Thursday, September 30, 2010

மாமா கோபால்' - நக்கீரன் மீது அண்ணன் பாய்ச்சல்


நக்கீரனில் வெளிவந்த செய்தி அண்ணனை நெற்றிக்கண்ணை திறக்க வைத்துள்ளது! குமுதம் ரிப்போர்ட் செய்தியால் கொந்தளித்த சூடு ஆறுவதற்குள் அடுத்ததடுத்து வரும் ஊடக செய்திகள் அவரை நிலை குலைய வைத்து அவரை தரம் தாழ்ந்து பேச வைத்துள்ளது!

குமுதம் ரிப்போர்ட் செய்திக்கு பாக்கர் ஜவஹிருல்லாஹ் மேல் பாய்ந்த அண்ணன் தற்போது பேட்டி கொடுத்த மூவரை விட்டு விட்டு நக்கீரன் கோபால் மீதும் ஆசிரியர் காமராஜ் மீதும் பாய்ந்து இருப்பது ஏன் என்று புரியவில்லை.

அதே போல் பாக்கர் ஜவஹிருல்லாஹ் மேல் வழக்கு தொடுப்பேன் என மிரட்டியவர் தொடர்ந்து பத்த்ரிக்கைகளுக்கு பேட்டியளித்து வரும் காசிம், ரஹீம் அலி அப்துல்லாஹ் , நஸ்ருதீன் மேல் வழக்கு தொடுப்பதாக சொல்ல காணோம் . அது சரி அவர்கள் மேல் வழக்கு போட்டால் இவரல்லவா மாட்டுவார்.

நக்கீரன் மேலான தரம் தாழ்ந்த விரச நடை விளக்கம் ,விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர் அண்ணன் என்பதை மீண்டும் நிருபிதிருப்பதோடு , தன்னுடைய தரத்தையும் ,நிறத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

'இவர் யாரை பயங்கரவாதி , மாமா மோசடிக்காரன் என கூறுகிறாரோ அந்த கோபாலிடம் தான் தன்னுடைய உணர்வு பத்திரிக்கையை அச்சடித்து கொண்டிருந்தார். 'பி.ஜே.வை பற்றி இப்போது பேசும் செங்கிஸ் கான் அப்போது ஏன் பேசவில்லை' எனும் சகோதரர்கள் அதே கேள்வியை பி.ஜே.விடம் ' கோபாலை பற்றி அப்போது ஏன் பேசவில்லை ? என்று கேட்டால் தேவலை.

மேலும் அதில் தனக்கு பதவி ஆசை இல்லை என்றும் தான் த.த.ஜ.வின் சாதாரண உறுப்பினர் என்று கூறியுள்ளார்.ஒரு சாதாரண உறுப்பினரின், த.த.ஜ. உருவாகும் முன் உள்ள தனிப்பட்ட பிரச்சனைக்காக நக்கீரன் அலுவலக முற்றுகை! ஆனால் உங்கள் வாதப்படி ஒரு குற்றமும் செய்யாமல் ,கொள்கைக்காக, குடும்பத்தை விட்டு ரமலானில் இருந்து சிறையில் வாடும் திருவிடசேரி நிர்வாகிகளுக்காக இது வரை எந்த போராட்ட்டமும் இல்லை. த.த.ஜ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

தானும் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து எழுதும் இவர் உணர்வில் வெளியிடும் செய்திகளுக்காக யாரேனும் இப்படி விமர்சித்தால் தாங்குவாரா? இவரின் எழுத்து விபச்சாரத்தை அப்படியே கீழே தந்துள்ளோம்.

பயங்கரவாதி நக்கீரன் கோபால்!


நக்கீரனில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க இந்தக் கட்டுரை என்றாலும் இதனால் நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் கோபால் பற்றி என் பாதிப்புக்கு ஏற்ப விமர்சிப்பதற்கு உரிமை எனக்கு உள்ளது. எனது நிலையில் இருந்து இதை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
யார் இந்த கோபால் மாமா
என்னுடைய கடந்த கால வாழ்க்கை என்று இவன் பொய்யை வெளியிட்டுள்ளான். நான் இவனது கடந்த கால வாழ்க்கையின் உண்மையில் சிறு பகுதியுடன் ஆரம்பிக்கிறேன்.
ஷியாம் அவர்கள் நடத்தி வந்த தராசு பத்திரிகையில் ஓவியம் வரைபவனாக இருந்தவன் தான் நக்கீரன் கோபால் என்பவன். இவனுக்கு படம் வரையத் தெரியுமே தவிர ஒழுங்காக எழுதக் கூட தெரியாது.
இப்போதும் மற்றவர்கள் எழுதுவதைத் தான் தன் பெயரில் வெளியிட்டு வருகிறான்.
தராசு பத்திரிகையில் இருந்து கூலிக்கு எழுதும் சிலரைப் பிடித்து வந்து நக்கீரன் பத்திரிகையை ஆரம்பித்தான். ஆனால் பத்திரிகை ஓடவில்லை
இந்த நிலையில் இந்தியா டுடே பத்திரிகை சந்தனக்காட்டுக்கு தனது செய்தியாளர்களை அனுப்பி வீரப்பனிடம் வீடியோ பேட்டி எடுத்தது. கோபால் அந்த செய்தியாளரைச் சரிக்கட்டி அந்த வீடியோவை வாங்கினான். இந்தியா டுடே வெளியிடுவதற்கு முன்பே வீரப்பன் பேட்டியை இவன் வெளியிட்டான். தனது செய்தியாளர்கள் கஷ்டப்பட்டு காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்ததாக புளுகி பல வாரங்கள் தொடர் வெளியிட்டான். இப்போது தான் நக்கீரன் என்ற பத்திரிகை உலகுக்குத் தெரிய வந்தது.
இவனது அறிமுகமே அயோக்கியத்தனத்தில் தான் ஆரம்பமாகிறது.
நக்கீரன் போன்ற பத்திரிகை நடத்த மூளை தேவை இல்லை. பணத்துக்காக எதையும் செய்யும் கேடு கெட்ட குணமும் கற்பனையும் காமராஜ் போல் காசுக்காக எதையும் செய்யும் இழிபிறவிகளின் உதவியும் இருந்தால் போதுமானது என்பதை தராசு பத்திரிகை அனுபவத்தில் இவன் கற்றுக் கொண்டான்.
உதாரணமாக ராமதாஸ், முதல்வரைத் தனியாகச் சந்தித்தார் என்ற செய்தி இவனுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இருவரும் பேசிக் கொண்டது இருவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் இவன் எழுதுவான். இருவர் மட்டுமே உரையாடிய போது பேசிக் கொண்டது இவனுக்கு எப்படித் தெரியும்? என்று சிந்திக்க மறுக்கும் மக்களின் பலவீனம் தான் இவனுக்கு மூலதனம்
ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகை விற்பனைக்காக மாமா வேலைக்கு நிகரான செய்திகளை இவன் எழுதலானான். ஆட்டோ சங்கர் கதை என்ற பெயரில் பெண்களை சூறையாடிய கதைகளை கற்பனை செய்து எழுதி காசாக்கினான். அவ்வளவும் ஆபாசம் புளுகு மூட்டை.
நடிகைகள் பற்றி அந்தக் கால இந்து நேசன் பாணியில் காமக் களஞ்சியத் தொடர் எழுதினான். இதில் பெரும்பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் காம உணர்வை ஊட்டிய எழுத்து விபச்சாரம் தான்
இவன் எழுதியது போல் இவனது குடும்பத்து பெண்களின் காமச் சேட்டைகள் என்று நாம் எழுதினால் அதை இவன் ஜீரணித்துக் கொள்வானா? கோபால் வீட்டுக்குள் ஒருவன் போவதை மட்டும் பார்த்து விட்டு உள்ளே நடந்ததை நாம் இவனைப் போல் எழுதினால் அதை ஜீரணித்துக் கொள்வானா?
சட்ட விரோதமாக சந்தன வீரப்பனைச் சந்தித்து தேசத்துக்குத் துரோகம் செய்தவன். சந்தன வீரப்பன் நாடகத்தில் கோடிகளைச் சுருட்டியவன். எழுத்துலகில் காசுக்காக எதையும் செய்யும் இழி பிறவி இவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. அடுத்த இடம் காமராஜ் என்ற எச்சில் பொறுக்கிக்குக் கொடுக்கலாம்.
ரஜினி பெயரை ஆதாயமாக்க ரஜினி ரசிகன் என்று பத்திரிகை நடத்தினான். ஒவ்வொரு நடிகன் பெயரிலும் பத்திரிகக் நடத்தி இளைஞர்களைக் கெடுத்தவன். காசு சம்பாரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கேடு கெட்டவன் தான் இந்தக் கோபால்.
கற்பனை கலந்து எத்தனையோ பெண்களைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி அவர்களின் குடும்ப வாழ்வைச் சீரழித்தவன். முஸ்லிம் குடும்பங்களில் ஏற்படும் குடும்பச்
சண்டைக்குள் நுழைந்து எதையாவது எழுதி அவர்களின் வாழ்வையே சீரழித்து பணம் சம்பாரிக்கும் அற்பன் தான் இந்தக் கோபால்.
இவனுக்கு இதன் வலியை உணரச் செய்வதற்காக இவனது அந்தரங்கச் சேட்டைகள் பற்றியும் மற்றவர்களின் குடும்பம் பற்றி இவன் எழுதுவது போல் இவனது குடும்பம் பற்றியும் யாராவது எழுதினால் நல்லது. இவனுக்கு கொஞ்சமும் சளைக்காத காம?ராஜ் என்பவன் பற்றியும் அவன் எழுதுவது போன்ற நடையில் யாராவது எழுதினால் தான் இவன் அடங்குவான்.
பத்திரிகை இப்போது சுத்தமாக படுத்து விட்டது. எனவே தான் நபிகள் நாயகம் பற்றி இரண்டு தடவை கற்பனை செய்தி வெளியிட்டு பத்திரிகை விற்பனையைத் தூக்கி நிறுத்தப் பார்த்தான். இவனை இப்படியே விட்டால் தொடர்ந்து வாலாட்டுவான் என்பதால் இவனுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.
இனிமேல் இவன் நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக எழுதினால் பத்திரிகை அலுவகம் இருக்காது என்ற பாடத்தை தவ்ஹீத் ஜமாஅத் படித்துக் கொடுத்தது.
இதன் பின்னர் பத்துப் பேர் கூட இல்லாத பொய்யன் பற்றி அடிக்கடி பில்டப் செய்திகளை வெளியிட்டு நமக்கு கடுப்பு ஏற்படுத்தலாம் என்று நினைத்தான்.
புலி கேசியான புண்ணாக்கு தொடர் எழுதி நிமிர்த்தப் பார்த்தான். ஒன்றும் கை கூடவில்லை
அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு தான் அட்ரஸ் இல்லாத மூன்று பேரின் பேட்டி என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப்பது.
இவன் ஒரு எழுத்து விபச்சாரி என்பதற்கு ஆதாரம் யாரைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் அவர்களின் கருத்தையும் கேட்டு பிரசுரிக்க வேண்டும், என்னிடம் இது பற்றி கருத்து கேட்காமல் வெள்யிட்டதில் இருந்து இவன் எழுத்து விபச்சாரி என்பது உறுதியாகிறது.
எழுத்துலக மாமா நக்கீரன் கோபால் கூறுகிறான்
பேட்டியில் இருந்து
இப்படிப்பட்ட சூழலில் தான், 1997 டிசம்பர் 6-ந்தேதி பாண்டியன், சேரன், ஆலப்புழை ரயில் களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து தமிழகத்தை உலுக்கியது. பி.ஜே.வின் வன்முறை கலந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான் இதனை செய்திருக்கிறார்கள். குண்டு வைக்க தூண்டியது பி.ஜே.தான். இதனால் அப்போதே பி.ஜே.வை அழைத்து விசாரித்தது தமிழக உளவுத்துறை. சந்தேக வலை தன்னை சுற்றி விழுவதை அறிந்த பி.ஜே., குண்டு வைத்தவர்களை சொல்கிறேன் என்று சொல்லி எங்களை காட்டிக் கொடுத்தார். எங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் குண்டு வைக்கவே கிடையாது” என்று விவரித்தனர்.
இப்படி மூவர் சொன்னதாக இவன் எழுதுகிறான்.
நமது விளக்கம்
இவர்கள் குண்டு வைக்கவில்லை என்று மூவரும் சொல்கின்றனர். குண்டு வைக்காத இவர்களைப் பற்றி நான் காவல் துறையில் சொல்லி இருந்தால் அது எப்படி காட்டிக் கொடுத்ததாக ஆகும்? குண்டு வைக்காத இவர்கள் மீது நான் பொய்யாக தகவல் கொடுத்தால் அதை ஏற்று காவல் துறை வழக்கு போட்டிருக்குமா?
நாங்கள் தான் குண்டு வைத்தோம்; அதை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று இவர்கள் கூறினால் தான் நான் காட்டிக் கொடுத்தாக ஆகும். நாங்கள் குண்டு வைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்’ பீஜே காட்டிக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள். முரண்பட்ட இரண்டில் எது உண்மை.
குண்டு வைக்காத நாலு அப்பாவிகளைப் பற்றி இவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே காவல் துறை வழக்குப் பதிவு செய்யுமா? நான் தமிழக முதல்வராக இருந்து அப்படிச் சொன்னால் வேண்டுமானால் நடக்கலாம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கு குறித்து காவல் துறை என்னை விசாரித்தது உண்மை. அதற்குக் காரணம் குண்டு வைத்தவர்கள் என் பெயரையும் இழுத்து விட்டது தான். அதை அல் உம்மா தொடரில் விளக்கியுள்ளேன்.
பேட்டியில் இருந்து
குண்டு வெடிப்புகளை தவிர்த்து பார்த்தோமேயானால்… முஸ்லிம்களின் மதகுருக்கள் கொல்லப்பட்டதற்கும் பின்னணியில் இவர் இருந்துள்ளார். உதாரணத்திற்கு… 8.8.97-ல் கே.கே நகர் பள்ளிவாசல் மதகுரு கமருஸ்ஜமான் கொல்லப்படுகிறார். பி.ஜே.வி.ன் தூண்டுதலில் இது நடந்தது. பள்ளி ஜமாத்தின் புகாரிலே பி.ஜே. பெயர் இருக்கிறது
என்று மூவரும் சொன்னதாக கோபால் சொல்கிறான்.
எனது பதில்
கொல்லப்பட்ட மத குருக்கள் யார்?
கொன்றவர்கள் யார்?
பீஜே சொல்லித் தான் நான் மத குருக்களைக் கொலை செய்தேன் என்று யாராவது போலீஸிலோ நீதிமன்றத்திலோ சொல்லி இருக்கிறார்களா?
அப்படிச் சொல்லி விட்டு பீஜே பின்னணியில் இருந்தார் என்று கூறினால் தான் அது பதில் சொல்லத் தக்கதாக இருக்கும்.
பள்ளி ஜமாஅத்தின் புகாரிலேயே பிஜேயின் பெயர் இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பள்ளி ஜமாஅத்தின் புகாரின் என் பெயர் இருக்கிறதா என்பது நினைவில் இல்லை. ஆனால் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் ஒருவர் கொல்லப்பட்டால் அதன் பின்னணியில் பலர் சந்தேகிக்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம். அப்பட்டமாகத் தெரிந்த திருவிடைச்சேரி கொலையில் என் பெயரை சிலர் இழுத்து விடுவதை பார்க்கிறோம்.
ஆனால் கமருல் ஜமான் குடும்பத்தைப் பள்ளி நிர்வாகம் கை விட்டது. அந்தக் குடும்பத்தினர் நான் அமைப்பாளராக இருந்த தமுமுகவை அணுகி உதவி கேட்டனர். அவர்களுக்காக உணர்வு இதழ் மூலம் நிதி திரட்டி அந்தத் தொகையை வழங்கினோம். அவரது பிள்ளைகள் படிப்புக்கும் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்தோம். பள்ளி நிர்வாகிகள் என் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும் அவரது குடும்பத்தினர் அதைப் பொய்யாக்கி விட்டனர்.
குண்டு வைக்காத இவர்கள் பெயரை நான் சொன்னதும் இவர்களைக் காவல் துறை கைது செய்தது என்று கூறுகின்றனர். அப்படியானால் பள்ளிவாசல் நிர்வாகம் என் பெயரைச் சொல்லி இருந்தும் காவல் துறை அந்த வழக்கை ஏன் என் மீது போடவில்லை. அன்று அரசுக்கும் காவல் துறைக்கும் நாங்கள் (தமுமுக) கடும் எதிரிகளாக இருந்தோம். எங்களுக்கு எதிரான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு வாக்கு மூலம் இருந்து அது உண்மையாகவும் இருந்தால் என்னைத் தானே அந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்பது இவர்களின் வாக்கு மூலத்தில் இருந்தே தெளிவாகிறது.
பேட்டியில் இருந்து
அதேபோல நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்பவரை கொல்ல சில இளைஞர்கள் போகிறார்கள். அவரை கொல்ல இளைஞர் கள் முயற்சித்தபோது அவரது மனைவி கொல்லப்பட்டு விடுகிறார். அந்த இளைஞர்களை அனுப்பியது பி.ஜே.தான். ஆனால் அப்பாவி இளைஞர்கள் சிலரை இந்த சம்பவத்தில் மாட்டிவிட்டுவிடு கிறார். 14 வருடங்களாக இன்னமும் சிறையில் இருக்காங்க அந்த அப்பாவி இளைஞர்கள். இப்படி நிறைய சொல்ல முடியும்
எனது பதில்
ஆலிம் ஜார்ஜ் விஷயத்தில் கொல்ல முயன்ற இளைஞர்கள் அப்படி சொன்னார்களா? வாக்கு மூலம் கொடுத்தார்களா? நீதி மன்றத்தில் சொன்னார்களா? அப்படி சொல்லி இருந்தால் இதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகமாவது இருக்கும். நாங்கள் மூவரும் தான் ஆலிம் ஜார்ஜை கொல்ல முயன்றோம் பீஜே தூண்டி விட்டார் என்று கூறப் போகிறார்களா? இந்த வாக்கு மூலத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு இம்மூன்றும் தான்.
இது தவிர பொதுவாக சில குற்றச் சாட்டுக்களையும் கூறியுள்ளனர்.
பேட்டியில் இருந்து
அதுவும் முஸ்லிம்களிடம் தனது செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சை கையிலெடுப்பது இவரது வாடிக்கை.
எனது பதில்
செல்வாக்கு சரியும் போதெல்லாம் பீஜே இப்படிச் செய்வார் என்ற இந்த அபத்தமே இவர்களைத் தோலுரித்துக் காட்ட போதுமானாது.
செல்வாக்கு குறித்து நான் எப்போதும் பேசுவதில்லை. அதையே ஒரு ஆதாரமாகக் காட்டும் போது அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும்.
ஜுலை 4 மாநாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாடு என்றாலும் அதைத் தோல்வியுறச் செய்வதற்காக பீஜே என்ற தனிமனிதனை மையப்படுத்தியே பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். அந்த மாநாடு தோல்வியில் முடிந்திருந்தால் செல்வாக்கு சரிந்து விட்டது எனலாம்.
இவர்கள் சிறைக்குப் போகும் போது இருந்ததை விட இலட்சம் மடங்கு வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இலட்சக்கணக்கானோர் கூடிய மாநாடு சாட்சி
நாட்டின் பிரதமரையே தாமதமின்றி சந்திக்க முடிவது மற்றொரு சான்று.
செல்வாக்கு சரிந்து விட்டது என்பதே பச்சைப் பொய் என்பது இதில் இருந்து தெரிகிறது.
மேலும் நான் செல்வாக்குக்கு என்றும் ஆசைப்பட்டதில்லை. ஜாக் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த நேரத்தில் தான் நான் அதன் பொறுப்பை விட்டு விலகினேன். தமுமுக அபார வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் அதன் முதல் நிலை பொறுப்பாகிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்து நானாக விலகினேன். தொண்டனாக தொடர்ந்தேன். அதன் பின் தவ்ஹீத் ஜமாஅத் மபெரும் மக்கள் இயக்கமாக உள்ள இந்த நேரத்தில் நான் அதன் தலைவர் பத்வி மேலாண்மைக்குழு தலைவர் பதவி ஆகியவற்றை விட்டு விலகி அதில் உறுப்பினாரக் இருக்கிறேன். ஜெயிலில் இருந்து வந்தவுடன் அமைப்பாளர் பதவிக்கு பேரம் பேசி செல்வாக்கு பெற துடிப்பவர்கள் இதைச் சொல்வது தான் கேலிக்கூத்து.
செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சைக் கையில் எடுப்பார் என்று கூறும் இவர்கள் எனது வன்முறை பேச்சுக்கு ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்ட முடியாது.
முறைப்படி குற்றச் சாட்டுக்களை பட்டியல் போடட்டும். அவர்களைப் பற்றி அம்பலப்படுத்தும் பட்டியலை நான் போடுகிறேன். முறையாக ஒப்பந்தம் செய்து விவாதிக்க நான் தயார்
By P.Zainul Abideen

