Monday, September 26, 2011

விவாதம்! விவாதம்! என்று வெற்று கூச்சலிடும் பொய்யர்! !

 விவாதம்! விவாதம்! என்று வெற்று கூச்சலிடும் பொய்யர்! !

    அல்லாஹ்வின் அழகிய திருநாமத்தால்...

சர்ச்சைக்குரிய ஒரு காரியத்தை குறித்து இரு தரப்பினர் "வாதம்" செய்ய
முன்வருவார்களேயானால் அவர்களின் நோக்கம் முழுக்க முழுக்க உண்மைகளை
வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கவேண்டும் .மாறாக
தங்களின் வாதத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் சத்தியத்தை மூடி
மறைக்கும் விதமாகவும் இருந்து விடக் கூடாது. அதாவது தனது திறமைகளை
நிறுவுவதற்கு அந்த வாதக்களத்தை பயன்படுத்திக் கொள்ளக்கூடது.

ஆனால் பொய்யர் பீஜே வின் வாதங்களில் பல "நான் வாதம் செய்வதில் வல்லவன்
"என்பதை நிறுவும் முகமாகத்தான் அமைந்திருக்கும். எதிர்த்தரப்பினரின்
நியாயமான சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதிலை விவாத
அரங்கத்திலேயே பொய்யரிடம் எதிர்ப்பார்க்க முடியாது.ஜமாளியுடன் நடந்த
விவாதங்களில் இத்தகைய நிலையை நாம் காணலாம்.

வாதத்தில் ஈடுபடுவோரின் பேச்சு திறமை தான் வெற்றியையும் தோல்வியையும்
நிர்ணயம் செய்கிறது.மாறாக அங்கு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் அல்ல
என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் வாதத் திறமை உள்ளவரிடம் உண்மைகள் மட்டும் இருக்கும் என்பதற்கும்
எந்த சான்றும் கிடையாது.அது போல் வாதத் திறமையற்றவரிடம் பொய்கள் மட்டுமே
இருக்கும் என்பதற்கும் எந்த சான்றும் கிடையாது.மாறாக வாதத் திறமை உள்ளவன்
சத்தியத்தையும் அசத்தியமாகவும்,அசத்தியத்தையும் சத்தியமாகவும் காட்டுவான்
என்பதற்கு தான் நபி மொழியில் சான்றுகள் இருக்கிறது.



[என்னிடத்தில் ஒரு வழக்கை கொண்டு வருகிறீர்கள்! உங்களில் வாதத் திறமை உள்ளவர் தீர்ப்பை பெற்று செல்கிறார்! அவர் பெற்றது தீர்ப்பல்ல நரக நெருப்பின் கங்கு!-நபி மொழி ]

தன்னிடம் உள்ள உண்மைகளை நிருபிப்பதற்கு "வாதம்" தான் சிறந்த வழி என்று
எண்ணுவதும் சரியல்ல.இந்த நேரடி வாதத்தில் பெரும்பாலும் வெற்றி என்பது
எட்டாக் கனி தான்.இரு சாராரிடமும் இறுதியில் சில கேவிகள் மிச்சமுள்ள
நிலையில் தான் விவாதக் களம் முடிவுறும்.வாதம் முடிந்தவுடன் இருவரும்
கூறிக்கொள்வர் நாம் தான் வெற்றியாளர்கள் என்று.இது தான் கடந்தகால வாத
நிகழ்வுகள் எடுத்துரைக்கும் உண்மைகள்.

நடந்த நேரடி வாதங்களை குறுந்தகட்டில் பதிவு செய்தவர்கள் வாதம்
முடிந்தவுடன் அதைப் போட்டு பார்த்து தனக்கு சாதகமானதை எடுத்துக்கொண்டு
பாதகமானதை நீக்கி விடுகின்றனர்.பின்பு அதை சமுகத்தில் பரப்பி நாம் தான்
வெற்றி பெற்றோம் என்று முழக்கமிடுகின்றனர்.இந்த விஷயத்தில் நமது
ஆக்கத்தின் கதாநாயகனை (பொய்யர் பீஜே )அடித்துக்கொள்ள எவருமில்லை.

எனவே  வாதம்! வாதம்!என்று பெட்டை கோழியாக கொக்கரித்துக் கொண்டு இருப்பதை
விட்டுவிட்டு எழுத்து பூர்வமாக தற்பொழுது நடக்கும் வாதத்திலிருந்து ஓடி
ஒளிய புகழிடம் தேடவேண்டாம் என்று பொய்யரிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

எழுத்துபூர்வ விவாதத்திலிருந்து அசத்தியவாதிகள் யாரும் தப்பித்து
விடமுடியாது.இதில் ஈடுபடுபவர்கள் தனது வாதத்தை கூட்டவும் முடியாது!
குறைக்கவும் முடியாது! மறுக்கவும் முடியாது.அவரவர் கருத்துக்களை
பாதுகாப்பதற்கு ஏற்றதும் இதுவே.

எனவே வாதம் !வாதம் !என்று வெற்று கூச்சலிடுவதை விட்டு விட்டு  தன்னிடம்
சரக்கிருந்தால் எழுத்துபூர்வ விவாதத்தின் மூலம் தான் உண்மையாளன் என்பதை
நிரூபிக்க பொய்யர் பீஜே முன்வரட்டும்.இல்லையேல் மூலையில் முடங்கட்டும்.

-முபாரக்

0 comments:

Post a Comment