தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொதுச்செயலாளர் நெல்லை கண்ணன்;
''ஜாபர் சேட் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமியர். அதனால்தான் அவருக்கு இடையூறுகள் தரப்படுகின்றது என்கிறார் கலைஞர்.
இஸ்லாமியர்களுக்கு தான் ஆதரவானவர் போன்ற தோற்றத்தையும், எதிரணியில் இருப்போர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துவது உங்களுக்கு வழக்கமாகிப் போயிருக்கிறது. உங்கள் ஆட்சியில் ஏராளமான அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதை அந்த இஸ்லாமிய மக்கள் மறந்து விடுவார்களா?
திமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான். இவரும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர் ந்தவர்தானே. இவரை நீங்கள் தொடர்ந்து களங்கப் படுத்திக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியாதா என்ன?
சிறுபான்மை இன இஸ்லாமிய மக்களின் மீது அன்பு கொண்ட நீங்கள், வாஜ்பாய் தலைமையிலான பாஜகவில், இரண்டு வருடம் படுக்கையில் இருந்த மருமகன் மாறனை அமைச்சராக தொடரச் செய்தீர்களே... அது எப்படி..?
0 comments:
Post a Comment