Friday, December 10, 2010

நாட்டுக்கு தேவை மனித சட்டம் இல்லை இஸ்லாமிய சட்டம் தான்-விஜயகாந்த் !


நாட்டுக்கு தேவை மனித சட்டம் இல்லை இஸ்லாமிய சட்டம் தான்-விஜயகாந்த்

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இஸ்லாமிய சட்டம் என்றாலே மனிதகுலத்திற்கு எதிரானது.என்றெல்லாம்
விமர்சனம் செய்யும் இஸ்லாமிய எதிரிகளும் ,மனித உரிமை ஆர்வலர்களும்,
அவர்கள் அறிந்தோ அறியாமலோ சில நேரங்களில் இஸ்லாமிய சட்டங்கள் தான் இந்த
பிரச்சனைகளுக்கு தீர்வாகும் என்று ஆதரிக்கும் காட்ச்சியை நாம் கண்டு
வருகிறோம்.


மனிதனின் இத்தகைய நிலைபாடுகள், இஸ்லாமிய சட்டம்தான் அறிவுபூர்வமான சட்டம்
.மனித இனத்திற்கே உகந்த சட்டம்.மனிதனால் எழுதப்பட்ட சட்டமானது
சமூதயத்திளிருந்து விடைபெறவேண்டிய ஒன்று என்ற உண்மையை உரத்த உரைக்கின்றன.

நாட்டில் நிகழ்த்தப்படும் பெருங்குற்றங்கலான கொலை ,கற்பழிப்பு
,விபச்சாரம் போன்றவற்றிற்கு மரணதண்டனைகொடுப்பதின்
மூலமாகவும்,வழிப்பறி,கொள்ளை.திருட்டு போன்றவற்றிற்கு கையை வெட்டுவது
மூலமாகவும் தான் தீர்வு காணமுடியும் ! இந்த தண்டனையால் மட்டுமே
இப்படிப்பட்ட குற்றங்களை குறைக்க முடியும். என்று கூருவதோடுமட்டுமல்லாது,
அந்த அரபுலகில் குறைத்தும் காட்டியதன் விளைவாகத்தான் அத்வானி போன்ற
முஸ்லிம் விரோதிகளும் அரபுநாட்டு சட்டம் தான் வேண்டும் என்ற மனநிலையை
அடைந்ததையும் நம்மால் காணமுடிந்தது.


இந்நிலையில் முஸ்லிம்களை எப்பொழுதும் தீவிரவதிகலாகவே சித்தரித்து படம்
எடுத்து தன்னை தேசபக்தனாக காட்டிவந்த நடிகர் விஜயகாந்த் அரசியல் பரிணாமம்
அடைந்தவுடன் ,அவருடைய நிலை மாறிவருகிறது.இஸ்லாமிய சட்டத்தை ஆதரிக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்ர்.

சமீபத்தில் ,கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில், மழையால் பாதித்த
மக்களுக்கு அரிசி மற்றும் வேட்டி சேலைகளை வழங்கிய அவரிடம்
பத்திரிக்கையாளர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு
நடந்ததற்காக தொலைதொடர்பு துறை மாஜி அ‌மைச்சர் ராஜா பதவி விலகயுல்லாறே
அது குறித்து உங்கள் கருத்து என்ன ?என்று கேட்டதற்கு , பதிலளித்த
விஜயகாந்த் "ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜினாமா பெரிதல்ல. குற்றத்திற்கு தண்டனை
வழங்க @வண்டும். திருடனை பிடித்தால் மட்டும் அவனிடம் பறிமுதல் செய்த பணம்
நகைகளை மேசையில் வைத்து காட்டுகின்றனர். இது ராஜாவிடம் பிடித்தது, இது
கல்மாடியிடம் பிடித்து, என காட்ட வேண்டியது தானே.என்று கூறியது
மட்டுமல்லாமல் குற்றம் செய்தவர்கள் விரலை வெட்டினால் தானே பயம்
வரும்.என்று கூறி நாட்டுக்கு தேவை மனித சட்டம் இல்லை இஸ்லாமிய சட்டம்
தான் என்று உணர்த்திவிட்டார்.நாட்டை ஆளஆசைபடும் விஜயகாந்த் அவரது ஆசை
நிறைவேறினால் இந்த சட்டத்தை நடைமுரைபடுத்துவாரா?பொறுத்திருந்து
பார்ப்போம்.இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

0 comments:

Post a Comment