Thursday, December 2, 2010

பிரிவினை நாயகன் பி.ஜே..வும், விரயமாகும் சமுதாய பணமும்!

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.

அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்!
தமிழகத்தில் ஏகத்துவத்தை எடுத்து சொல்வதற்காக ,குரான் ஹதீஸ் அடிப்படையில் மக்களை நேர்வழியில் அழைப்பதற்காக களம் கண்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாக , எண்ணிலா துயரங்களையும் தொல்லைகளையும் தாங்கி ,எடுத்து சொல்லி அதன் படி வாழ்ந்து காட்டி , அதன் பலன் நம் கண்ணுக்கு எதிராக கைக்கூடும் நேரத்தில் , நமக்குள்ளே ஏற்பட்ட பிரிவினைகள் ஏகத்துவத்துக்கு பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது!

இதற்கான காரணத்தை நாம் ஆராய்வோமானால் , குரான் ஹதீஸை பின்பற்றும் கொள்கை சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரிவினை அனைத்திற்கும் காரணம் அண்ணன் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது! அவர் சொல்வது மட்டுமே சரியானது! அவருடைய ஆய்வுகளுக்குமேல் எந்த ஆய்வும் இல்லை! அவரோடு இருந்தால் மட்டுமே நேர்வழி ! இல்லை எனில் தடம் புரண்ட கூட்டம். என தன்னை தக்லீத் செய்யும் ஒரு கூட்டத்தை , தன்னுடைய வாத திறமையினால் உருவாக்கி அந்த கூட்டத்தோடு ஒன்று வெளியேறுவார்! அல்லது வெளியேற்றுவார் !

அந்நஜாத் என்ற பத்திரிக்கை மூலம் தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு, ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டபோது , போலியாக ஜமாத்துல் உலமா என்ற பெயரில் ஒரு அமைப்பை பதிவு செய்து ,
அதை அந்நஜாத்தில் செய்தியாக வெளியிட சொன்னபோது அபு அப்தில்லாஹ், ஜமாத்துல் உலமா என்ற பெயரில் ஏற்கனவே ஒரு அமைப்பு இயங்கி கொண்டிருக்கும் போது ,அதன் பெயரில் நீங்கள் செய்வது தவறு என மறுக்க , அதிலிருந்து பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ,கொள்கை சகோதரர்கள் மத்தியில் முதல் பிரிவினை ஏற்படுகிறது!

பின்னர் அண்ணனால் ஆலிம் அவாம் என இரு கூறாக பிரிக்கப்பட்ட ஆலிம்கள் குழு 'ஆக்' என்ற பெயரில் துவங்கப்பட்டு பின்னர் 'ஜாக் ' என்ற பெயரில் தமிழகம் முழுதும் இயங்கி , மக்களை குரான் ஹதீஸ் பக்கம் வென்றெடுத்து , மார்க்ஸ்-களும் , ஓரிறை கொள்கை - நபி வழி யில் பள்ளிகளும் உருவாக்கப்பட்டு வந்த நிலையில் , அதன் உள்ளே இருந்து கொண்டே த..மு.மு.க. என்ற அமைப்பை சமுதாய போராட்டத்திற்காக எனும் பெயரில் தன்னுடைய ஆதரவாளர்களை கொண்டு துவங்குகிறார்

முதலில் மார்கத்திற்காக ஜாக் , சமுதாயதிற்கு த.மு.மு.க என இணைந்து செயல் பட்ட கொள்கை சகோதர்களை இரு கூறாக பிரித்து ஜாக் வழி கெட்ட அமைப்பாக சித்தரிக்கிறார். சித்தரித்ததோடு மட்டுமின்றி, தன்னை பரிசுத்தவானாக காட்ட மற்றவர்களை மோசமானவர்களாக காட்டும் , யூத பார்ப்பன சித்தாந்தத்தின் அடிப்படையில் , விடியோ பே ட்டிகள் எடுத்து வெளியிட்டு ,மற்றவர்களின் மானத்தோடும் கண்ணியத்தோடும் விளையாடும் மோசமான முறையை தமிழக முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்கிறார். கேள்விக்கு பதில் சொல்வதை விட்டு கேள்வி கேட்பவனை பற்றிய மோசமான எண்ணத்தை மக்களுக்கு உருவாக்கி , அதன் மூலம் கேள்வியை திசை திருப்பும் கேடு கெட்ட கலாச்சாரத்தை உருவாக்கினர். இவரிடம் கேள்வி கேட்டால் மானம் மரியாதை மிஞ்சாது! என நல்லவர்களும் , அறிஞர்களும் , சமுதாய நலன் விரும்பிகளும் , விலகி செல்கின்ற அளவுக்கு இவரின் நாராச நாவுக்கு நபிமார்கள். சஹாபாக்கள் . நான்கு இமாம்கள் . இறை நேசர்கள் என எவரும் தப்பியதில்லை! என்கிற அளவுக்கு இவரின் வசவுகள் பிரசித்தம்.

த.மு.மு.க தனது செயல்பாடுகளால் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்டு , தமிழக அரசியலில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து நிற்கும் வேளையில் அதன் உள்ளே இருந்து கொண்டு , அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரில் இன்னொரு இணை அமைப்பை தன் ஆதரவாளர்களை கொண்டு உருவாக்குகிறார். அது மட்டுமின்றி த,மு,மு.க.விற்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் , த.மு.மு.க.டிரஸ்ட் , என்ற டிரஸ்ட்-களை தன் ஆதரவாளர்களை கொண்டு கைப்பற்றியதோடு , ஜாக்குக்கு சொந்தமான மஸ்ஜித் துர் ரஹ்மான், மஸ்ஜிதுல் முபாரக் , திருச்சி சிங்கரதோப்பு பள்ளி போன்றவற்றை , எந்த நெறி முறைகளுமின்றி நாங்கள் தான் ஜாக் அமைப்பு என போலி ஆவணங்கள் தயார் செய்து, சமுதாயத்தின் பெரும் நிதியை விரயமாக்கி , நீதியை விலைக்கு வாங்கி கைப்பற்றினார்.

