கடைய நல்லூரில் இ.த.ஜ.வின் மாபெரும் பொதுக் கூட்டம்.
நேற்று 11.9.11 மாலை கடைய நல்லூர் காயிதே மில்லத் திடலில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்
மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடை பெற்றது .
இதில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் ' பரிசுத்தவான்கள் யார் ? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் . தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என கூறிக் கொண்டு சொர்கத்திற்கு உரிமை கொண்டாடும் பரிசுத்த ஜமாத்தினரின் செயல் அல்லா கூறும் வசனகளுக்கும் ஹதிஸ்களுக்கும் எதிரானது என்பதை எடுத்து உரைத்தார் .
அடுத்து பேசிய மாநில செயலாளர் சமுதாய ஒற்றுமையும் சைத்தானின் பிரிவினையும் எனும் தலைப்பில் ஆதம் தொடங்கி இன்று வரையில்ன எல்லாப் பிரிவினைகளுக்கும் அல்லா கூறுவது போல் பொறாமையே காரணம் என்பதை விளக்கினார் . தற்போது பள்ளிவசல்களுக்க்காகவும் , இயக்க சொத்துக்களுக்காகவும் கொள்கை சகோதரர்களுக்கு மத்தியில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவே காரணம் என்று கூறியதோடு நடக்கும் அத்தனை பிரிவினைகளுக்கும் பின்னணியில் பி .ஜே . என்ற ஒரு மனிதரின் மனோ இச்சை இருப்பதை காரண காரியங்களோடு விளக்கினார்.
இறுதியாக பேசிய எஸ் .எம் .பாக்கர் செப்டம்பர் 11 இல் தொடங்கி அண்ணா ஹசாறேவை பிடித்து சிறை வாசிகள் பிரச்சனையில் கொண்டு வந்து அற்புதமான உரை நிகழ்த்தினார் . அவரது உரையை மக்கள் மிகவும் ரசித்து கேட்டனர் . ஏரளமான பொது மக்கள் ஆங்காங்கே நின்று கொண்டு இந்த உரையை கேட்டது குரிப்பிடத்தக்கது .
0 comments:
Post a Comment