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு-மறுக்கப்பட்ட நீதி



!
அறுபது ஆண்டுகள் கழித்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருந்த முஸ்லிம்களை இந்த தீர்ப்பு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது!

ஆவணங்களின் அடிப்படையில் இடம் யாருக்கு சொந்தம் ? என தீர்ப்பு வழங்காமல் 'குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதை' போல சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பங்காக பிரித்து வழங்கும் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு 'கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த' கதையாக உள்ளது!

'பன்னிரண்டு ஆண்டுகள் பயன் படுதியவர்க்கு நிலம் சொந்தம்'என்று சட்டம் வகுத்து விட்டு
நானூற்றி ஐம்பது ஆண்டு தொழுகை நடந்த இடத்தை 'இங்கு தான் ராமர் பிறந்தார்' என்று அராஜகமாக ஆக்ரமித்த அக்கிரமத்தை அனுமதிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கிறது!

நிலத்திற்கு உரிமை கோரும் சன்னி வக்ப் வாரியத்தின் மனு தள்ளபடி செய்யபட்டிருப்பதும்,
சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட சிலைகள் அங்கு நீடிக்கும் என்பதும் முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுவர்.

முஸ்லிம்கள் இது போன்று நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரினால் இது போன்று நீதி மன்றங்களும் , அரசும் நடந்து கொள்ளுமா? ஏன் எனில் அனைத்து அரசு கட்டிடங்களும், நீதி மன்றங்களும் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை பிரதி பலித்து கொண்டு நிற்கின்றன.

இந்த நாட்டில் மக்கள் தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதி மன்றங்களை நம்பிக் கொண்டுள்ளனர்.அந்த நம்பிக்கை பொய்க்குமானால் அவர்கள் நீதியை வேறு வழிகளில் தேட நாடினால் விளைவு என்னாகும்?

எப்படி இருப்பினும் மூன்று மாதங்கள் தற்போதைய நிலை நீடிக்கும் என்பதும் உச்ச நீதி மன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மேல் முறையீடு செய்யும் என்பதும் தெரிகிறது! அது வரை அனைவரும் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லை.

Wednesday, September 29, 2010

ரயிலில் குண்டு வைக்க சொன்ன பி.ஜே. விடுதலை ஆனவர்கள் ஆவேசம்!



நன்றி:நக்கீரன் வார இதழ்

Tuesday, September 28, 2010

குமுதம் ரிப்போர்ட் செய்தியும் கொதிப்படைந்த அண்ணனும்!..


திருவிடசேரி சம்பவத்தில் ஏற்கனவே தமிழக வெகு ஜன ஊடகங்களால் தன் முகத்திரை கிழிக்க பட்டதில் காயம் பட்டிருந்த அண்ணன் தற்போது தமிழகத்தின் பிரபல வார இதழான குமுதம் ரிப்போர்ட் செய்தியால் மேலும் கொதிப்படைந்து அண்ணன் ஆன்லைன்-ல் மீண்டும் உளறிக் கொட்டி இருக்கிறார்.

பாக்கர் மற்றும் ஜவஹிருல்லாஹ் மேல் வழக்கு தொடுப்பேன்! எனும் மிரட்டலோடு துவங்கும் விளக்கத்தில், திருவிடசேரி சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம் என்று சேதி வெளியிட்ட தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள்,இவரை கைது செய்ய சுவரொட்டி ஒட்டிய இயக்கங்கள், அணைத்து பள்ளிவாசல்களிலும் உரை மூலம் கொண்டு சென்ற உலமாக்கள் , சம்பந்தப்பட்ட திருவிடசேரி ஜமாஅத் அணைத்து பள்ளிகளுக்கும் எழுதிய கடிதம், அனைத்தையும் மறைத்து தமிழகத்தில் மேற்கண்ட இருவரை தவிர வேறு யாரும் குற்றம் சுமத்தவில்லை என்று ஒரு அப்பட்டமான பொய்யை எழுத அன்னனைதவிர யாரால் முடியும்?

மேலும் இவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லையெனும் செய்தி அணைத்து முஸ்லிம்களுக்கும் சென்றடைந்து விட்டதாம்! பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருட்டு என நினைக்குமாம்!

அடுத்து இவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லைஎன்பதில் காவல் துறை தெளிவாக உள்ளதாம்! அப்படியானால் கைதான டி.என்.டி.ஜே.வினரை வழக்கில் இருந்து விடுவித்து விட்டனரா?

