Friday, September 2, 2011

அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு! ஆணித்தரமாக பதிலளிப்பதாக கூறும் அண்ணனுக்கு நச்சுன்னு ஒரு கேள்வி?

அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு! ஆணித்தரமாக பதிலளிப்பதாக கூறும்
அண்ணனுக்கு நச்சுன்னு ஒரு கேள்வி?
கேள்வி:  அண்ணனின் முரண்பாடுகளை நீங்கள் என்ன தான் சுட்டி காட்டினாலும்
என்னால் அதை எளிதில் புரிந்துக்கொள்வது கடினமாகவே இருக்கிறது.எனவே
எளிதில் புரிந்துக்கொள்ளும் விதமாகவும்,அவரை அடையாளம் காணும் விதமாகவும்
ஒரு முரண்பாட்டை கூறுங்களேன்?

முஹம்மது அலி -கோட்டக்குப்பம்

பதில் :ஆன்மிகம்,அரசியல், நிவாகம் என்று அண்ணனின் ஏகப்பட்ட முரண்பாடுகளை
ஏற்கனவே சமுதாயத்தின் பார்வைக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.அதற்க்கு
விளக்கம் என்ற பெயரில் உளறியதை தவிர வேறொன்றும் பதிலாக இருக்கவில்லை.
உங்களைப் போன்றவர்களுக்கு எளிதில் புரிந்துக் கொள்ள முடியாமைக்கு
காரணம்,அவரது நாவல்லமைதான். இறைவனின் படைப்பில் இப்படிப்பட்ட மனிதர்கள்
இருப்பது இயல்பான ஒன்றுதான்.அந்த இயல்பினை நம்மை போன்றவர்கள் புரிந்துக்
கொள்ளாததால் வந்த வினை தான் இன்று அண்ணனின் ஆணவத்திற்கும் அவர் பரப்பும்
அவதூறுகளுக்கும் முக்கிய காரணமாக இருந்துக்கொண்டிருக்கிறது.ஆனாலும் அவரது
பேச்சை கொஞ்சம் கூர்ந்து கவனிப்போமேயானால் அதில் உள்ள ஏகப்பட்ட
முரண்பாடுகளை அடையாளம் கண்டுவிடலாம் என்பது தான் நிதர்சனமான
உண்மை.தற்பொழுது அன்றும்-இன்றும் என்ற தலைப்பில் அவரது முரண்பாடுகளை
தோலுரிக்கப்பட்டு வருவதை உங்களைப் போன்றவர்களுக்கு இந்த நல்ல நேரத்தில்
கூர்ந்து கவனிக்க வலியுறுத்துகிறோம்.

அண்ணனின் முகமூடி கிழிக்கப்பட்டு உங்களைப் போன்றவர்கள் அவரை எளிதில்
அடையாளம் காண இதோ ஓர் முரண்பட்டு!

பொதுமக்களின் பணத்தில் அண்ணன் நடத்தும்"ஆன்லைன் பீஜே"என்ற இந்த தளம்
இஸ்லாமியகொள்கைகள்,கோட்பாடுகள்,சட்டதிட்டங்கள்,ஆய்வுகள்,விமர்சனங்கள்,கொள்கை
அடிப்படையிலான கேள்விபதில்கள்,மார்க்க தொடர்பான
நூல்கள்,சொற்பொழிவுகள்,விவாதங்கள் என்று முழுக்க முழுக்க மார்க்கத்தை
மக்களுக்கு எடுத்துரைப்பதற்க்கென்று ஆரம்பிக்கப்பட்டவையாகும்.இயக்க
பஞ்சாயத்துகள்,தனி மனித விமர்சனங்கள் ஆகியவற்றிர்க்கு முற்றிலும்
அப்பாற்பட்டதுமாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.இதை அனைவரும்
அறியும் வண்ணம் அண்ணனே அந்த இணையத்தளத்தில் அறிவிப்பையும் செய்து
இருக்கிறார்.(பார்க்க-ஆன்லைன் பீஜே இணையத்தளம்)

ஆனாலும் அவரது அறிவிப்புக்கு அவரே முரண்பட்டு,"சைபுல்லாவின்
திருகுதாளங்கள்"என்ற தலைப்பில் ஆறு பாகங்களையும்,"சுனாமித்திருடர்களின்
துரோக வரலாறு" என்ற தலைப்பில்மூன்று பாகங்களையும் வெளியீடு அந்த
இணையதளத்தின் நோக்கத்தை சிதைத்துள்ளார். இதுவே நீங்கள் அவரை டையாளம் காண
அற்புதமான ஓர் சான்றாகும்.

அண்ணன் உணர்ச்சிவசப்பட்டு அப்படி செய்து விட்டார் என்று அவரது அபிமானிகள்
ஆறுதல் கொண்டாலும் தவறை சுட்டி காட்டிய பிறகு திருத்திக்கொள்வது தானே
மனிதப்பண்பு?ஆனால் சுட்டிக்காட்டியும் இதுவரையிலும் அவர் அந்த
இணையதளத்திலிருந்து அந்த அவதூறு ஆக்கங்களை நீக்கியபாடில்லை. மாறாக
இன்னும் அந்த அவதூறு பணியை தொடரப் போவதாகத் தான் அண்ணனின் பினாமி
கூறுவதைப் பாருங்கள்...

"சுனாமி திருடர்களின் துரோக வரலாறு" என்ற பெயரில் இவர்களின் முகத்திரையை
ஆன்லைன்பீஜேவில் இப்போது ஆதாரப்பூர்வமாக கிழி கிழி என கிழித்துக்
கொண்டிருக்கிறார்.(பொய்யன் தளம்)

தவறை தக்க காரணங்களால் சுட்டிக்காட்டினால் அதை திருத்திக்கொள்வோம் என்று
மேடைதோறும் வெற்று கூச்சலிடும் இவர் இதுவரையில் இது குறித்து மூச்சு
விடாததற்கு காரணம் என்ன?என்பதை இனி நீங்கள் தான் கேட்கவேண்டும்.
- முபாரக்

0 comments:

Post a Comment