Saturday, December 4, 2010

இன்னும் பதில் சொல்லாத மோசடிப்பேர்வழிகளும் நம் மீது பாயும் முனை மழுங்கிய அம்புகளும் !


அன்பிற்குரிய இணையத்தள வாசக அன்பர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)
நாம் சமுதாய மக்கள் ரிபோர்டில் எழுதிய அண்ணன் பி.ஜே வின் மோசடிகளுக்குக்கும்,கேள்விகளுக்கும் பதில் சொல்ல திராணி,தெம்பு,நேர்மை,நாணயம் இல்லாத அண்ணன் நிசார் என்பவரின் பெயரால் நம் மீது பாய்ந்திருந்தார்.அதற்கு நாம் விளக்கம் கொடுத்ததோடு,மீண்டும் மக்கள் ரிபோர்டில் எழுதியதையே கேள்வியாகக்கேட்டு,தான் யோக்கியன் தான் என்பதை நிரூபிக்கச் சொல்லி இருந்தோம்.அதோடு சகோ.நிசாரை சம்மந்தம் இல்லாதவர் என்று கூறி..(கள்ள) சங்கத்தின் ஒரிஜினல் நிர்வாகிகளுக்கு பதில் சொல்லும் படியும் கேட்டிருந்தோம்.

நாம் நிசாரை சம்மந்தமில்லாதவர் என்று சொன்ன உடனே இப்போது தன்னை மாநிலச் செயலாளர் என அறிமுகப்படுத்துகிறார்..ஆக,முன்பு இவர் செயலாளர் இல்லை.சம்மந்தம் இல்லாமல் தான் மூக்கை நுழைத்திருக்கிறார்.நாம் கேள்வி கேட்டது பீ.ஜே விடமும்,கள்ள சங்கத்தின் நிர்வாகிகளிடமும் தான்.இதுவரை அவர்கள் பதுங்கி இருப்பது அவர்கள் அயோக்கியர்கள் தான் என்பதை தெளிவாக்குகிறது.நாம் ஓபன் கிரௌண்ட் இல் இருந்துதான் நேரடியாக கேட்கிறோம்.இதுவரை பதி இல்லை.அதனால் அவர்கள் அயோக்கியர்கள் என்பதை பிரகடனப்படுத்துகிறோம்.
சகோ. நிசார் அவர்களே..பாவம் முனை மழுங்கிய அம்பு நீங்கள்.அண்ணனின் தும்பிக்கையாக நீளுகிறீர்கள்.உங்களுக்கு இது சம்மந்தமில்லாத விஷயம். உங்களுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.அண்ணன் சொல்வதைக்கேட்டு பேசுகிறீர்கள்.சொந்த புத்தி இருந்தால், இவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே. சங்கப் பதிவில் உள்ள அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் பதில் சொல்லாமல் பதுங்குவது கேவலம் ஆச்சே! என்று விளங்கி இருப்பீர்கள்.

என்னை அறக்கட்டளையில் உறுப்பினராகக்கூட இல்லாதவர் என்று சொல்கிறீர்களே. நான் அப்படி வாதாட வில்லையே! .எனது கேள்வியும் அது சம்மந்தமாக இல்லையே! நான் மாநிலச் செயலாளர்களில் ஒருவன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.ஆனால் நீங்கள் சங்கபப்திவிலும் இல்லை,அந்த நிர்வாகம் கூடி உங்களை செயலாளராக தேர்ந்தேடுத்தாகவும் ஒரு அறிவிப்பும் இல்லையே? எப்படி செயலாளர் ஆனீர்? அண்ணன் வழியை நீங்களும் பின்பற்றி மோசடியாக செயலாளர் ஆகி விட்டீர்களா? போன வாரம் உங்களை யார் என்றே தெரியாதவர் என்று விமர்சித்ததும் செயலாளர் ஆகி விட்டீர்கள்.

உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லாமல் அண்ணன் பீ.ஜே வைச் சாடுகிறேன் என்கிறீர்களே... எனது கேள்வியே அண்ணனுக்கும்,சங்கப்பதிவு நிர்வாகிகளுக்கும் தானே?அவர்களிடம்,"ஏன் அபு பைசலுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் என்னை விட்டு பதில் என்ற பெயரில் உளறிக் கொட்ட வைத்து கேவலப்படுத்துகிறீர்கள்" என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டாமா?
ஆக நீங்கள் சம்மந்தம் இல்லாதவர்.உங்களை ஏவி விட்டவர்களிடம் போய்ச் சொல்லுங்கள் நான் இப்படி எல்லாம் கேட்கிறேன் என்று!அவர்களை பதில் சொல்லச் சொல்லுங்கள்.ஓடி ஒளிவது கோழைத்தனம் என்றும் சொல்லுங்கள்.இப்பொழுதும் என் கேள்விகள் அப்படியே உள்ளது.

காவல் துறையிடத்தில் கொடுத்த புகார் மனுவில் சொல்லப்பட்ட விஷயங்களை இந்த சமுதாயத்தின் மத்தியிலும் சொல்ல ஏன் தயக்கம்?அதனால் அந்த புகார் மனுவின் நகலை உணர்வு இதழில் பிரசுரிக்கச் சொல்லுங்கள்.இதை விட்டு விட்டு நீங்கள் மீண்டும் மீண்டும் உளறுவது மக்கள் மத்தியில் வேறு விதமாக பேசப்படுகிறது.இனியும் எனக்கு பதில் எழுதுவேன் என்று அடம் பிடிததீர்களானால்,அறிவுப்பூர்வமாக வாதங்களை வையுங்கள்.நான் கேட்ட கேள்விகளுக்கு,"அபு பைசல் அறக்கட்டளையில் இல்லை" என்பது பதிலாகாது!
அப்புறம் இன்னொரு விஷயம்.போன முறை சொல்ல மறந்துவிட்டேன்.சகோ. அபு முஹைமீனை கிண்டல் செய்வதாக எண்ணி,அம்பி,புரியுதோன்னோ என்றெல்லாம் நக்கலடித்திருந்தீர்கள். ஆக்ராஹார மொழி நமக்கு ஆகாது.அது நமது கலாச்சாரமும் இல்லை.யார் இன்னொருவருடைய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.அதனால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்

உங்கள் மார்க்கச் சகோதரன்
அபு பைசல்

0 comments:

Post a Comment