மேலும் வழக்கு சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறதாம்! ஜாக்கிரதை சகோதரர்களே! காவல்துறையோடு கை கோர்த்து யாரையோ கை கழுவப் போகிறார்!
.அதுதான் 'காவல்துறை தெளிவாக உள்ளது'
'வழக்கு சரியான திசையில் செல்கிறது'என்று வாய் மாலம் செய்கிறார்.

அடுத்து யார் யார் கூடி எங்கு சதி செய்தனர் என்பதை ஆதாரத்துடன் காவல் துறையிடம் தெரிவித்து விட்டதாக கூறுகிறார். காவல்துறையிடம் ஆதாரத்துடன் சொன்னால் ஏன் சம்மந்த பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையிடம் சொன்னதை மக்களுக்கும் சொன்னால் சம்மந்தபட்ட்வர்களை மக்களும் புரிந்து கொள்வார்களே! அதை விடுத்தது பூடகமாக பட்ட பெயர் சொல்லி குறிப்பிடுவதால் சம்மந்தபடாத மற்றவர்களை சந்தேக படுவதில் இருந்து தவிர்க்கலாமே! அதை விடுத்து பொம்பள மாதிரி 'பொய்யன் பொய்யாசிரியர்' என பூடகமாக பேசுவது ஏன்? பாக்கரும்,ஜவாஹிருல்லாஹ்வும் நேரடியாக உங்கள் பேர் சொல்லி சொல்லும் போது உங்களுக்கு ஏன் பயம்? குரான் கூறுவது போல் 'நேரடியாக தெளிவாக சொல்லுங்கள்' நீங்கள் சொல்லுவது சத்தியம் எனில் உண்மையை போட்டு ஏன் உடைக்கவில்லை?

அடுத்து கடுகளவு சந்தேகம் இல்லாத நிலையில் தான் காவல் துறை பாதுகாப்பு அளிப்பார்களாம் ! இவருக்கு வழங்கபட்டிருக்கும் பாதுகாப்பு தான் கொலை சதிக்கு ஆதாரமாம்! இதற்கு முன்னர் அரசியல் வாதிகளின் பாதுகாப்பு பற்றி பேசியதை எல்லாம் நினைவு படுத்தி பார்த்தால் தேவலை!

ஒவ்வொருவரும தங்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என இப்போது கூறும் இவர் சில காலத்திற்கு முன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் ஏன் பாதுகாப்பு கோரக் கூடாது? என்ற கேள்விக்கு 'நமக்கு அல்லா தானம்மா பாதுகாப்பு! நான் நாலு பேரை பாதுகாப்புக்கு வைத்தால் அவன் பத்து பேர் வந்து கொன்னுட்டு போயிடுவான்! நான் பத்து பேரோடு சென்றால் ,அவர்கள் நூறு பேரோடு வந்து கொன்று விடலாம்! ராஜீவ் காந்தியை பாதுகாப்பில் இருக்கும் நிலையில் தான் கொன்றாகள்! இந்திரா காந்தியை பாது காவலர்களே கொன்றார்கள்' அப்படி கொலை செய்யபட்டால் அதை நாம் அல்லாஹ்வின் பாதையில் ஷஹித்ன்னு எடுத்துகொள்ள வேண்டியது தான் 'என்று பெரிய வியாக்யானம் பேசி விட்டு , இப்போ 'ஐயோ கொல்ல பார்க்கிறன்களே' என்று கூப்பாடு போடுவதேன்?

மேலும் ஜவஹிருல்லாஹ் மனித இனத்தை சேர்ந்தவரா? என சந்தேகம் வேறு! அது சரி சந்தேகம் எனும் வியாதி வந்து விட்டால் அப்படிதான் ! அனைவரையும் சந்தேக பட சொல்லும்!

இதில் தேர்தல் நேரத்தில் ம.ம.க.வுக்கு எதிராக தனி அக்கறை செலுத்தி தனி முடிவெடுக்க தவ்ஹீத் ஜமாஅத்க்கு எளிதக்கிவிட்டார்! என தன பிரச்சனையை வைத்து தான் இவர் சுய நலத்தோடு தேர்தல் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுப்பார் சமுதாய நலனை முன்னிறுத்தி முடிவெடுக்க மாட்டார் ! என்பதற்கு அவரே எழுத்து பூர்வமான ஆதாரம் தந்துள்ளார். அல்ஹம்து லில்லாஹ்!

அடுத்து காசிமால் பாக்கர் சிறையில் தாக்கப்படவில்லை என்று நான் எழுதியது உண்மை என்பது உறுதியாகிறது' என பெருமிதம் வேறு! 'பாக்கரையும் ஹைதரையும் பாய்ந்து தாக்கினார் காட்டி கொடுத்தீர்கள் என்று கூறிக்கொண்டே நையப்புடைத்தார்' என இவர் கடந்த டிசம்பர் ஆறில் எழுதியது இன்னும் இவரது ஆன்லைன்-ல் இருக்கும் போதே அதை மறைத்து எப்படி எழதவும் பேசவும் முடிகிறது ?

அல்லாஹ்வின் அச்சம் குறைந்து விட்டால் அனைத்திற்கும் அஞ்ச நேரிடும் என்பதற்கு அண்ணனின் சமிபத்திய சம்பவங்கள் சான்று! இன்ஷா அல்லாஹ் சான்றுகள் தொடரும்...

இஸ்லாத்திற்கு எதிரானவரா பெரியார்?



பெரியார் இந்து மதத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர நினைத்திருந்தார் - இஸ்லாம் குறித்து விமர்சன சிந்தனைகளைக் கொண்டிருந்தார் - அவர் இஸ்லாத்தைப் பாராட்டியதாகக் கூறுவது தவறு என்றெல்லாம் கருத்துப்பட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "பெரியாரோடு ஒரு பயணம்' என்ற கருத்தரங்கில் பேசியதை, பேராசிரியர் அ. மார்க்ஸ் மற்றும் சன் டி.வி. வீரபாண்டியன் ஆகியோரிடத்தில் எடுத்துக்காட்டி அவர்களது கருத்தை கேட்டோம். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். (-ஆர்)

""நபிகளின் வாழ்க்கையை அறியும்போது, எனக்கு இஸ்லாமிய உணர்வு ஏற்படுகிறது என்றார் பெரியார்''
- - அ. மார்க்ஸ்

கொளத்தூர் மணியா அப்படிச் சொன்னார். நான் நம்பவில்லை. கௌத்தூர் மணி நேர்மையான கருத்துக்களை திரிக் காமல் பேசக் கூடியவர் என்றே நான் நம்பு கிறேன். இந்தப் பேச்சை பதிவு செய்திருக் கிறீர்களா? என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் தவறாக சொல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருந்த போதிலும் இப்படித்தான் அவர் சொன்னார் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதற்கான நான் பெரிதும் வருந்துகிறேன்.
பெரியார் குறித்து ஒரு தவறான நம்பிக்கை ஏற்படுத்த மணி முயற்சிப்பது வருந்தத்தக்கது. பெரியார் மிகத் தெளிவாக இஸ்லாம் குறித்து பேசியிருக்கிறார். எல்லா மதங்களையும் ஒழிக்க மாநாடு போடும் நீங்கள், இஸ்லாத்தை மட்டும் ஆதரிப்பது ஏன் என்று கேட்கப்பட்ட கேள் விக்கு, ""எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஏதாவது ஒரு மதம் இருக்க வேண்டுமானால் அது இஸ்லாமாகத் தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன் னவர் பெரியார். ஆனால் அவர் இந்து மதத்தை விட்டு வெளியே போனவர்களை இந்து மதத் திற்கு கொண்டு வர நினைத்திருந்ததாகச் சொல் வது வேதனை மட்டுமல்ல வியப்பாகவும் இருக்கிறது.
அதற்கான உரிய ஆதாரங்களை மணி தர வேண்டும். பெரியார் இஸ்லாத்தை தீண்டத் தகாதவர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைந்தார் என்று சொல்வதும் விஷமத்தனமானது. பெரி யாரிடம் எல்லோரையும் இஸ்லாத்திற்கு வரச் சொல்லும் நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு வரவில்லை என்று கேட்டபோது, ""இஸ்லாத்தில் இல்லாமல் இருந்தால்தான் நான் இந்து மதத்திற்கு எதிராக விமர்சிக்க முடியும்'' என்று பதில் சொன்னவர் அவர்.
அது மாத்திரமல்ல, இஸ்லாமிய நம்பிக்கைக ளில் ஒன்றான நபிகள் நாயகம் தான் இறுதி இறைத் தூதர் என்கிற கருத்தையும் ஏற்றுக் கொண்டவர் பெரியார். அவருக்குப் பின் அந்தத் துறையில் யாரும் இல்லாததனால் அவர் இறுதித் தூதர் என்கிற கருத்து என்று சொன்னார். அது போலவே ஹஜ் யாத்திரை போவதைக் கூட அவர் ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இந்து மதத் தைப் போல எல்லாப் பாவங்களையும் செய்து விட்டு, கோவில் குளத்திற்குப் போய் குளித்தால் போதும் என்கிற அர்த்தத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதில்லை. அது ஒரு மதக் கடமையாக நபிகள் தோன்றிய இடத்திற்கு சென்று வருதல் என்கிற பொருளில் மேற்கொள்ளப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

எனவே இஸ்லாம் குறித்து பெரியார் தொடர்ச் சியாகப் பாராட்டும் வகையிலேயே பேசியிருக் கிறார். அது மாத்திரமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என்கிற கருத்து வந்தபோது கிறிஸ்தவ மத்திலும் சாதி உள்ளது. இஸ்லாத்திற்கு மாறு வதே சிறந்தது என்றும் அவர் மொழிந்துள்ளார்.

அம்பேத்கர் புத்த மதத்திற்குச் செல்வது என்கிற முடிவெடுத்தபோது கூட இஸ்லாத்திற்குச் செல்வது சிறந்தது என்கிற கருத்தை பெரியார் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை அவர் விமர்சித்தது என்பது இன்று உண்மையான முஸ்லிம்கள் எல்லோரும்
விமர்சிக்கக் கூடிய அம்சங்களைத்தான் எடுத்துக் காட்டாக தர்காவை வணங்குவது, கந்தூரி விழா எடுப்பது, பேய் பிசாசு ஓட்டுவது முதலான மூட நம்பிக்கைகள் இஸ்லாத்தில் புகுந்திருப்பதைத் தான் அவர் விமர்சித்தார். இவை தவிர நான் அறிந் தவரை இஸ்லாத்தில் அவர் விமர்சித்திருப்பது பெண்களுக்கு ஹிஜாப் என்னும் முகத்திரை போடுகிற அம்சத்தைத்தான் அவர் கண்டித்தார்.
எனவே பெரியார் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது அடிப்படையில் பெரியாரை புரிந்து கொள்ளாத ஒன்றாகும். அது மாத்திர மல்லாமல் சமீபத்தில் வந்த ஆணைமுத்து தொகுதிகளில் பெரி யார் ஓரிடத்தில், ""நபிகளின் வாழ்க் கையை அறியும் போது, எனக்கு இஸ் லாமிய உணர்வு ஏற்படுகிறது'' என்கிற பொருள்பட குறிப்பிட்டுள்ளார். பெரியார் இருந்த வரைக்கும் எந்த அம்சங்களிலும் அவர் இந்துத்து வாவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் சமீபத்தில் முல்லைப் பெரி யார் அணை விஷய மாக சாலை மறியல் போராட்டம் நடந்தபோது, இந்து முன்னணி அமைப்பு, பெரியார் திராவிடர் கழ கம் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் நான் பெரிதும் மதிக்கும் மணி, இவ்வாறு பேசியிருப்பது எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உறுதி செய்கிறது.

ஆனாலும் இப்போதும் கூட மணி அப்படி பேசியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். பெரியார் கடைசி பல ஆண்டுகள் பொது மேடைகளில் கைலியுடன் தோன்றி னார் என்பதைக் கூட நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அதை வெறும் உடல் நோயின் விளைவு என்று நான் கருதவில்லை. எத்தனை அரசியல்வாதிகள் இப்படி யான ஒரு நிலையில் கைலியுடன் பொது மேடைகளில் தோன்றக் கூடியவர்களாக இருப்பார்கள்?

தயவு செய்து நீங்கள் மணியிடம் இன்னொரு முறை இப்படித்தான் பேசினீர்களா என்று கேட்டுப் பாருங் கள். அவர் இல்லை என்று சொன் னால் நான் மகிழ்வேன். அவர் மீதுள்ள மரியாதைகளை நான் தக்க வைத்துக் கொள்வேன்.

