Sunday, September 18, 2011

மோடியின் தோழி ஜெயலலிதாவின் தொடர் முஸ்லிம் விரோதப் போக்கு!


மோடியின் தோழி ஜெயலலிதாவின் தொடர் முஸ்லிம் விரோதப் போக்கு!

முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று மகத்தான வெற்றி பெற்று மிருக பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள ஜெயலலிதா மீண்டும் தன்னுடைய இந்துத்வா பாசத்தை வெளியில் காட்ட ஆரம்பித்து விட்டார் என்பதை அவரது செயல்கள் உணர்த்துகின்றன.
 இனப் படுகொலை நடத்தி, முஸ்லிம்களை அழித்தொழித்த  மோடியை,  உலக நாடுகள் எல்லாம் விசா மறுத்து விரட்டியடித்த கேவலத்தை மறைத்து,  சாத்தான் வேதம் ஓதுவது போல் உலக அமைதிக்கு உண்ணா விரதம் எனும் கேலிக்கூத்தை அரங்கேற்றும் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தன் நாடாளுமன்ற  உறுப்பினர்களை அனுப்பி ஆதரவு தெரிவித்துள்ளது முஸ்லிம்களை முகாம் சுளிக்க வைத்துள்ளது.   
முஸ்லிம்களை கொன்று ஒழிப்பதை தான் முழு முதல் கொள்கையாக கொண்டுள்ள மோடியோடு ஜெயலலிதா நட்புறவு கொண்டாடுவதை முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள் என்பதை அவருடைய பதவி ஏற்பு விழாவில் மோடி வருகையை எதிர்த்து த.மு.மு.க. இ.த.ஜ.  போன்ற இயக்கங்கள் புறக்கணித்தும் கூட இதை ஜெயலலிதா உணர்ந்தவராக இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் வரிசையாக நிறைவேற்றும் ஜெயலலிதா முஸ்லிகளின் கோரிக்கைகளான இட ஒதுக்கீட்டை குளறுபடிகளை சரி செய்து , அதிகரித்து தருவதாக சொன்னதையும்
கட்டாய திருமண பதிவு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி சரி செய்வதாகவும் வாக்குறுதி அளித்ததையும் இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏற்கனவே  முஸ்லிம்களிடத்தில் அதிருப்தியை  ஏற்படுத்தி உள்ளது.
 
தி.மு.க வினரால் ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களை மீட்பதில் காட்டும் அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட முஸ்லிம் சமுதாயத்தின் வக்பு சொத்துக்களை மீட்பதில் காட்டவில்லை என்பதும் 'மீட்போம் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்ததோடு சரி'  என்ற மனக் குறையில்  முஸ்லிம்கள் உள்ளனர்.
மேலும் மரியம் பிச்சை மறைவுக்குப்பின் அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில்  ஒரு முஸ்லிம் வேட்பாளர்.நிறுத்தப் படுவார் என எதிர்பார்த்த முஸ்லிம்களுக்கு  மு.பரஞ்சோதியை அறிவித்து ஏமாற்றத்தை அளித்தார்.
மேலும் பத்து மாநகராட்சிக்கு அறிவிக்கப் பட்ட வேட்பாளர்களில் முஸ்லிம்கள் யாரும் இல்லை என்பதும் குறைந்த பட்சம் திருச்சி மாநகராட்சியை  கூட மரியம் பிச்சை குடும்பத்திற்கு வழங்கவில்லை என்பதும் அவரது முஸ்லிம் விரோதப் போக்கையே காண்பிப்பதாக முஸ்லிம் சமுதாயம் எண்ணுகிறது. 
மோடியின் தோழியின் இந்த முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதற்கான முஸ்லிம்களின் கடுங்கோபத்தை சந்திக்க் வேண்டியிருக்கும் என்பது மட்டும்  உறுதி!  
-இப்னு ஹுஸைன்.

0 comments:

Post a Comment