்ளதே? அவர்கள் கேட்டபடி நீங்கள் சத்தியம் செய்யலாமே?

-ஃபிர்தவ்ஸ் மயிலாப்பூர்.

பதில்; குற்றச் சாட்டிற்கு உள்ளான  ஒருவரை ஒரு 
அமைப்போடு சம்மந்தப்படுத்தி விமர்சிப்பதாக இருந்தால் அவர் அந்த அமைப்பில் நிர்வாகிதான் என்று சந்தேகமற நிரூபித்து விட்டு விமர்சிக்க வேண்டும். இதுதான் அடிப்படையும்  நியாயமும் கூட. ஆனால் பொய்களை மட்டுமே பரப்புவதற்காகவே தொடங்கப்பட்டுள்ள அந்த மஞ்சள் தளத்திற்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. உங்களின் இந்த கேள்விக்கு பொய்யன் பீஜேயின் பினாமியின் பாணியில் பதிலளிப்பதாக இருந்தால், தொண்டியை சேர்ந்த ஜைனுல் ஆபிதீன் என்பவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி வருகிறது. உடனே நான், கைது செய்யப்பட்டவர் அண்ணன் ஜமாத்தின் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன்  என்று ஒரு அவதூறை அடித்து விடுகிறேன். உடனே இந்த பினாமி, கைது செய்யப்பட்டவர் எங்கள் ஜமாத்தின் மாநிலத் தலைவர் இல்லை என்று  அல்லாஹ்வின் மீது ஆணையிடத்  தயார். நீ தயாரா? என்று நமக்கு சவால் விடுகிறது. உடனே நாம்,
 
ஆணையிடத் தயார் என்று சொல்ல வேண்டாம். அல்லாஹ்வின் மீது
 
ஆணையாக கைது செய்யப்பட்ட ஜைனுல்ஆபிதீன்உங்களின் தலைவர்
 
இல்லை. உங்கள் அமைப்பிற்கும்  கைதுசெய்யப்பட்டவருக்கும்
 
எந்தவகையிலும் தொடர்பு இல்லை என்றும்அல்லாஹ்வின் மீது

சத்தியம் செய்து சொல்லுங்கள். இதை நாங்கள்ஒப்புக்கொண்டு
 
மன்னிப்புக் கேட்கிறோம்.   

என்று நாம் சொன்னால்  இந்த பொய்யனின் பினாமி ஒத்துக் கொள்ளுமா?  நாங்கள் எதை  வேண்டுமானும் சொல்வோம். யார் மீது வேண்டுமானாலும் அவதூறை பரப்புவோம். ஆனால் அதற்கு நாங்கள் ஆதாரம் தரமாட்டோம். நாங்கள் யார் மீது குற்றம் சுமத்துகிறோமோ அவர்கள் தான் தங்களைத் தாங்களே  குற்றவாளி இல்லை என்று நிரூபித்துக் கொள்ள  வேண்டும் என்று 'பொடா' பாணியில் இந்த பொய்யனின் பினாமி புலம்பி திரிவதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமலில்லை.
 
-அப்துல் முஹைமீன்

0 comments:

Post a Comment