""இஸ்லாம் மார்க்கம் உங்களுக்கு ஒரு வழிமுறையாக இருக்கும் என்றார் பெரியார்''
- வீரபாண்டியன்

இஸ்லாம் குறித்து பெரியாரின் கருத்துக்களை பெரியாரியவாதிகள் இருட் டடிப்புச் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இஸ்லாம் என்பது தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தீண்டப்படாமல் கிடந்த மக்களுக்கான ஒரு மாற்ற மருந்து என்கிற கருத்தை பெரியார் கொண்டிருந்தார். அதே வேளையில் மதம் மாறுவது பற்றி அம்பேத்கர் ஆலோசனை கேட்டபோது, ""நீங்கள் போய் புத்த மதத்தில் சேருங்கள், நீங்கள் முடிவு செய்து விட்ட விஷயத்தில் நான் தலை யிட விரும்பவில்லை. ஆனால் சாதாரண மாய் போகதீர்கள். கூட்டம் கூட்டமாகப் போனால்தான் உங்களை அங்கே மதிப் பார்கள். பெரும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு செல்லுங்கள். ஆனால் அதே வேளையில், நான் பிறந்த - நான் வாழ்ந்து கொண்டிருக்கிற மதத்தில் இருக்கிற பிரச்சனை களை சரி செய்வதற்காக இந்த மதத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் போனால் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் உரி மையை நான் இழந்து விடுவேன். அதனால் கடைசி வரையில் இங்கேயே இருந்து உள்ளிருப்புப் போராட் டம்தான் நடத்துவேன். இங்கி ருந்து கொண்டு தான் இவர்களிடத்தில் சண்டை செய்வேனே தவிர மதம் மாற மாட்டேன்'' என்று சொன்னார்.
அதே நேரத்தில், இந்து மதத்தின் பிற்போக் குத் தனங்கள், இங்கிருக்கிற தீண்டாமைக் கொடுமை, ஏற்றத் தாழ்வுகள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக - தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு வடிகாலாக, ""நீங்கள் இஸ்லாத்திற்குப் போங்கள். அங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சாதிப் பிரிவுகள் இல்லை. அந்த மார்க்கத் தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு அது ஒரு வழி முறையாக இருக்கும்'' என்று அவர்க ளுக்கு அவர் பரிந்துரை செய்தார்.

ஆனால், எல்லா மக்களையும் மதம் மாற்றுவது, மதத்திற்கு மாறிப் போவது என்கிறபோது தான் மாறத் தேவையில்லை என்றும் பெரியார் சொன்னார். எனவே பெரியாரிய வாதி இஸ்லாம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை இருட்ட டிப்புச் செய்யத் தேவையில்லை. ஒரு வேளை பேராசிரியர் பெரியார் தாசன் அவர்கள் அண்மையில் இஸ் லாத்திற்கு மாறிப் போனதைப் பற்றி திராவிட இயக்கப் பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்கள் வந்ததை நான் படித்தேன். அவர் மாறிப் போனது ஒரு பெரியாரியவாதி, ஒரு பகுத்தறிவாளர் என்று சொன்ன நாத்திகவாதி. அப்படி இஸ்லாத் திற்கு மாறிப் போகிறாரே என்கிற கோபத்தில் திராவிட இயக்கப் பத்தி ரிகைகள் கடும் விமர்சனம் செய்ததை நான் பார்த்தேன். அந்த அடிப்படை யில் அவர்கள் இது போன்ற கருத் துக்களை சொல்லியிருக்கலாம்.

அதே நேரத்தில் இஸ்லாம் என் பது உட்பிரிவுகள் ஏதுமில்லா மல், மனிதர்களை சாதிப் பிரிவுகள் ஆக்கி விட்டு, பேதப்படுத்துகிற வேலை யைச் செய்வதில்லை. அங்கே சமத் துவம் இருக்கிறது என்கிற பெரியா ரின் கருத்திலிருந்து பெரியாரியவாதி கள் மாறுபடவும் வாய்ப் பில்லை.
பெரியாரியவாதிகள் எனப்படு வோர் உயர்சாதி மேலாண்மையை, உயர்சாதிக்காரர்களின் கொடுமை களை எதிர்த்துப் போராடுவதில் பின்வாங்குகிறவர்கள் அல்ல. அதே நேரத்தில் அவர்கள் எந்த மதத்திற் காகவும் பிரச்சாரம் செய்ய மாட் டார்கள். மதம் என்பது மனிதர் களுக்கு "அபின்' என்கிற கருத்துக் கொண்டவர்கள் தான் அவர்கள். அதுதான் அவர்களின் கருத்தாக்கம். பல சமூகப் பிரச்சனைகள் வருகிற போது, உதாரணமாக பாபர் மஸ் ஜித் இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு போன்ற பிரச்சனைகளின் போது இஸ்லாமியச் சகோதரர்க ளோடு அவர்கள் கைகோர்த்து நின்றதை நாடு பார்த்தது. பிரச்சனை என்றால் அவர்கள் வருவார்களே தவிர மதப் பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபடுவ தில்லை. இதுதான் அவர்க ளின் நிலைப்பாடு என்று நான் புரிந்து கொள்கிறேன்.

மீண்டும் பாபர் மசூதி தீர்ப்பு! சகோதர யுத்தங்கள் தேவையில்லை! -



எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்கிற சொற்றொடர் மிகவும் பிரபலமானது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனம் அனைத்தும் மீண்டும் அலஹாபாத் தீர்ப்பை நோக்கித் திரும்பியுள்ளது.
60 ஆண்டுகாலமாக இந்திய மக்களை ஆட்டி வைத்துக் கொண் டிருந்த தலையாய பிரச்சனையின் தீர்வுக்கான நேரம் நெருங்கியுள்ளது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தவுடன் இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
பாபர் மஸ்ஜித் நிலம் வக்ஃபு சொத்து தான் என்பதை நிரூபிக்கும்படியான ஆதாரங்கள் முஸ்லிம்கள் தரப்புக்கு வலுவைச் சேர்த்துள்ள படியால் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மத நம்பிக்கை என்ற சொல்லைத் தவிர வேறு ஆதாரங்கள் ஏதும் இல்லாதபடியால் இந்துத்துவாவினர் தீர்ப்பை எதிர்நோக்கும் திறனற்று திசை திருப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பாபர் மஸ்ஜித் இடம் குறித்து புதிய சட்டம் இயற்றி அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தீர்ப்பை தாமதப்படுத்தும் வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை அடுத்து செப்டம்பர் 30 அன்று கண்டிப்பாக தீர்ப்பு வெளிவரும் என்கிற அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று இந்துத்துவா அமைப்புகள் உறுதியாக அறிவிக்காத காரணத்தினால் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் கலவரம் நிகழ்த்தப்படுமோ? என்கிற அச்சம் மக்கள் மனத்தில் எழுந்துள்ளது.

மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வகையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம். தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று அறிவிக்க வேண்டிய மத்திய அரசு அதைவிடுத்து இந்துத்துவாவினரை கெஞ்ச ஆரம்பித்துள்ளது.
வேண்டுகோள் என்ற தலைப்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று அறிவிப்பதற்கு பதிலாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வேறு நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தை படித்த மக்கள் இது வேண்டுகோளா? அல்லது சரணாகதியா? என்று அறிய முடியாமல் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். மத்திய அரசின் சாடையை புரிந்து கொண்ட அத்வானியும், தீர்ப்பு வந்தவுடன் ஒரு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தனது கட்சியின் நிலையை எடுத்துரைத்து விட்டார்.
தீர்ப்புக்குப் பிறகு மேல்முறையீடு என்ற பெயரில் வழக்கை மேலும் ஒரு ஐம்பதாண்டுகளுக்கு இழுத்துச் செல்வது மற்றும் பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காமல் காலதாமதம் செய்வது என்ற புதிய திட்டத்தை சங்பரிவாரங்கள் வடிவமைத்து விட்டதையே அத்வானியின் அறிவிப்பு காட்டுகிறது.
தீர்ப்பை ஒரு சாக்காக வைத்து சங்பரிவாரத்தினர் கலவரத்தை உருவாக்கி முஸ்லிம்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் விளைவிக்கும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிற்ன.
சங்பரிவாரத்தின் சூழ்ச்சி மற்றும் சதிவலைகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் இஸ்லாமிய சமுதாயத்தி னரால் மேற்கொள்ளப்பட்டதாக எங்கேயும் காண முடியவில்லை

இந்நிலையில், மேலும் ஒரு சோதனையாக தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்குள் நிலவும் மோதல்கள் சங்பரிவாரத்திற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது வேதனைக்குரியது.
சில நாட்களுக்கு முன்னால் திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல், துப்பாக்கிச் சூடு வரை சென்று இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள்ளாக பெரியண்ணன் அவர்கள் தன்னை கொலை செய்ய சதி ஆலோசனை நடந்துள்ளதாக தன்னுடைய சொந்த இணையதளத்தில் தெரிவித்திருப்பது பேரதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து பேசப்படுவது தனக்கும், தனது இயக்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதனால் - தன்னைக் கொல்ல சதி என்று கூறி அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்றும், திருவிடைச்சேரி சம்பவத்திலிருந்து மக்களை மறக்கடிக்க திசை திருப்பும் செயல் இது என்றும் ஒரு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும், பெரியண்ணனை கொலை செய்ய ஒரு சிலர் முடிவு எடுத்துள்ளனர் என்கிற செய்தி உண்மையாயிருக்கும் பட்சத்தில் அது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இம்மாதிரியான நிகழ்வுகள் சமுதாயத்தின் முன்னேற்றத்தை பின்னோக்கித்தான் கொண்டு செல்லும்.
முஸ்லிம்களின் உயிருக்கும் - உடமைக்கும் கேடு செய்ய சங்பரிவாரத்தினர் முஸ்தீபுகளை செய்து வரும் வேளையில், சமுதாயத்திற்குள்ளே முட்டல் மோதல்கள் நிகழ்த்துவதாக செய்திகள் வெளிவருவது வேதனையான ஒன்று.

சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழகம் முழுவதும் ஆதரவு கருத்துக்கள் பெருகி வரும் நிலையில், இது போன்ற செய்திகள் பரவலாக பரப்பப்படுமானால் அது அவர்களின் விடுதலைக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
சகோதரர்களிடையே நடக்கும் சண்டைகள், அதனால் ஏற்படும் இழப்புக்கள் சமுதாயத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏகத்துவ இயக்கங்கள் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டங்களில் பெருமளவில் சுன்னத் ஜமாஅத்தினர் கலந்து கொண்டதால் கிடைத்த வெற்றியையும், அனைத்து இயக்கங்களும் போராடியதால் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு இறங்கி வந்ததையும் சிந்தனையில் செலுத்துங்கள்.
சமுதாய சகோதரர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நம்மை இறை நிராகரிப்பில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை நெஞ்சத்தில் பதிய வையுங்கள்.

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், அவனை கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ! (அல்லது) அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் ஆகிவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாமிய மக்கள் பெரும் பாவச் செயலான கொலையின் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போதனைகளை சிர மேற்கொள்ளுங்கள். சகோதர யுத்தங்கள் நரகிற்கு கொண்டு செல்லும் காரணிகளாக மாறும் என்கிற உண்மையை உணருங்கள்.
சகோதர யுத்தம் சாய்ப்போம், ஒற்றுமைப் பாலம் அமைப்போம், எதிரிகளின் செயல் அறவே ஒழிய நித்தம் உழைப்போம்.

