Wednesday, December 22, 2010

-கிழிபடும் மோசடிக்காரர்களின் பொய்முகம்

ிழிபடும் மோசடிக்காரர்களின் பொய்முகம


அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே .... அஸ்ஸலாமு அலைக்கும்

.ஓடி ஒளியும் அய்யோக்கியக் கூட்டம் என்ற தலைப்பில் நாம் எழுதியவற்றுக்கு பதில் சொல்ல திராணி இல்லாத மோசடிப்பேர் வழிகள்,வாதத்தை திசை திருப்பும் வகையில் நாம் சொல்லாத விஷயத்தை சொல்லி,நம்மைக் கேவலப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு ஒட்டு மொத்த வெளிநாடு வாழ் சகோதரர்களையும் கேவலப்படுத்தும் வகையில் "தமிழகத்தில் பிழைக்க வழியின்றி வெளிநாட்டுக்கு செல்வதாக..." எழுதி,வெளிநாட்டு சகோதரர்கள் மூலம் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.

ஆனாலும் அவர்களின் திரிபுவாதத்தை நாம் இங்கே பதிவு செய்து விட்டு நமது விஷயத்திற்கு வருவோம்.

நாம் சகோ.நிசார் அகமதை கேவலப்படுத்திவிட்டதாகக் கூறுவது எவ்வளவு மோசடித்தனம் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் எழுதிய அந்த வரிகளை உங்கள் பார்வைக்கு அப்படியே வைக்கிறோம்.
இதோ நாம் எழுதியது..

"சகோ.நிசார் அஹ்மத் யார் என்றால் டிஎன்டிஜே தலைமையகத்தில்,மாநில நிர்வாகிகளுக்கு டீ,சாப்பாடு வங்கிக்கொடுக்கும் ஆபீஸ் பாயாக பணியாற்றுபவர்.அவர் பெயரில் டிஎன்டிஜே மாநில நிர்வாகி ஒருவர்தான் அண்ணனின் டைரக்ஷன் படி நமக்கு பதில் அளித்துள்ளார்.இதை நாம் நேரடியாக டிஎன்டிஜே அலுவலகத்துக்கு நமது சகோதரர் ஒருவரை அனுப்பி தெரிந்து கொண்டோம்.சகோ. நிசாரையோ,அவரது பணியையோ நாம் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை.நாம் சொல்ல வருவது... ஏன் நேரடியாக பதில் சொல்லாமல் அப்பாவி சகோதரர்களின் பெயரில்,அவருக்கே தெரியாமல் வெளியிடவேண்டும் என்பதுதான். இதில் கூட மோசடி செய்பவர்கள் எந்த அளவிற்கு மற்ற விஷயங்களிலும் செய்யத் துணிவார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்!."
இப்படி எழுதியதை சாதாரண அறிவு படைத்தவர்களும் சரியாகத்தான் புரிந்துகொள்வார்கள்.ஆனால்
இவர்களின் புத்தி மழுங்கிப்போயிருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் அவர்களது திரிபுவாதம்.

இதற்கு மறுப்பு என்ற பெயரில் எழுதப்புகுந்த கள்ள சங்கத்தில் உறுபினராகக் கூட அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படாத-மாநிலச் செயலாளர் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் சகோ.ஜாபர்,"நிசார் டீ,காபி,வாங்கிக்கொடுப்பவன் அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று அபு பைசல் எழுதி இருந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர் சொல்வதைப் போன்ற வாசகம் நமது மேற்கண்ட வாதத்தில் உள்ளதா என்று பாருங்கள்!

இதில் வேடிக்கை என்ன வென்றால்,உளறிக்கொட்டுவதன் மூலம் அவர்கள் நம்மிடம் வசமாக சிக்க...அவர்களின் முகத்திரையை நாம் பல முறை கிழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பது தான்! ஜாபர் என்பவர் சொல்வதைப் பாருங்கள்! "(அபு பைசல்) இப்படி எழுதுவது தவறு என்பதை உணர்த்துவதற்காகத்தான் அரபு நாட்டில் டிரைவராக இருந்த அபு பைசலை இந்த ஜமாஅத் மாநிலச் செயலாளராக்கியது." என்கிறார்.
என்னை எப்போது இவர்கள் மாநிலச் செயலாளராக்கினார்கள்? நான் செயலாளராக இருந்தது டிஎன்டிஜே வில் தானே? இவர்களது கள்ளச் சங்கத்தில் இல்லையே! இதனை அடுத்த வரியில் உறுதிப்படுத்துவதையும் பாருங்கள்..."இத்தகைய வேறுபாடு காட்டும் போக்கு நமது ஜமாத்தில் இருந்தால் அபு பைசல் மாநில நிர்வாகியாக ஆகியிருக்க முடியாது"என்கிறார்.ஆக, நமது ஜமாஅத் என்பது டிஎன்டிஜேவை.நான் மாநிலச் செயலாளராக இருந்தது டிஎன்டிஜே வில் தான்.டிஎன்டிஜே வில் மா.செ வாக இருந்த என்னை கள்ள சங்கத்தில் இருந்ததாக சொல்வதும் மோசடிதானே?

