பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல தலைமையகத்தில் நடைபெற்று வரும் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை[ 24 -12 -2010] மாலை 7 மணியளவில் சிறப்புடன் நடைபெற்றது.
மண்டல பொருளாளர் ராஜ்முஹம்மது அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க, மண்டலசெயலாளர் சாதிக் சதாம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டல அழைப்பாளர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள், சஹாபாக்களின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தனது உரையில் ஏகத்துவ கொள்கைக்காக அன்று சஹாபாக்கள் செய்த தியாகங்களையும், இன்று ஏகத்துவ கொள்கையை சொல்லிக்கொண்டு ஏமாற்றும் பேர்வழிகளையும் அடையாளம் கட்டினார்.
மண்டல துணைச்செயலாளர் முஹம்மது சேட் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
செய்தி வெளியீடு;
-முகவை அப்பாஸ், தலைவர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்.
0 comments:
Post a Comment