நன்றி - மக்கள் ரிப்போர்ட்

==========

Monday, September 27, 2010

வேளச்சேரி, தரமணி கபரஸ்தான் பிரச்சனை


வேளச்சேரி, தரமணி பகுதியில் முஸ்லிம்களின் "மையத்தை' (பிரேதத்தை) அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் இல்லாததைப் பற்றியும், அப்பகுதி முஸ்லிம்களின் குமுறல்களைப் பற்றியும் நாம் கடந்த இதழ்களில் நேரடிச் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அரசும், மாநகராட்சியும் முஸ்லிம்களின் அடக்கஸ்தல விஷயத்தில் அலட்சியம் காட்டி வரும் காரணத்தால், வேளச்சேரி, தரமணி, மேற்கு வேளச்சேரி முஸ்லிம் ஜமாஅத்தார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ""முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி'' என்று ஒரு கூட்ட மைப்பை உரு வாக்கி யுள்ளனர். இக் கூட்ட மைப்பில் வேளச்சேரி, தரமணி பகுதியில் இருக்கும் பள்ளி வாசல்களின் நிர் வாகி கள், அப்பகுதி முஸ் லிம் பிரமுகர்கள், சமு தாய அமைப்பின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி உருவாக்கிய பிறகு கமிட்டியின் சார்பாக முஸ்லிம்களுக்கு அடக்கஸ்தலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கமிட்டி நிர்வாகிகள் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அவர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டியினர் சென்னை மாநக ராட்சி மேயர் மா. சுப்பிரமணியத்தை அவருடைய இல்லத்திற்கும், ரிப்பன் மாளிகைக்கும் சென்று 9 முறை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் இன்று வரை எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. மேயரிடம் வேளச்சேரி, தரமணி பகுதி முஸ்லிம்களுக்காக தரமணி லிங்க் ரோட்டில் 100 அடியில்சென்னை மாநகராட்சி சுடுகாட்டில் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் இடத்தை ஒதுக்கித் தரும்படியும், அல்லது மாற்று இடத்தைத் தரும்படியும் மனு அளித்தனர்.
மேயரோ, மாநகராட்சி மண்டலம் 10-ன் உதவி ஆணையாளரின் உதவி யுடன் புறம்போக்கு இடங்களை இனம் கண்டு, அவ்விடத்தை தானே நேரில் வந்து ஆய்வு செய்து, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி முஸ் லிம்களுக்கு அடக்கஸ்தல இடத்தை அமைத்துத் தருகிறேன்'' என்பதையே முஸ்லிம்கள் மனு அளிக்கும் ஒவ்வொரு முறையும் கூறுகிறாரே தவிர, அதற்கான வெளிப்படையான முயற்சிகள் எதையும் இதுவரை அவர் செய்ததாகத் தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதி முஸ்லிம்கள்.
""முஸ்லிம்கள் மேயரை சந்தித்து எங்களுக்கு வேளச்சேரி, தரமணி பகுதி யில் அடக்கஸ்தலம் அமைத்துத் தாருங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தால், கோரிக்கையை நிறைவேற்றுவதை விடுத்து ""நீங்கள் எல்லாம் இப்போ மரணிக்க மாட்டீர்கள், அதனால் அடக்கஸ்தலத்தை பற்றி மெது வாக யோசிப்போம்'' என்று மேயர் நையாண்டி செய்கிறார் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஏரியாவாசி ஒருவர்.
மாநகராட்சி அடக்கஸ்தல விஷயத்தில் அலட்சியம் காட்டுவதால், அடக்கஸ்தலம் பெறும் முயற்சிகளை இன்னும் வீரியப்படுத்தியுள்ளது. முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி இதற்காக தன்னுடன் இப்போராட்டக் களத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத், தமுமுக, விடுதலைச் சிறுத்தையின் சிறுபான்மை பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையை சேர்த்துக் கொண்டு உள்ளது. அவர்களை வைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி முடித்து உள்ளது பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி.

காஷ்மீர்: சமரசங்கள் தீர்வாகாது



காஷ்மீர் பிரச்சனைப் பற்றி பத்திரிகைகளில் ஆக்கப்பூர்வமான ஆலோசனை களை மத்திய அரசுக்குச் சொல்லி எழுத்தாளர் களும், சமூக நீதி ஆர்வலர்களும், சிந்தனையாளர் களுக்கும் எழுதி, எழுதி ஓய்ந்து விட்டார்கள். ஆனாலும் மத்திய அரசு கண்ணுக்கு முன் தெரியும் தீர்வை விட்டுவிட்டு தனது நிலையி லேயே தொடர்ந்து கொண்டிருப்பது காஷ்மீர் நிலவரத்தை மேலும் சிக்கலாகவே வைத்திருக்கிறது.
எந்த கோரிக்கைகளை முன் வைத்து காஷ்மீர் மக்கள் போராடுகிறார்களோ அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக இல்லை.
காஷ்மீரிலிருந்து ஆயுதப் படைக்கு வழங்கி யுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்துச் செய்ய வேண் டும் என்பதை மையப் பிரச்சனையாக வைத்து காஷ்மீரிகள் போராட்டங்களை நடத்தும்போது அந்தப் போராட்டக்காரர்கள் அந்த ராணுவத் தினராலேயே சுட்டுக் கொல்லப்படுவது அம்மக் களை வீரியம் கொள்ளச் செய்கிறது மத்திய அரசின் மீது மேலும் சினம் கொள்ளவே வைக்கி றது.
போராட்டங்களும், வன்முறைகளும் நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், மாணவர்களின் கல்வியும் பெருமளவில் பாதிக் கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாவதோடு, வெறுப்படையும் மாணவச் சமுதாயமும் போராட்டக் களத்தை நோக்கி விரையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
""ஆண்களுக்கு ஆதரவாக பெண்களும், குழந்தைகளும் கூட வீதியில் இறங்கி கலவரத்தில் ஈடுபடுவது கவலை கொள்ள வைக்கிறது'' என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் அதற்கான தீர்வை நோக்கி அவரது அரசு நகர்ந்ததாகத் தெரியவில்லை.
காஷ்மீர் விவகாரத்தையொட்டி பல கட்ட ஆலோசனைகள், பிரதமர் தலைமையிலான பல்வேறு அமர்வுகள், எதிர்க் கட்சியினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என பல முயற்சிகள் செய்தும் உருப்படியான எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிஜமான கவலை.
மக்களுக்காகத்தான் சட்டங்கள் என்பதுதான் அரசியல் தத்துவம். காஷ்மீரில் மட்டும் சட்டத்திற் காக மக்கள் என்ற நிலையை அம்மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல... இது போன்ற சட்டங்களை எந்த மாநில மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பிரிவின் 370வது சட்டப்படியான சிறப்பு அந்தஸ்து ஏட்டளவில்தான் இருக்கிறதே தவிர, உண்மையில் அது நீர்த்துப் போயுள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீர் மாநிலமும் மத்திய அரசால் நடத்தப்பட வேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது என்று உலகை நம்பச் செய்து விட்டு அங்கே ராணுவப் படையை குவித்து, அதற்கு வரம்பற்ற அதிகாரத்தைக் கொடுத்து காஷ்மீரை ராணுவ மயமாக்க மத்திய அரசு விரும்புகிறது என்கிற எண்ணம் ஒவ்வொரு காஷ்மீரியின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துள்ளது.
காஷ்மீரிகள் இந்தியாவை வெறுக்கவில்லை என்பதை அவர்களின் கோரிக்கைகளே வெளிப்ப டுத்துகின்றன.
காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அவர்கள் அமைதியாக வாழ வழி செய்யப்பட்டால், அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பிரிவினை வாதம் பேச மாட்டார்கள். மத்திய அரசின் அணுகுமுறைதான் அவர்களை வன்முறையை நோக்கித் தள்ளுகிறது. எந்த ஒரு சமுதாயமும் தம் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லை என்று உள்ளபடியே உணருகிறபோது எதிர்ப்புணர்வுதான் மேலோங்கும். அதுதான் காஷ்மீரிலும் நடந்து கொண்டிருக்கிறது.
இதுதான் தீர்வு என்று தெளிவாக தெரிந்த பின்பும் ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரத்தை ரத்துச் செய்யாமல், பேச்சுவார்த்தை, சமரசம் என்று இன்னும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
கடந்த புதன்கிழமை கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவி மெஹபூபா முஃப்தி, ""ஆயுதப் படை விஷயத்தில் சிறு மாறுதலை (பதட்டம் நிறைந்த காஷ்மீர் பகுதிகளில மட்டும் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிப்பது) ஏற்படுத்த முனையும் மத்திய அரசின் செயல் தீர்வாகாது. இது போன்ற வண்ணப் பூச்சுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நிவாரணமாக அமையாது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் உட்பட இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு முதல் வேளையாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக அனைத்து பிரிவு மக்கள் மற்றும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியிலுள்ள மிதவாத, தீவிரவாத குழுக்களுடன் நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தைக்கு முன் வர வேண்டும்.
இவற்றை ஆரம்பகட்ட நடவடிக்கையாக மத்திய அரசு மேற்கொண்டால்தான் பேச்சு வார்த்தையில் பலன் ஏற்படும் என்றாலும் ராணுவத்திற்கான சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு ரத்துச் செய்தே ஆக வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆனால் மத்திய அரசோ, இப்பொழுதும் காஷ் மீருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை 39 உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்க மெஹ்பூபா முஃப்தியும், ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் உமரும் மறுத்துள்ளனர். இதே போன்று பிரிவினைவாதத் தலைவர் அலி ஷா ஜீலானி, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன் னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோரும் இந் தக் குழுவை புறக்கணித்திருக்கின்றனர். இந்நிலை யில் காஷ்மீருக்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழு எதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
மக்களின் பிரச்சனைகளை யாரும் எதிரொலிக் கப் போவதில்லை மீண்டும், மீண்டும் சமரசங்கள் எதற்கும் உதவாது. காஷ்மீர் மக்களின் கோரிக் கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காத வரை...
- ஃபைஸ்

பெரியாரைப் புரிந்து கொள்ளாத பெரியாரிஸ்டுகள்



இன்று எல்லாத் துறையிலும் போலிகள் அதிகரித்து விட்டனர். அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என இல்லாமல் பகுத்தறிவு தளத் திலும் போலிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது.

சாமியார்களும், சன்னியாசிகளு மாகிய காவி உடைதாரிகள் மட்டுமல்லாமல், "கருஞ்சட்டை' பெருமை பேசும் பெரியாரிஸ்டு களிலும் போலிகள் நிறைந்து காணப்படுகின்றனர். அதிர்ச்சியோ, ஆச்சரியமோ கொள்ளாதீர்கள்.... இது நிஜம்!

பகுத்தறிவு தந்தை என அழைக் கப்படும் திராவிடக் கழக நிறுவனத் தலைவர் பெரியார் ஈ.வே. ராமசாமியின் பிறந்த நாள் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் - தமிழகம் முழுவதும் பலராலும் நடத்தப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அந்த வகையில் "கீற்று' இணைய தளம் குழுவினர் ஏற்பாட் டில் ""பெரியாரோடு ஒரு பயணம்'' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் 18-09-2010 அன்று சென்னை தேவநேய பாவணர் நூலக கருத் தரங்கு வளாகத்தில் நடைபெற்றது.

பெரியார் நடத்தி வந்த குடியரசு பத்திரிகையின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு கால வரிசைப்படி சுமார் 6 பேர் உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.
பெரியார் திராவிட கழகத் தலைவர் கௌத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட மூத்த பெரியாரிஸ்டுகள் பங்கேற்று பங்கேற்று உரையாற்றினர்.

பெரியார் இன இழிவு நீங்கவும், தீண்டாமைக் கொடுமை, சாதீய இழிவுகள் நீங்கவும் இஸ்லாமே நன் மருந்து எனப் பரிந்துரைத்தார். இஸ்லாம்தான் சாதியை வேரறுத்து சகோதரத்துவத்தையும், சமத்துவத் தையும் தருகிறது என்றெல்லாம் இஸ்லாம் குறித்து தனது மேடைப் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் வெளிப்படுத்தினார்.
"குடியரசு' பத்திரிகை தொகுப்பு களின் செய்திகளைப் பார்த்தால், பெரியார் அனைத்து விதமான இழிவுகளிலிருந்தும் விடுபட இஸ் லாம் மார்க்கத்தை தீர்வாகச் சொல்லியிருப்பது விளங்கும். தனது பேச்சுக்களில் எழுத்துக்களில் இஸ் லாத்தை வெகுவாகப் பாராட்டியுள் ளார். மதம் கூடாது, கடவுள் இல்லை என்ற பரப்புரை செய்த அவர், சமத்துவ - சகோதரத்துவ அடிப்படையில், பகுத்தறிவு சிந்த னைக்கு ஒட்டிய இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாத்தைப் பாராட்டி பேசிய செய்தி இன்று பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.
பெரியாரைப் பின்பற்றுகிறோம், பெரியாரின் வாரிசுகள் நாங்கள் தான் எனக் கூறுவோர் எல்லாம் கூட - இஸ்லாம் குறித்த சிந்தனை களை பேச மறுக்கின்றனர். பெரியா ரின் படம் தான் அவர்களுக்குத் தேவை! பாடம் இல்லை! அவரால் திரட்டப்பட்ட லட்சங்கள் தேவை - அவரது லட்சியங்கள் தேவை இல்லை என்ற நோக்குடன் செயல் படுகின்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நிறை வுரையாற்றிய பெரியார் தி.க. தலைவர் கொளத் தூர் மணியின் பேச்சுத் தான் நம்மை ஆச்சரியப்படுத்தியது.

