Monday, September 19, 2011

ராயபேட்டை மருத்துவமனையில் இ.த.ஜ. தஃவா!

ராயபேட்டை மருத்துவமனையில் இ.த.ஜ. தஃவா 







இன்று உங்களில் நோயாளியை சந்தித்தவர் யார் ? இன்று உங்களில் ஏழைக்கு உணவளிதவர் யார்? என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் தோழர்களிடம் கேட்பார்கள் எனும் செய்தியின் அடிப்படையில் இந்த இரு நன்மைகளோடு தஃவா எனும் நன்மையையும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மருத்துவமனை தஃவா குழு செய்து வருவது அறிந்ததே!

கடந்தவாரம் ஞாயிறு அன்று மாநில செயலாளர் செங்கிஸ் கான் தலைமையில் பத்துப் பேர் அடங்கிய தஃவா குழு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களிடம் இறைவனைப் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும்  எடுத்து சொல்லி அழைப்புப் பனி செய்தனர். 

அல்லலுற்று மருத்துவமனையில் படுத்துள பல்வேறு மதங்களை சேர்ந்த  நோயாளிகள் நாம் சொல்லும் செய்தியை செவி மடுத்து கேட்பதோடு இஸ்லாத்தை உள்வாங்கிக் கொள்ளும் மருத்துவ மனை தஃவா உண்மையிலேயே உள்ள நிறைவை தருகிறது.  

0 comments:

Post a Comment