இப்போது பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது தெரிகிறதா? அண்ணனின் டைரக்ஷன் படி, டிஎன்டிஜே நிர்வாகிகள் தான் நமக்கு பதில் தருகிறார்கள் என்பதும்,அண்ணன் நேரில் வராமல் திரை மறைவில் கோழையாக நிற்கும் அவலமும் புரிகிறதல்லவா? அதனால் தான் இயல்பாக தம்மையும் அறியாமல் நமது ஜமாஅத் என்று சொன்னதன் மூலம் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தான் இதனை எழுதுகிறோம் என்பதை வெளிப்படுத்திவிட்டார்கள்.
நாம் தான் நேரடியாக வந்து பதில் தரச் சொல்கிறோமே,வரவேண்டியதுதானே? இப்போது கள்ள சங்கத்தின் பெயரில் டிஎன்டிஜே வினர் தான் அவதூறாக எழுதுகிறார்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு கேவலப்பட்டிருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காதே!இந்த கேவலமான பிழைப்பு தேவையா?

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்...
நாம் ஆரம்பம் முதலே அண்ணன் பீ ஜே யின் மோசடிகளை மக்கள் ரிபோர்டில் தோலுரித்துக் காட்டி விட்டு,இரண்டு விஷயங்களை மையப்படுத்தி அண்ணனிடம் கேள்வி கேட்டு,நீங்கள் யோக்கியன் என்றால் இவற்றை உணர்வு இதழில் வெளியிடவேண்டும் என்று கேட்டிருந்தோம்.

1 . தமிழக காவல்துறையிடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குறித்து கொடுத்த புகார் மனுவின் நகல்.
2 . கள்ள சங்கத்தின் ஒரிஜினல் நிர்வாகிகளின் பெயர் பட்டியல்.
இப்படிக்கேட்டு, இதில் முதல் விஷயம் சமுதாயத்திற்கும் தெரியும்படி உணர்வு இதழில் பிரசுரிக்குமாறு கடைசியாக நாம் எழுதிய பதிலில் கேட்டிருந்தோம்.அதில் இறுதியாக இப்படி முடித்திருந்தோம்..

"அந்தப் புகார் மனுவின் நகலை அவர்களாக வெளியிட்டால் யோக்கியர்கள் என்று நாம் ஒப்புக்கொள்கிறோம்.அதை நாமாக வெளியிட்டால்...அயோக்கியர்கள்,மோசடிப்பேர்வழிகள் என்று தங்களை அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.அதனால் அவர்களுக்காக ஒரு வாரம் டைம் தருகிறோம்....."

ஆயினும் அவர்கள் நமது சவாலை எதிர்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் சகோ.நிசார் அஹ்மத் பெயரில் வந்து சீன் காட்டியதால்,நிசார் அஹ்மத் யார் என்பதை கண்டறிந்து அவரை அம்பலப்படுத்தினோம்.நாம் இதனை அம்பலப்படுத்தும்போதே அண்ணன் நம் மீது பாய்வார் என்று எதிர்பார்த்தோம்.ஏனெனில் அண்ணனுக்கு எப்பொழுதும் தவறுகளை ஒப்புக்கொள்வதோ,உண்மைகளை ஏற்றுக்கொள்வதோ பிடிக்காத விஷயம்.ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது.நமது கேள்விகள் அண்ணனின் மண்டையை குடைந்திருக்கிறது.எரிச்சலைக் கிளப்பியுள்ளது.கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அண்ணன் நமக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு அவரது ட்ரேட் மார்க்கான தனிப்பட்ட விஷயங்களை சொல்லி நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டியிருக்கிறார்.அண்ணனின் உச்ச கட்ட எரிச்சல் தான் நம்மை புருனை சுல்தானின் பேரனாகவும்,குவைத் மன்னருக்கு மந்திரியாகவும் சித்தரிக்க வைத்துள்ளது
நம்மைப் பற்றிய அவரது தரக்குறைவான விமர்சனத்தை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.

நாம் சகோ.நிசார் பற்றி கண்டுபிடித்து சொன்னதை அவர்கள் மறுக்கவில்லை என்பதும் நாம் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்கிறது.மேலும், நிசார் அஹமது ஒரு அப்பாவி,அவர் பெயரில் அண்ணன் அல்லது அண்ணனின் ஏவலுக்கு இணங்க டிஎன்டிஜே மாநில நிர்வாகி ஒருவர்தான் பதில் தருகிறார் என்றும், ஏன் இந்த கோழைத்தனம்;நேரடியாக நம்மைப்போன்று பதில் சொல்லவேண்டியது தானே என்றும் நாம் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்.அதையும்,"நிசார் அஹமத் பெயரில் எழுதப்படும் அனைத்தும் நிசார் அஹமதால் தக்கவர்களிடம் ஆலோசனை பெற்று எழுதப்படுகிறது." என்று அவர்கள் எழுதியுள்ளதன் மூலம் நமது கூற்றை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை அறியாமலேயே!