""பெரியார் இஸ்லாத்தைப் பாராட்டியதாக கூறுவது தவறு. அவர் எல்லா மதங்களையும் விமர்சித்துள்ளார். அவர் ஒன்றும் ஏமாளி அல்ல! இஸ்லாத்தைப் பாராட்ட... அவர் தீண்டாமைக் கொடுமையில் சிக்கித் தவித்தவர்க ளுக்கு மட்டும்தான் இஸ்லாத்தைத் தீர்வாகச் சொன்னார். அது குறித்து இன இழிவு ஒழிய இஸ்லாம் என புத்தகம் கூட வந்துள்ளது. சுயமரி யாதைக்காரர்களுக்கும், பெண்ணுரி மையை விரும்புவர்களுக்கும் இஸ் லாத்தை அவர் பரிந்துரைக்க வில்லை.
மேலும் துருக்கியில் புரட்சி நிகழ்த்திய கமால் பாஷாவை பெரி யார் பாராட்டிப் பேசினார். கமால் பாஷா குர்ஆனை தடை செய்தவர், பள்ளிவாசலைப் பூட்டியவர்.
அவரைப் பாராட்டியதிலிருந்தே பெரியார் இஸ்லாம் குறித்த விமர்சன சிந்தனை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. மேலும் பெரி யார் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்து மதத் துக்கே கொண்டு வர நினைத்திருந் தார்'' என்பதாக கொளத்தூர் மணி பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பெரியாரிஸ் என கூறிக் கொள்ளும் ஒருவரது வாயிலிருந்து இப்படியான வார்த் தைகள் வெளிப்பட்டதும், பார்வை யாளராக பங்கேற்றிருந்த நமக்குப் பேரதிர்ச்சி! அப்பொழுதுதான் நமக்கு ஒன்று விளங்கியது. போலிகள் ஆன்மீகத் துறையில் மட்டுமல்ல, அறிவுத் துறையிலும் ஊடுருவியிருக்கின்றனர் என்று!
பெரியாரின் கொள்கைகளைச் சொல்வதாகக் கூறிக் கொண்டு அவரது லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்யக் கூடியவர்களாக அவர்கள் உலவுகின்றனர். பெரியா ரின் கோடிக்கணக்கான சொத்துக் களுக்கு வாரிசுரிமை கொண்டாடும் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் மட்டுமல்லாமல், லட்சியங்களுக்கு உரிமை கொண் டாடுவதாகக் கூறும் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடக் கழகத்தினரும் கூட பெரியாரின் உண்மையான கொள் கைகளை - லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்வதில் குறியாக இருக் கின்றனர்.
வெளியில் பேசும் போது, சாதீய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என கூறிக் கொள்ளும் அவர்கள் ஒவ்வொருவ ரும், அந்தரங்கத்தில் மிகப் பெரிய சாதீய இந்துத்துவா உணர் வாளர்களாக இன்னும் கூர்மையாகச் சொல்வதானால், சாதி வெறியர்களாக - தீவிர இந்துக்களாக உள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சாதி, தீண்டாமை ஒழியக் கூடாது என்பதில் இந்துத்துவ சக்திகளுக்கு நிகராக இவர்களும் உழைத்துக் கொண்டிருக்கின்றார் களே என்ற சிந்தனை எழுகிறது. திகவின் சார்பில் பெரியார் பெய ரால் நடத்தப்படும் கல்லூரிகள், பல்கலைக் கழகத்தில் இதுவரை சமூக நீதி அடிப்படையிலான 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படவே இல்லை.
பெரியாரின் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலை மைப் பொறுப்பில் தாழ்த்தப்பட்ட வர் ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை என கூப்பாடு போடும் பெரியார் திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பில் மட்டும் தலித்களுக்கு வாய்ப்பளிக்கப்பட் டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
இடஒதுக்கீட்டில் தான் இப்படி என்றால் பெண்ணுரிமை விஷயத்தி லாவது கி. வீரமணியும், கொளத் தூர் மணியும நேர்மையாக நடந் துள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாகும். பெரியார் தி.கவின் தலைமைப் பொறுப்பில் எத்தனை பெண்கள் உள்ளனர்? கொளத்தூர் மணி குடும்பத்துப் பெண்கள் முழு உரிமையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றால் இல்லை! இல்லை.... இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
சரி, பெரியார் விரும்பியபடி சுய மரியாதை உணர்வுடனாவது இவர்கள் நடந்து கொள்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

""ஏண்டா வெங்காயம்... சாமின்னு சொல்லி கல்லுக்கும் - சிலைக்கும், மாலையும், மரியாதையும் செய்து பூஜை செய்கிறாயே இது முட்டாள் தனமாக, பகுத்தறிவுக்குப் பொருந் தாத செயலாக உனக்குப்படவில் லையா?'' எனக் கேட்ட பெரியா ருக்கே, இவர்கள் சிலை அமைத்து பூஜை செய்வது சுயமரியாதையா? பகுத்தறிவா?
இப்படி எல்லா வகையிலும் பெரி யாருக்கு எதிராக - அவரது கருத் துக்களுக்கு விரோதமாக செயல்பட் டுக் கொண்டு போலி பெரியாரிஸ்டு களாக உள்ளவர்கள், பெரியாரின் இஸ்லாமிய சிந்தனைகளை இருட் டடிப்புச் செய்வது மட்டுமல்லாமல், திரிவு வேலைகளும் செய்யத் துவங்கி இருக்கின்றனர்.

பெரியார் இஸ்லாத்தைத் தீண் டத்தகாத தலித்துகளுக்கு மட்டும் தான் பரிந்துரைத்தார் என்பது எவ் வளவு பெரிய பொய்? திரிபு வாதம்? தலித்களுக்கு மட்டுமா அவர் சொன்னார்! ஒட்டு மொத்த திரா விட இனமும் இழிவிலிருந்து விடு பட இஸ்லாம் தான் தீர்வு என்ப தாகத்தான் பெரியார் கூறியுள்ளார்.
மேலும் கொளத்தூர் மணி கூறு வது போல், இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் இந்துத்துவாக மாற்ற முயற்சித்தார் என்பது அபாண்டம்! அநியாயம்! அக்கிரமம்! அயோக்கி யத்தனம்!
இப்படி ஒரு சிந்தனையை பெரி யார் எப்போதுமே கொண்டிருக்க வில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் பெரி யார் துருக்கி கமால் பாஷாவை ஆத ரித்தார் என்பதன் மூலம் இஸ் லாத்தை அங்கீகரிக்கவில்லை என்ப தாக கொளத்தூர் மணி கூறுவது அறிவுக்குப் பொருந்தாத விஷயம்.

"குடியரசு' பத்திரிகையில் பெரி யார் மட்டுமே கட்டுரைகள் எழுத வில்லை. பல நேரங்களில் குத்தூசி குருசாமியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி குத்தூசி குருசாமி எழுதிய பல கட்டுரைகள் பெரியார் எழுதியதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுண்டு. இது குறித்து குத்தூசி குருசாமியே வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
துருக்கி கமால் பாஷா குறித்த கட்டுரை குத்தூசி குருசாமி எழுதி யதுதானே தவிர பெரியார் எழுதிய தில்லை. பெரியார் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டிருந்த அளவுக்கு குத்தூசி புரிந்து கொண்டவரல்ல என்பது திராவிட இயக்க ஆய் வாளர்களுக்கு எளிதாகப் புரியும். பெரியார் இஸ்லாத்தை தீர்வாகக் குறிப்பிட்டு பல மேடைகளில் பேசி யுள்ளதால் அதனைத்தான் அவரது கருத்தாகக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தையும், முஸ் லிம் சமுதாயத்தையும் நுட்ப மாக ஆராய்ந்து தெளிவாக பெரி யார் புரிந்து கொண்டிருந்தது போன்று பெரியாரை - அவரது சிந்தனை களை, லட்சியங்களை முழுமையா கத் தெளிவாகப் புரிந்து கொண்ட வர்கள் முஸ்லிம்கள்! முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பெரியாரின் லட் சியங்களை பரப்புரை செய்யத் துவங்கினால் எத்தனை "மணி'கள் வந்தாலும், சதிகள் பல செய்தாலும் இஸ்லாமிய எழுச் சியை - திராவிட இன மறுமலர்ச்சி யைத் தடுக்க முடியாது. முஸ்லிம் அமைப்புகள் - இயக்கங்கள் பெரியாரின் சிந்தனை களை பரப்புரை செய்வது காலத் தின் கட்டாயம்.
- பாபா

Sunday, September 26, 2010

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்


பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும் இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாகசமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நன்றி-இந்நேரம்.காம்

Saturday, September 25, 2010

விஷயத்தை திசை திருப்பும் விவாதப்புலி !

விவாதத்திற்கு அழைத்த சிறை வாசிகளிடம் ஆதாரத்தை கேட்டு
தட்டி கழிக்க பார்க்கும் விவாதப்புலிகளே!நீங்கள் இந்திய தவ்ஹீத்
ஜமாத்தை இழுப்பதேன்?

இது வரைக்கும் ஆதாரம் வாங்கித்தான்
விவாதத்திற்கு சென்றீர்களா?ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி
'இறைவனுக்கு உருவம் இல்லை' என்று ஆதாரங்களை
சமர்பித்த பின் தான் விவாதத்திற்கு ஒப்பு கொண்டீர்களா?


பாக்கர் விசயத்தில் ஆதாரம் கேட்டதற்கு விவாதத்திற்கு வா
நிரூபிக்கிறோம் என்றீர்கள்! இப்போது ஆதாரம் தந்தால் தான்
விவாதம் என சொல்ல வெட்கமில்லையா ? உங்களுக்கு நீங்களே
முரண்பட்டு ஏன் பொய்யர்கள் என்பதை மீண்டும் மீண்டும்
நிருபிகின்றீர்கள்?

இதில்
'ஆண்மையாளர்களாக இருந்தால்'
என
சவால் வேறு! அப்துல் ரஹீம் சவாலை ஏற்று முதலில் 'அதை'
நீங்கள் நிருபியுங்கள் ! யார் யார் கூடி ,உங்களை கொல்ல,
எங்கு சதி செய்தனர்? என நீங்கள் ஆதாரத்தை தந்து நிருபியுங்கள்!

அல்லாஹ்வின் அருள் [PJ] பொய்யனுக்கா? -அந்நஜாத்.

சமீபத்தில் சென்னையில் கூடிய “ததஜ’வின் கூட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததாகவும் “அல்லாஹ்வின் அளப்பரிய அருள்’ இந்த ஜமாஅத்தின் மீது இருந்ததே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்று “உணர்வலை’யில் உளறி இருந்தார்கள். உணர்வு 16-22 ஜூலை 2010.

உண்மையில் அதிக கூட்டம் கூடுவதுதான் அல்லாஹ்வின் அருளுக்கு அங்கீகாரம் என்றால்- இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான கூட்டம் கூடியது முஸ்லிம்கள் பக்கம் அல்ல. மாறாக இணை வைப்பவர்கள், நயவஞ்சகர்கள் மற்றும் பொய்யர்கள் பக்கமே! பெரும் கூட்டத்தைக் காட்டும் பொய்யர்களுக்கு அல்லாஹ்வின் அருள் என்றால், நாளை மறுமையில் பெரும் கூட்டத்திற்கு அல்லாஹ்வின் அருளாக கிடைக்கப் போவது நரக நெருப்பே. இஸ்லாத்திற்கு அடித்தளம் அமைத்த “பத்ர்’ போரில் பெரும் கூட்டம் கூடியது மக்கத்து காபிர்கள் பக்கமே. ஆனால் அல்லாஹ்வின் அருள் யார் பக்கம் இருந்தது? சிறு கூட்டமாக இருந்த நபி தோழர்கள் பக்கமே.

முஸ்லிம்களில் முதல் பொய்யன் முஸைலிமா!
இன்றுPJ (பொய்யன் ஜைனுலாப்தீன்) கூட்டிய கூட்டத்தைப்போல் அன்றைய அரபுலக யமாமா பகுதியில் இருந்த முஸைலிமா பின்னால் பெரும் கூட்டத்தினராக முஸ்லிம்கள் இருந்தனர். நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த முஸ்லிம்கள் குறிப்பாக நஜ்து பிரதேசத்தை சார்ந்தவர்கள் இப்பொய்யனை ஆதரித்தனர். இவன் தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, தனக்கு நபித்துவத்தில் பங்கிருப்பதாக வாதித்தான். இவனது சாதுர்யமான சூனியப் பேச்சால் குர்ஆனுக்கு புது விளக்கம் கொடுத்து முஸ்லிம்களை வழிகெடுத்தான்.

யமாமா பகுதி முஸ்லிம்களுக்கு உண்மை இஸ்லாத்தின் தூதை தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட முயற்சிகளையும், தனது வாதத் திறமையினால் முறியடித்தான். மேலும் தொழுகைக்கு அழைக்கப்படும் “அதான்’ பாங்கொலியிலும் மாற்றம் செய்தான். இன்னும் மதுபானத்தையும் விபச்சாரத்தையும் ஆகுமானதாக (ஹலால்) அறிவித்தான். நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த பொழுது “குடிப்பதில்லை, விபச்சாரம் செய்வதில்லை என்று அவர்களிடம் பைஅத் செய்தோம்; இப்பொழுது நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்ட தால் பைஅத் உறுதிமொழி முடிந்துவிட்டது. இனி மது, மாது ஹலால்’ என்று விளக்கமளித்தான்.

