Friday, September 16, 2011

இரு முறை மாற்றிப் பேசுபவர் மெண்டல் என்றால்...

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்]அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நம்பினால் நபி[ஸல்] அவர்களை மனநோயாளி ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று இந்த வீடியோவில் அறிஞர் பீஜே சொல்கிறார். அப்படியானால்,
நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மைதான்  என்று அழுத்தம் திருத்தமாக 
 அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா?
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட காலகட்டத்தில், இரு விசயங்களை மாற்றிச் சொன்னார்கள் என்று ஹதீஸில் வருவதை வைத்து,  அப்படியானால் நபி மென்டலா? மனநோயாளியா? என்றெல்லாம்[நவூதுபில்லாஹ்] இவர் வர்ணிக்கிறாரே! நமது உயிரும் மேலான நபியை பற்றி இவ்வாறு சிந்திப்பதும், 
அதை வார்த்தையால் 
வெளிப்படுத்துவதும் மாபாவம் என்பதை பற்றி எல்லாம் இவருக்கு கவலையில்லை. நபி[ஸல்] அவர்கள் இரு விசயங்களில் மாற்றிச் சொன்னார்கள் அதுவும் உலகம் சார்ந்த இரு விசயங்களில் மாற்றிச் சொன்னார்கள் என்பதால், சராசரி மனிதனோடு ஒப்பிட்டு மென்டலா என்ற தோற்றத்தை சைகையில் காட்டும் இந்த பீஜே, அல்லாஹ்வின் மார்க்கத்தில் அடுக்கடுக்காக முரண்பட்டுள்ளாரே! அப்படியானால் இவரை முத்திய மெண்டல் எனக்கூறலாமா?
எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யப்  பேச்சிலிருந்து  முஸ்லிம்களை பாதுகாப்பானாக!
பார்க்க வீடியோ;http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&feature=related


0 comments:

Post a Comment