Friday, December 17, 2010

நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்..!










நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்..!





அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
நேருக்கு நேர் மோதுவதில் முதுகெலும்பு முறிந்து போன அவதூறு பார்ட்டி
பீஜே, நிசார் என்ற போர்வையில் ஒளிந்து ஓலமிட்டு வருகிறார். ''அந்த பெயரில்
ஒளிந்து ஓலமிடுவது நான் இல்லை; எனக்கும் அதுக்கும் தொடர்பில்லை என்று
பக்கம் பக்கமாக கதை அளக்கலாம். இந்த கதையை மூளையற்ற மூடர்களும், மூளையை தாரைவார்த்த தொண்டர்களும் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் நாம்
நம்பமாட்டோம். பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்  போல், அவருடைய அனைத்து அவதாரங்களையும்  நாம் நிச்சயம்  நன்கு
அறிவோம். எப்படிப்பட்ட பரிணாமத்தை மேற்கொண்டு ஊடுருவினாலும் அவருடைய தோளை
நாம் நிச்சயம் உறிப்போம். [இன்ஷா அல்லாஹ்]

வினாக்கள் அறுபத்திஆறு :
சகோதரர் முகவை அப்பாஸ் சார்பாக அறுபத்தி ஆறு வினாக்கள் அவதூறு பார்ட்டியை நோக்கி தொடுக்கப்பட்டது. அதற்க்கு நேரடியாக பதில் சொல்ல
நாதியற்றவர், நிசார் என்ற பெயரில் ஒளிந்துக்கொண்டு தேய்ந்துபோன  ரிக்கார்டாக, பாலியல்;ஊழல் என்று பறையடிக்கிறார். பதிலுக்கு வழியின்றி, விமர்சனங்களை ஒருமையில் வாரி இறைக்கிறார். ஆபாச வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார். பதில் என்ற பெயரில் அவர் உளறியுள்ளதில் உள்ள மடமைகள், அவர் முழுமைப்படுத்தும் போது முன்வைக்கப்பட்டு முடைநாற்றம் எடுக்கும்  இன்ஷாஅல்லாஹ்..
கோபம் தான் வெளிப்படும் :
".யாரிடத்தில் பதில் இல்லையோ அவரிடத்தில் இருந்து வெளிப்படுவது
கோபமாகத்தான் இருக்கும்
."என்று இந்த அவதூறு பார்ட்டி ,தனது எதிரணியை
பார்த்து அன்று சொன்னார். அதை இன்று அவரே அழகாக பின்பற்றி தன்னிடம்
கேட்கப்படும் கேள்விக்கு பதில் இல்லை என்பதை நிருபித்து வருகிறார்.
பத்திரிகை அறிக்கையாக இருந்தாலும், பிரமுகர்களை  சந்திக்க போவதாக இருந்தாலும்
, கேமராவில் முகம் காட்டுவதாக இருந்தாலும் எல்லாவிஷயத்திலும் தன் அமைப்பின் [டம்மி] தலைவர்களை புறந்தள்ளிவிட்டு
முந்திரி கொட்டையை போல் முந்திகொள்ளும் இவர், எப்படிபட்ட கேள்விக்கும்
நேருக்கு நேர் பதில் சொல்வேன் என்று பிதற்றிகொள்ளும் இவர், பாக்கரின் படைத் தளபதிகளுக்கு பதில் அளிப்பதில் மட்டும் ஏன் முக்காடிட்டு வரவேண்டும்?
"போண்டா"வாங்கி கொடுப்பவர்
பெயரிலும் “டீ” வாங்கி கொடுப்பவர் பெயரிலும் ,ஓடி ஒளிந்து கொண்டு
வருவதற்கு  வெட்கப்பட வேண்டாமா?
போண்டாவையும் , “டீ” யையும் வாங்கி தரும் நபருக்கே, தெரியாமல் அவருடைய
பெயரிலையே அறிக்கைகளையும் ,அவதூறுகளையும் பரப்புவது
குற்றமில்லையா? கிழிந்த முகத்திரையை ஓட்ட வைக்க ஏன் இந்த குறுக்கு வழி? குறுக்கு வழியில் தான் இவருக்கு எத்தனை ஆனத்தம்?