ஐந்து வேளை தொழுகை இனி தேவையில்லை. ஏனென்றால் தானும் நபி என வாதித்த “ஸஜ்ஜா’ எனும் ஏமன் பெண்ணை மணந்து அவளுக்கு மணக் கொடையாக (மஹர்) பஜ்ரு, இஷா தொழுகைகளை அவளுக்கு அளித்து விட்டதால், இனி மூன்று வேளை தொழுதால் போதும் என்று அறிவித்தான். மார்க்கம் மிகவும் லேசாக்கப்பட்டதால் உலக இன்பங்களுக்கு ஆட்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்த வழிகேடனை பின்பற்றினர். பொய்யன் முஸைலிமாவைப் பின்பற்றும் கூட்டம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இறுதியாக ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று அறிவித்தான். இதற்கு அவன் கொடுத்த விளக்கம் அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

“நபியே! அவர்களை பரிசுத்தமாக்கிட, தூய்மைப்படுத்திட அவர்களின் செல்வாங்களிலிருந்து (ஜகாத் எனும்) தர்மத்தை எடுப்பீராக!’ அல்குர்ஆன் 9:103

இந்த இறைக் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தவரை அவர்களிடம் ஜகாத் கொடுத்தோம். இப்பொழுது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டதால் அவர்களிடம் ஜகாத் கொடுக்க முடியாது. ஆகவே ஜகாத் இனி கொடுக்கத் தேவையில்லை என்று அறிவித்தான். ஜகாத் கொடுக்கக் கடமைப்பெற்ற முஸ்லிம்கள் இச்சலுகையினால் அவனை கொண்டாடி மகிழ்ந்து பெரும் கூட்டமாக உருவெடுத்தனர்.

30 பொய்யர்கள் வராதவரை இறுதி நாள் வராது!
என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்தபடி ஒவ்வொரு பொய்யர்களாக அந்தந்தக் காலக் கட்டங்களில் பல பேர் வந்து விட்டனர். நாம் வாழும் இக்காலத்தில் வந்த பொய்யன்தான் “ததஜ’ (தமிழ்நாடு தஜ்ஜால் ஜமாஅத்) நிறுவிய P.J. தமிழ் நாட்டு தஜ்ஜால் (பொய்யன்) முஸைலிமாவை பின்பற்றியே குர்ஆனுக்கு குதர்க்க மான விளக்கங்கள் கொடுத்து கூட்டம் சேர்த்து வருகிறார். “அவர்களின் செல்வத்தை தூய்மைப் படுத்திடவே ஜகாத்’; எனவே ஒருமுறை ஜகாத் கொடுத்து தூய்மைப்படுத்தப்பட்ட செல்வத்திற்கு மறுபடியும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. பொய்யன் ஜைனுலாப்தீனின் இம் மார்க்கத் தீர்ப்பில் ஈர்க்கப்பட்ட பணக்கார முஸ்லிம்கள் கூட்டம் இவ்வழிகேடனை பின்பற்றுகிறது. இக்கூட்டத்தைப் பார்த்துத்தான் அல்லாஹ்வின் அருள் இவர் ஜமாஅத்திற்கு இருப்பதாக பெருமையடித்திருக்கிறார்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு பொய்யன் முஸைலிமாவிடம் பெரும் கூட்டம் 40 ஆயிரம் பேர். இவனை எதிர்த்துப் போரிட கலீஃபா அபூ பக்கர் சித்தீக் (ரழி) அனுப்பிய படையில் இருந்தவர்கள் 13 ஆயிரம் பேர் மட்டுமே. அல்லாஹ்வின் அருள் யார்மீது இருந்தது? 40 ஆயிரம் பேர் கொண்ட பெரும் கூட்டத்தின் பக்கமா? நிச்சயமாக இல்லை என்று வரலாறு கூறுகிறது.

பொய்யன் ஜெயினுலாப்தீன் என்று எழுதுவது அவதூறா – குறை சொல்லுதலா?
தமிழ்நாடு தஜ்ஜால் ஜமாஅத்(ததஜ) நிறுவனர் PJ பொய்யன் ஜைனுலாப்தீன் என்று நாம் எழுதுவது சில சகோதரர்களுக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தருகிறது. நாடறிந்த நாவலரைப் போய் பொய்யன் என்று எழுதலாமா? என்று கேட்கிறார்கள். இச்சகோதரர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பொது வாழ்வில் உள்ள ஒரு நபரின் செயல்பாடுகள் மார்க்க முரணாக இருக்கும் பொழுது அதை அடையாளம் காட்டி பிற முஸ்லிம்களை எச்சரிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் பாடம் 48ல்
“குழப்பவாதிகள் மற்றும் சந்தேகத்திற்கிட மானவர்கள் குறித்து (மற்றவர்களை எச்சரிக்க) குறை கூறுவது அனுமதிக்கப்பட்டதே’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்கள்.

“ஒரு மனிதர் (எங்கள் வீட்டிற்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை உள்ளே வரச் சொல்லுங்கள், அந்தக் கூட்டதாரிலேயே (இவர்) மோசமானவர்’ என்று (அவரைப் பற்றிச்) சொன்னார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடமும் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள், பிறகு அவரிடம் கனிவாகவே பேசினீர்களே!’ என்று கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஆயிஷாவே! மக்கள் எவரது அருவருப்பான பேச்சுக்களிலிருந்து (தங்களை) தற்காத்துக்கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்!’ (அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்று கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) புகாரீ-6054.

நாம் வெறுங்கையுடன் வெளியேறினோம்!
PJ ஐ பொய்யன் ஜெயினுலாபிதீன் என்று எழுதுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அனைவரும் அறிந்த ஒன்றை மட்டும் பார்ப்போம்.
தமுமுக என்ற பெயர் அவர்களிடம் இருந்தது; அதன் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவர்களிடம் இருந்தன. அனைத்து கிளைகளும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. “நாம் வெறுங்கையுடன் வெளியேறினோம். உணர்வு 16-22 ஜூலை 2010 பக்கம் 2.
“தமுமுக கட்டிட நிதி’ என்று பொது மக்களிடமிருந்து வசூலித்த பணத்தால் வாங்கப் பட்ட கோடிக்கணக்கான மதிப்புடைய கட்டிடங்களையும், தமுமுகவிற்காக நடத்தப்பட்ட “உணர்வு’ பத்திரிக்கையையும் தன் பெயரில் வைத்துக் கொண்டு இவ்விரண்டையும் தமுமுக விடம் ஒப்படைக்காமல் மோசடியாக அபகரித்த பொய்யர் எழுதுகிறார் “நாம் வெறும் கையுடன் வெளியேறினோம்’ என்று.

இவர் உண்மையில் நேர்மையாளர், வாய்மையாளர், அல்லாஹ்விற்கு அஞ்சுபவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தமுமுகவிற்காக வாங்கப்பட்டு தன்னிடம் இருக்கும் கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் தமுமுகவிடம் ஒப்படைத்து விட்டு வெளி வந்திருக்க வேண்டும். பொய்யர்கள் உலக ஆதாயத்திற்காக எதையும் செய்வார்கள். பொய்யனை பொய்யன் என்று தான் எழுதவேண்டும். இது தான் நபிவழி. நபி (ஸல்) அவர்களுக்கு பொய்யன் முஸைலிமா ஒரு கடிதம் எழுதி, தானும் நபித்துவத்தில் பங்காளியாக்கப்பட்டுள்ளதாக வாதித் தான். இவனுக்கு நபி(ஸல்) ஒரு கடிதம் எழுதினார்கள்.
“அருளாளன், அன்புடையோன் அல்லாஹ் வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுவிடமிருந்து பொய்யனான முஸைலிமாவிற்கு, இறைவனை போற்றி புகழ்ந்த பின்-நேர்வழியை பின்பற்று கின்ற அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்! சந்தேகமில்லாமல் இந்த உலகமும் அதில் உள்ள அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் தான் விரும்பியவர்களுக்கு அதிலிருந்து வழங்கி இருக்கின்றான். இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது’ என்று குறிப்பிட்டுருந்தார்கள். ஜாதுல் மஆது

பொய்யர்களை பொய்யன் என்று அடையாளம் காட்டுவது தவறு கிடையாது என்று PJயும் ஒப்புக் கொள்கிறார். ஆகவே சகோதரர்கள் யாரும் மன வருத்தம் அடையத் தேவையில்லை.

PJ அடையாளம் காட்டும் பொய்யர்.
“பாதை மாறிய பக்ரி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஹாமித் பக்ரியை பசப்பு மொழியாளர்! பச்சைப் பொய்யர்! முனாஃபிக் என்று புகழ்ந்து(?) எழுதிவிட்டு இறுதியில் தன் சர்வாதிகாரத்தைக் காட்டி பக்தர்களை மிரட்டி தன் கஸ்டடியில் வைத்துக்கொள்ள முயல்கிறார். “இன்றைக்கு நம்மில் சிலரிடமும் தலைக்கனம் இருக்கின்றது. ஜமாஅத்தினால்தான் நாம் என்பதை விடுத்து விட்டு, நம்மால்தான் இந்த ஜமாஅத் என்ற கர்வம் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்; அவர்களது முடிவு இப்படித்தான் இருக்கும்.
“ஏகத்துவம்’ ஆகஸ்ட் 2010 பக்கம் 10,11

அந்நஜாத்தில் இருக்கும்போது நஜாத்தான் பீ.ஜெ., பீ.ஜெ.தான் நஜாத் என தனது பக்தர்களைக் கொண்டு கூற வைத்தார்; இன்று த.த.ஜ. தான் பீ.ஜெ., பீ.ஜெ. தான் த.த.ஜ. என்ற மாயையை பக்தர்களைக் கொண்டு உருவாக்கிக் கொண்டு இப்படி ஊருக்கு உபதேசம் செய்கிறார்.

எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை. (நஜாத், ஆகஸ்ட் 1986 பக்.12)
புரோகிதர் முறையை மாற்றியமைத்து மக்கள் தாங்களே தங்களின் தீனுடைய காரியங்களை நடைமுறைப்படுத்தும் நிலைமைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம். நாங்கள் புரோகிதர்களைச் சப்ளை செய்வதில்லை.
(நஜாத், ஜூன் 1986 பக்.2)

இப்படி உறுதி அளித்து அந்நஜாத்தில் பகிரங்கமாக எழுதியவர் அதிலிருந்து தடம் புரண்டு ஆக், ஜாக், தமுமுக, முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் ஐக்கிய பேரவை, அனைத்து தவ்ஹீத் கூட்ட மைப்பு, ததஜ, இதஜ என பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருக்கிறவரும், பல புரோகித மதரஸாக்களை உருவாக்கி புரோகிதர்களை சப்ளை செய்து கொண்டிருக்கும் பொய்யன் ஜெயினுலாப்தீனுக்கு அவர் ஹாமித் பக்ரிக்கு சூட்டியுள்ள புகழாரங்கள்(?) அனைத்தும் பொருந்துமா? இல்லையா? இஸ்லாத்தை விட தன்னுடைய ததஜ அமைப்பே சரியானது; அதிலிருந்து எந்த நிலையிலும் யாரும் வெளியேறக் கூடாது என தனது பக்தர்களை மிரட்டி இருப்பது எதைக் குறிக்கிறது? அவரது ஆணவத்தைத்தானே. ததஜவிலிருந்து அவரே வெளியேறும் நிலை ஏற்பட்டால், இன்று ஜாக்கையும், தமுமுகவையும் தூற்றுவதுபோல் தூற்றமாட்டாரா? தன்னுடைய பேச்சை வேதவாக்காகக் கொண்டு தனது பக்தர்கள் அந்நஜாத்தைப் படிப்பதே இல்லை என்ற குருட்டு தைரியத்திலல்லவா அந்நஜாத் துடைத்தெறியப்பட்டது எனப் பிதற்றியுள்ளார் பொய்யன் ஜெயினுலாப்தீன்.

அந்நஜாத்தில் ஆசிரியர் பணிக்கு மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு “நான் ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவுமில்லை; வாங்குவதாகவும் இல்லை’ (அந்நஜாத், ஜூன் 1986, பக்.3) என்ற பச்சைப் பொய்யை எழுதியவர்தானே பொய்யன் ஜெயினுலாப்தீன்.

பொய்யன் ஜைனுலாப்தீன் கூறுவது பச்சைப் பொய் என்பது மவ்லவிகளை நம்பாமல், குறிப்பாக பொய்யன் பீ.ஜே.யை நம்பாமல் சுயமாக குர்ஆன், ஹதீஸை படித்து விளங்குகிற அனைவரும் அறிந்ததே. அல்லாஹ்வின் உதவியால் “அந்நஜாத்’ பத்திரிக்கை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும், விளம்பரமுமில்லாமல் கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து இன்றும் புதுப் பொலிவுடன் வெளிவந்து கொண்டிருப்பதற்கு இக்கட்டுரையே சாட்சி. மக்களின் கூட்டத்தை சேர்த்து பலம் காட்டவோ, மக்களை திருப்திப் படுத்துவதற்காக எதையாவது எழுதி வாசகர் எண்ணிக்கையை உயர்த்துவதோ அந்நஜாத்தின் நோக்கமல்ல. குறிப்பாக கூட்டத்தை சேர்ப்பது அந்நஜாத்தின் வேலையல்ல. கூட்டத்தை சேர்ப்பதற்காக நபிமார்கள் அனுப்பப்படவில்லை. அல்லாஹ்வின் செய்தியை சொல்வது மட்டுமே அவர்கள் வேலையாக இருந்தது. அந்நஜாத்தின் பணியும் இதுதான். அந்நஜாத் இதழை எத்தனை பேர் படிக்கிறார்கள். எவ்வளவு பேர் ஆதரிக்கிறார்கள் என்று கணக்கு போடுவதும் எங்கள் வேலை அல்ல.