இன்றைக்கு அதே வழி முறைப்படி தன்னால் வெளியேற்றப்பட்டு ,தனி அமைப்புக்கண்ட, பாக்கர் மற்றும் ஆதரவாளர்களை பல மோசமான் குற்றசாட்டுகளை சுமத்தி ,கேலியும் கிண்டலும் செய்தும், தன்னுடைய பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் ,இணையதளங்களிலும் , எழுதியும் பேசியும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வளர்ச்சியை தடுக்க முடியாத அண்ணன் இறுதியாக தன் வழக்கமான பாணியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை தன் குடும்பத்தார் பெயரில் பொய்யான ஆவணங்கள் தயாரித்து , கொஞ்சமும் மனசாட்சியின்றி, மார்க்க நெறிமுறையின்றி பதிவு செய்துள்ளார் ,

இரண்டாண்டுகளாக நடத்தினாலும் தவ்ஹீத் எனும் பெயர் இருப்பதால் , எனக்கே சொந்தம்! ஏகத்துவத்துக்கு ஏக போக உரிமை எனக்குதான் ! என்று உயர் நீதி மன்றம் சென்று பல லட்சத்தை செலவழித்து இன்றைக்கு டிசம்பர் ஆறு அன்று தமிழகம் முழுதும் வீரியமிக்க போராட்டங்களை அறிவித்திருக்கும் நிலையில் இவர்கள் ஒரு டிரஸ்ட் போராட்டமெல்லாம் நடத்தகூடாது! எங்களின் பெயரை வைத்துக்கொண்டு எங்கள் பெயரை கெடுக்கும் விதமாக போராட்டம் நடத்துகிறார்கள் என நம் நீதி மன்ற முற்றுகை போராட்ட நோட்டீஸ் களை எல்லாம் காட்டி , சங் பரிவாரங்களை விட மோசமாக டிசம்பர் ஆறு போராட்டத்தை தடுக்க , இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளை முடக்க தடையாணை பெற்று வந்திருக்கிறார்.

ஆனால் அவரது எண்ணம் ஈடேறாது! முஸ்லிம்களின் உரிமையை மீட்க, அலஹபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டிக்க நாதியற்று , இந்திய முஸ்லிம்கள் நின்ற வேளையில் உரிமை மீட்க களமிறங்கும் போது இயக்கம் தடை செய்யப்படலாம் ! நீங்கள் கைது செய்யப்படலாம் என்ற போதே அல்லாஹ்வின் பள்ளியை மீட்க, அநீதியை தட்டி கேட்க, எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என அஞ்சாமல் களமிறங்கியவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயல் வீரர்கள் ! உங்களின் தடையாணை அவர்களை எதுவும் செய்ய முடியாது!

பெருநாளின் போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் போஸ்டர் அடித்து குழப்பம் ஏற்படுத்தியவர், கீழக்கரை கேள்வி பதிலின்போது இனி மேல் இ.த.ஜ. பெயரில் எதுவும் செய்ய மாட்டோம் என கூறி விட்டு சென்னை வந்ததும் ஏகத்துவம் தீன் குலப்பெண்மணி படியுங்கள்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என போஸ்டர் அடிக்கறார். பல லட்சம் சொத்து மதிப்ப்பு காட்டி முத்திரை தீர்வை செலுத்தி , வக்கீலுக்கு வாரி இறைத்து தடையாணை பெற்று வந்துள்ளார்.

வளைகுடாவில் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் சகோதர்களே! தங்களின் பணத்தை ,சந்தாக்கள் , நன்கொடை மூலமாக வாரி வழங்குகின்றீர்கள் . ஆனால் நன்மை கிடைக்கும் என நம்பி கொடுக்கும் உங்களின் பணம் தொலைக்கட்சிகளில் மார்க்க நிகழ்ச்சி எனும் பெயரில் மற்றவர்களை அவதூறு சொல்வதற்கும் , கொள்கை சகோதரர்களுக்கு மத்தியில் குழப்பம் ஏற்படுத்த மற்ற இயக்கத்தின் பெயரில் போஸ்டர் அடிப்பதற்கும், வழக்கு என்றும் வக்கீல் என்றும் அடுத்தவன் சொத்தை அபகரிக்க லஞ்சம் கொடுப்பதற்கும் , செலவளிக்கப்படுகிறது ! இதன் மூலம் நீங்களும் பாவத்தாளி யாகாமல் இருக்க வேண்டுமானால் சிந்தியுங்கள் ! தவறுக்கு துணை போகாமல் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துங்கள்! சனிக்கிழமை வரம்பு மீறிய கூட்டத்தாரை தடுக்காமல் இருந்து இறை முனிவுக்கு ஆளான மக்களை போன்று ,நாமும் ஆகி விடாமல் அத்தகைய கூட்டத்தில் இருந்து அல்லாஹ் உங்களையும் என்னையும் காக்கட்டும்!

இப்படிக்கு இப்னு ஹுசைன்.

.

0 comments:

Post a Comment