நேரடியாக பதில் சொல்ல முன்வரட்டும் :
கேட்கப்பட்ட அறுபத்திஆறு  கேள்வியும் இவரையும் இவரது ஆளுமையில்  மூச்சுத்திணறும் ததஜவையும் நோக்கி தானே!
அப்படியாயின் இவரும், இவரது ஆளுமையின் கீழ் உள்ள ததஜ நிர்வாகிகள்  தானே அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்பவும் ஒன்றும்
கேட்டுப்  போகவில்லை. அறுபத்திஆறு  கேள்விகளில்,பதினேழு கேள்விகளுக்கு
,கோபத்தில் கொந்தளித்து உளறியது போக  மிச்சமுள்ள கேள்விகளுக்காவது துணிவிருந்தால்
இவர் நேரடியாக பதில் சொல்ல முன்வரட்டும். இல்லை! அடுத்தவனிடம் இருந்த
அமைப்பின் பெயரையே களவாடின எனக்கு என்னிடத்திலே வேலை செய்பவனின்
[நிசார்]பெயரை களவாட முடியாதா  என்றாவது சொல்லட்டும்.
மாறாக, ததஜ வுக்கு சம்மந்தம் இல்லாத கள்ள அமைப்பின் வெப்
சைட்டிலிருந்து பதில் [என்ற பெயரில் உளறல்] வருவது ஏன்? த த ஜ
வுக்கும்-கள்ள அமைப்புக்கும் "அண்டர் டீலிங் "இருக்குப்பா! என்றாவது
சொல்லி தொலைக்கவேண்டும் .

தேய்ந்த ரிகார்டுகள் :
அடுத்து இன்னொன்றையும் சொல்லவேண்டியுள்ளது வைக்கப்பட்ட கேள்வி என்னவோ அதற்கு மட்டும் பதில் சொல்வது  தானே அறிவுடமை. அரசியல் வாதிகள் கூட ஒருவரை ஒருவர்
விமர்சனம் செய்யும் பொழுது அடுத்தவனின் அந்தரங்கத்தை தோண்டி
எடுப்பதில்லையே! வைக்கப்படும் கேள்விகளுக்குத் தானே பதிலளித்து விட்டு செல்கின்றனர். மார்க்கம் அறியா அரசியல் சாணக்கியர்களிடம் இருக்கும்
நாகரீகம் கூட இந்த மார்க்கப் போர்வை போர்த்தியுள்ளவரிடம்  இல்லையே! இது
வெட்கப்பட வேண்டிய விஷயமில்லையா? அது சரி இவருக்கு ஏதுவெட்கம்..?

ஓட்டம் பிடித்தார்;
அறுபத்தி ஆறு கேள்விகளில் ,பதினேழு கேள்விகளுக்கு மட்டும் உளறிய
இவர், மிச்சமுள்ள கேள்விகளுக்கு நாளை பதில் அளிக்கப்படும் என்று சொல்லி
விட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால் இதுவரையிலும் ஆளை காணோம்.
நிலுவையில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் சம்மந்தப்பட்ட இவரோ அல்லது ததஜ
வை சார்ந்தவரோ விடை அளித்து தன்னை யோக்கியர் என்பதனை காட்ட முன்வரட்டும் என்பதை இவரின் கீழான கவனத்திற்கும்.வாசகர்களின் மேலான கவனத்திற்கும்
சொல்லிக்கொள்கிறோம்.
 நேரடியாக பதிலளித்து தான் ஒரு யோக்கியர் என்று நிருபிப்பாரா!அல்லது
ஒளிந்து நின்று தான் ஓலமிடுவேன் என்று சொல்லி தன்னை மகா அயோக்கியன் என்று
ஒத்துக்கொள்வாரா! முடிவு அவர் கையில்...
ஆக்கம் :முபாரக், துணைச்செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
குவைத் மண்டலம்

0 comments:

Post a Comment