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும்: “தெளிவாக எடுத்துச் சொல்வதை தவிர(வேறு எதுவும்) எம்மீது கடமையில்லை’ (அல்குர்ஆன் 36:17)

அல்லாஹ் நாடியவர்கள் சத்தியத்தைப் படிப்பார்கள், விளங்குவார்கள்; தங்கள் வாழ்க்கையில் கடை பிடித்து (நஜாத்) ஈடேற்றம் பெறுவார்கள். அந்நஜாத் படிப்பவர்கள் அனைவரும் எங்கள் பின்னால் வரவேண்டும் என்று எவரையும் நாங்கள் அழைக்கவில்லை. மக்கள் கூட்டத்தைத் திரட்டுவது இப்லீசின் வேலை; நபிமார்கள், நேர்வழி நடப்பவர்கள் வேலை அல்ல. வழி கெட்ட 72 பிரிவினர்கள் மட்டுமே மக்கள் கூட்டத்தை தம் பின்னே திரட்டி பலம் காட்டுவார்கள். சத்தியத்தை உள்ளது உள்ளபடி உரைப்பது மட்டுமே அந்நஜாத்தின் பணி.

உதாரணமாக: சென்னையில் அல்துல்லாஹ் ஜமாலியுடன் நடந்த விவாதத்தில் “எங்கள் ஜமாஅத்தின் வீரியம் அதிகம், நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸில் (SMS) பத்தாயிரம் பேரை உடனே கூட்டி காட்டுவோம். உங்களால் முடியுமா? “அதுபோல நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுங்கள். அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்கு கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம். சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார். பி.ஜெ.’ ஏகத்துவம் ஆகஸ்ட் 2010 பக்.43

பொய் நபி மிர்சா குலாமைப் பின்பற்றும் காதியானி முஸ்லிம்கள் ஜமாஅத் உலகளாவிய அளவில் 195 நாடுகளில், 18 கோடி மக்களையும் பல்லாயிரம் கோடி சொத்துக்களையும், அதன் தலைவர் நிகழ்த்தும் ஜும்ஆ உரையை உலக முழுதுமுள்ளவர்கள் கேட்கும் அளவில் ஒலி, ஒளிபரப்பு வசதியும் பெற்றிருக்கிறார்களே? அவர்கள் நேர்வழியில் இருப்பதாகப் பொய்யன் ஜெயினுலாப்தீன் ஒப்புக் கொள்வாரா? இவர் அவர்களை முஸ்லிம்களாகவே ஏற்பதில்லையே! அதே நிலை தான் பொய்யன் பீ.ஜைனுலாப்தீன் இன்றைய நிலையும்.

இன்ஷா அல்லாஹ் பொய்யன் ஜைனுலாப்தீன் எண்ணப்படி “அந்நஜாத்’ இதழ் இருக்கும் இடம் தெரியாமல் அல்லாஹ் துடைத்தெறிந்து விட்டாலும், அல்ஹம்துலில்லாஹ் என்றுதான் கூறுவோம். இதனால் சத்தியம் அழிந்துவிட்டது. பொய்யர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று பொருளாகாது. ஒரு வரலாற்று சம்பவத்தை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

கலீபா உஸ்மான்(ரழி) அவர்களின் இறுதிக்காலம்
இஸ்லாத்தின் முதல் பிரிவினைவாதிகள், குழப்பவாதிகள், அதிதீவிர தவ்ஹீது பேசிய கலகக் கும்பல் கலீஃபா உஸ்மான்(ரழி) அவர்கள் வீட்டை முற்றுகை இட்டனர். கலீஃபாவிற்கு ஆதரவாக ஒரு சில தனி நபர்களைத் தவிர மதீனாவின் ஆதரவாளர்கள் ஒருவரும் இல்லை. அவருக்கு எதிராக பெரும் கலகக் கூட்டம் சூழ்ந்திருந்தார்கள். முதலில் பள்ளிக்கு தொழ வருவதை தடுத்தார்கள்; அவர்களின் வீட்டிற்குள் உணவு மற்றும் அத்தியாவசிய பண்டங்களைக் கூட கொண்டு போவதை தடை செய்தனர். இறுதியில் குடிப்பதற்கு தண்ணீரும் மறுக்கப்பட்டது. அன்று உஸ்மான்(ரழி) அறையில் நுழைந்து அவரது தலையில் அடித்தார்கள். அவர்களின் மனைவி நைலா அவர்கள் கணவன் மீது விழுந்து அவர்களை பாதுகாக்க முயன்றார்கள். கலகக்காரர்களின் வாள் வீச்சில் அவரது விரல்கள் துண்டாகி விழுந்தன. உஸ்மான்(ரழி) அவர்கள் மேல் விழுந்து பாதுகாத்த மனைவியை அப்புறப்படுத்திவிட்டு உஸ்மான் (ரழி) அவர்களை கலகக்காரன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் ஆட்கள் சரமாரியாக தாக்கி கொன்றார்கள். அன்று வெள்ளிக்கிழமை துல்ஹத் 18 ஹிஜிரி 35.

“அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாவான்’ என்ற 2:137 வசனத்தை ஓதிய நிலையில் உயிர் பிரிந்தது. இன்னாலில்லாஹீ… உஸ்மான்(ரழி) அவர்கள் இறந்து மூன்று நாட்களான பின்பும் அவர்கள் ஜனஸாவை அடக்கம் செய்யவிடாமல் வீட்டை சுற்றி முற்றுகையிட்டனர். உடலை குளிப் பாட்ட தண்ணீர் இல்லை. பிறகு இருள் சூழ்ந்த பிறகு சிலரின் உதவியுடன் உடலை தூக்கி வந்தனர். ஜனஸாவை சுமக்க சந்தூக் இல்லை. அடக்கம் செய்யப் போவதை அறிந்த கலகக்காரர்களில் சிலர் ஜனஸாவின் மீது கல்லெறிந்தார்கள். பின்பு அவரது உடல் “பகீ அல் கர்க்கத்’ எனும் அடக்கஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் கூடிய அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் ஆட்கள் முஸ்லிம்களை அடக்கும் கபர்ஸ்தானில் இவரை அடக்கக் கூடாது என்று மீண்டும் கலவரம் செய்தனர். பிறகு வேறு வழியின்று உஸ்மான்(ரழி) அவர்களின் உடல் முஸ்லிம் கபர்ஸ்தானிற்கு அருகிலிருந்த யூதர்களின் அடக்கஸ்தலமாகிய “ஹுஷ் கவ்கப்’ என்ற இடத்தில் அவசர அவசரமாக அடக்கப் பட்டது’ ஆதாரம்: “மஹ்மூத் அஹ்மத் கழன் ஃபர்’ ரின் கலீபாக்கள் வரலாறு பக்கம் 384.

யார் இந்த உஸ்மான்(ரழி) அவர்கள்?
இஸ்லாத்தை தழுவிய முதல் நால்வரில் ஒருவர்; நபி(ஸல்) அவர்களின் இரு மகள்களை மணமுடித்த மருமகன். அல்லாஹ்வின் பாதையில் தன் செல்வங்களை செலவிட்டவர். சுவனத்திற்கு நன் மாராயம் கூறப்பட்டவர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஆட்சித் தலைவரின் உடல் அடக்கம் இந்தளவிற்கு மோசமாக போனதற்கு யார் காரணம்? காலமெல்லாம் முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு குரல் கொடுத்து தம்மையே அர்ப்பணித்துக் கொண்ட அந்த தலைவர் தமது இறுதி இருப்பிடத்தை யூதர்களின் சமாதிகளுக்கு மத்தியில் அமைத்துக் கொண்ட தால் சத்தியம் தோற்றுவிட்டதா? முதல் பிரிவினைவாதி அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் கலகம் ஜமாஅத்திற்கு அல்லாஹ்வின் அருள் இருந்ததா? அல்லது முஸ்லிம்களுக்குள் பிரிவினை வந்து விடக்கூடாது என்று மெளனம் காத்து மரணத்தை தழுவிய உஸ்மான்(ரழி) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் இருக்கிறதா?

இவ்வுலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை, கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ்வின் அருள் தங்கள் பக்கம் இருக்கிறது என்று பொய்யன் ஜெய்னுலாப்தீன் தம்பட்டம் அடிப்பது அறிவீனம். டில்லி தர்பாரில் இந்தியப் பிரதமர் பக்கத்தில் விசேச ஆசனத்தில் அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் அருள் கிட்டிவிட்டதாக ஆனந்தப்படுவது அறியாமையின் உச்ச கட்டம்.

PJ யின் முன்னோர் முத்தஸீலா ஆலிம்கள்
தன் அற்ப அறிவை சரி கண்டு குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் சுயவிளக்கம் கொடுத்து மக்களை வழி கெடுக்கும் PJயின் முன்னோர்கள் முத்த ஸீலாக்கள். அப்பாஸிய கலீபாக்கள் ஆட்சியில் மன்னர் மாமுனிடம் (ஹிஜ்ரி 218) தங்கள் வாதத் திறமையால் “குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற கருத்தை நிலை நாட்டினார்கள். குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறிய இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் போன்றவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். ஆட்சி அதிகாரம் செலுத்திய முத்தஸீலாக்கள் மீது அல்லாஹ்வின் அருள் இருந்ததா? சிறையில் சித்ரவதை அனுபவித்து “குர்ஆன் இறக்கப்பட்டது’ என்று கூறிய இமாம் அஹ்மது பின் ஹம்பல் மீது அல்லாஹ்வின் அருள் இருக்கிறதா?

நபி(ஸல்) அவர்கள் கூறினர். “இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையே தான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பச் செல்லும். அந்த குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்குச் சுபம் உண்டாகட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா.

பொதுவாக அனைத்து பொய்யர்களும் உலக ஆசை காட்டியே மக்களை தம் பக்கம் இழுத்து கூட்டம் சேர்த்து நரகக் குழியில் தள்ளுவார்கள். அதற்கு ஷைத்தானும் துணை போகிறான். முதல் பொய்யன் முஸைலிமாவும், ஐவேளை தொழுகையை மூன்றாக குறைத்தும், ஜகாத் தேவையில்லை என்று சலுகை காட்டியே கூட்டத்தை சேர்த்தான். தமிழ்நாட்டு பொய்யன் ஜெயினுலாப்தீனும் “ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்று மக்களுக்கு சலுகை செய்தும், முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்று ஆசை வார்த்தை காட்டி கூட்டம் சேர்க்கின்றார். இதுதான் பொய்யர்களின் வழிமுறை.

ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்த இப்லீசின் வழியிலேயே அவனது ஏஜண்டுகள் ஆள் பிடிக்க அலைகிறார்கள். இவர்களுக்கு வெற்றி கிடைக்குமா? பொய்யன் முஸைலிமாவிற்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடித வரிகளை பொய்யன் ஜெயினுலாப்தீனுக்கு சமர்ப்பிப்போம்.

“இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது’.

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை மனதில் கொண்டு செயல்படுவோம். “ஒருவருக் கொருவர் நன்மையை ஏவுங்கள், தீமையிலிருந்து தடுங்கள். இறுதியில் (மக்களிடம்) கஞ்சத்தனம் கோலோச்சுவதையும் மன விருப்பம் பின்பற்றப்படுவதையும், உலக ஆதாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும், ஒவ்வொருவரும் தத்தமது கருத்தையே மெச்சிக் கொள்வதையும் கண்டால், அப்போது உன்னை மட்டும் நீ காப்பாற்றிக்கொள், பொது மக்களை(ப் பற்றி கவலைப்படுவதை) விட்டுவிடு. அறிவிப்பவர்: அபூ ஸஅலபா அல்கு னீ(ரழி) அபூதாவூத். இப்னுமாஜா.

இவ்வுலகில் கிடைக்கும் பண பலம், ஆள்பலம், பட்டம், பதவி, செல்வாக்கு, பெருங்கூட்டம் இவற்றைக் கொண்டு தாம் நேர்வழியில் இருப்பதாகப் பெருமை பேசுபவர்களின் உண்மை நிலையை அறிய 5:100, 6:116, 11:15,16, 23:52-56, 35:5,6,7 43:33-35, 57:20 ஆகிய பதினாறு(16) இறைவாக்குகளை நேரடியாகப் படித்து அறியவும். அல்லாஹ் அருள் புரிவானாக!
-S.ஹலரத் அலி, ஜித்தா.
தகவல் : அந்நஜாத். http://www.annajaath.com/?p=4544