நாம் இப்போது கேட்கிறோம்...யார் அந்த தக்கவர்? யாரிடம் பதில் பெற்று சகோ.நிசார் எழுதினார்?அந்த தக்கவர் நம்மைப் பார்த்து பதுங்குவதும்,பின்வாங்குவதும் ஏன்?நேரில் வராமல் ஒரு அப்பாவி சகோதரரை நமக்கு எதிராக பகையாளி ஆக்குவது ஏன்? அந்த தக்கவர் யார் என்பதை இணையத்தள வாசகர்களும் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்.அவர் யார் என்பதை அடையாளப்படுத்துவீர்களா?

அடுத்து,நம்மைப்பார்த்து, "டீ வாங்கிக்கொடுப்பது கேவலமல்ல.அயோக்கியன் என்று தெரிந்து கொண்டே அவனுக்கு வால் பிடிப்பது தான் கேவலம்" என்கிறார்கள்.இது அண்ணனை பின்பற்றுபவர்களுக்கு சொல்ல வேண்டிய வார்த்தை.அவரைத்தான் நாம் அயோக்கியன் நிரூபித்து வருகிறோம். போகிற போக்கில் நம்மை அவர்கள் மிரட்டவும் செய்கிறார்கள்."நீ மௌனமாக இருந்துவிடு.இல்லை என்றால் இன்னும் உன்னைப்பற்றி நான் அறிந்து வைத்துள்ள,உணர்வு அலுவலகத்தில் பணியாற்றியதுவரை உள்ள வண்டவாளங்களை அவிழ்த்துவிடுவேன்"என்கிறார்கள்.இதை அபு.அ.பாசத் என்ற புது சகோதரர் எழுதியுள்ளார்.அவர் யார் என்றே நமக்கு தெரியாது.நாம் உணர்வில் பொறுப்பாசிரியராக பணியாற்றிய காலத்தில் இவர் அங்கு இல்லை.அதனால் நம்மைப்பற்றி அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே இந்த மிரட்டலையும் அண்ணன்தான் விடுக்கிறார் என்பது தெளிவாகிறது.
அண்ணனிடமே கேட்கிறோம்... அந்த புது அவதூறை,எனது வண்டவாளங்களை கேட்க எனக்கும் ஆசையாக உள்ளது.அதை உடனே கால தாமதம் செய்யாமல் வெளியிடுங்கள்.

அண்ணனுக்கும்,அவரது சீட கோடிகளுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.எனக்கு எதிராக அவதூறு,குற்றச்சாட்டு சொல்வதற்கு முன்னால் 8 தடவை யோசிக்க வேண்டும். அந்த வண்டவாளங்களை உணர்வில் வெளியிடத் தயாரா? வெளியிட்டால் நீங்கள் யோக்கியர்கள் என்று ஒப்புக்கொள்கிறேன்.இல்லையென்றால் உங்களை என்ன சொல்லி அழைப்பது?
நீங்கள் வெளியிடுங்கள் இன்ஷா அல்லாஹ் நான் நேரில் உணர்வு அலுவலகத்துக்கு வந்து நீங்கள் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கிறேன்.உங்களைபோல மறைந்து கொண்டு ஈனஸ்வரத்தில் முனக மாட்டேன்.தயவு செய்து கேட்கும் கேள்விகளுக்கு ஆம்,இல்லை என்றாவது பதில் சொல்லித் தொலையுங்கள்.கேள்வி கேட்பவனின் அந்தரங்கத்தை அல்லது பலவீனத்தை தோண்டித் துருவி..அதை பதிலாகத் தருவது என்கிற ட்ரேட் மார்க் பழக்கத்தை மாற்றுங்கள்..மக்கள் முன் கேவலப்படவேண்டாம்.என்று அறிவுரையாக சொல்லிக்கொள்கிறேன்

அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே...காவல்துறைக்கு இவர்கள் அனுப்பிய புகார் மனு குறித்து இவர்களுக்கு நாம் டைம் கொடுத்தும் அதை உணர்வு மூலம் சமுதாயத்தின் பார்வைக்கு வைக்காததால் ,அண்ணனும் அவரைச் சார்ந்தவர்களும் அயோக்கியர்கள்தான் என்பதை நாம் இங்கே பிரகடனப்படுத்துகிறோம்.அதோடு,அவர்கள் காவல்துறைக்கு அனுப்பிய புகார் மனுவின் நகலை நாமே தமிழாக்கத்தோடு அடுத்து வெளியிடுகிறோம்..மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.
அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே...
நேர் வழி காட்டவும்,சகோதரர்களோடு இணக்கத்தை ஏற்படுத்தவும் அல்லாஹ் போதுமானவன்.யா அல்லாஹ்
சகோதரர்களுக்கு மத்தியில் பகையை,பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளிடம் இருந்து காப்பாயாக.நமக்கு நேர் வழி கிடைத்த பின் அதிலிருந்து நம்மை வழி தவற விட்டு விடாதே என்று பிரார்த்திப்போமாக!
அன்புடன்
அபு பைசல்

0 comments:

Post a Comment