ஓடி ஒளியும் அய்யோக்கியக் கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே
அண்ணனின் அயோக்கியத்தனம் என்று அவரது மோசடிகளை தோலுரித்துக்காட்டி,அதில் ஒன்றான,இந்திய தவ்ஹீத் ஜமாதைப் தடை செய்ய வேண்டும் என்று கூறி காவல் துறைக்கு அவர் சார்பில் அனுப்பப்பட்ட புகார் மனுவின் நகலை உணர்வு இதழில் வெளியிட்டு தன்னை யோக்கியன் என்று நிரூபிக்கச் சொல்லியிருந்தோம்.ஆனால் இது வரை அவர் தன்னை யோக்கியன் என்று நிரூபிக்க முன்வரவில்லை. இன்ஷா அல்லாஹ் அந்த புகார் மனுவின் நகலை விரைவில் நாம் வெளியிட்டு சமுதாயத்தின் பார்வைக்கு வைக்க இருக்கிறோம்.அதற்கு முன் அவரது கேடுகேட்டதனம் ஒன்றை உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.
மேற்கண்ட நமது கேள்விக்கு அண்ணனோ,கள்ள சங்கத்தின் ஒரிஜினல் நிர்வாகிகளோ மூச்சு கூட விடாமல், நமக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாமல்,நிசார் அஹ்மத் என்பவரை வைத்து பதில் என்ற பெயரில் உளற வைத்தது உங்களுக்குத் தெரியும்.ஆனால் உங்களுக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால்... இந்த மெயில் வாதப்பிரதிவாதங்கள் எதுவும் அந்த நிசார் அஹமதுவிற்கு தெரியாது என்பதுதான்!
சகோ.நிசார் அஹ்மத் யார் என்றால் டி என்டி ஜே தலைமையகத்தில்,மாநில நிர்வாகிகளுக்கு டீ,சாப்பாடு வங்கிக்கொடுக்கும்
ஆபீஸ் பாயாக பணியாற்றுபவர்.அவர் பெயரில் டி என் டி ஜே மாநில நிர்வாகி ஒருவர்தான் அண்ணனின் டைரக்ஷன் படி நமக்கு பதில் அளித்துள்ளார்.இதை நாம் நேரடியாக டி என் டி ஜே அலுவலகத்துக்கு நமது சகோதரர் ஒருவரை அனுப்பி தெரிந்து கொண்டோம்.
சகோ. நிசாரையோ,அவரது பணியையோ நாம் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை.நாம் சொல்ல வருவது... ஏன் நேரடியாக பதில் சொல்லாமல் அப்பாவி சகோதரர்களின் பெயரில்,அவருக்கே தெரியாமல் வெளியிடவேண்டும் என்பதுதான். இதில் கூட மோசடி செய்பவர்கள் எந்த அளவிற்கு மற்ற விஷயங்களிலும் செய்யத் துணிவார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்!அதனால் தான் நமக்கு பதில்சொல்ல துப்பில்லாமல் பம்மிப் பதுங்குகிறார்கள்.
நாம் இப்போது நிசார் அகமதை வெளுக்க வைத்துவிட்டதால்..அடுத்து மாநிலச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டு இன்னொருவர் வரலாம்.வரட்டும். இன்ஷா அல்லாஹ் அவரையும் மக்களிடத்தில் நாம் அடையாளம் காட்டுவோம்.ஏன் என்றால் கள்ள சங்கத்தின் ஒரிஜினல் நிர்வாகிகள் சொரணை வந்து வெளியில் வரும்வரை பல நிசார் அஹமதுகள் வருவார்கள் என்பதை நாம் அறிவோம்..நாமும் அந்தத் தலைமையகத்தில் இருந்தவர் என்பதையும் ,அண்ணனின் மூவ்மென்ட்டுகளை ஓரளவு அறிந்தவர்கள் என்பதையும் கருத்தில் கொண்டு இது போன்ற கெட்ட ஆட்டம் விளையாட வேண்டாம் என கேட்டுக்கொள்வதோடு,நேரடியாகவே நமக்கு பதில் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அந்தப்புகார் மனுவின் நகலை அவர்களாக வெளியிட்டால் யோக்கியர்கள் என்று நாம் ஒப்புக்கொள்கிறோம்.அதை நாமாக வெளியிட்டால்...அயோக்கியர்கள்,மோசடிப்பேர்வழிகள் என்று தங்களை அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.அதனால் அவர்களுக்காக ஒரு வாரம் டைம் தருகிறோம்.....
அன்புடன்
அபு பைசல்
0 comments:
Post a Comment