விரட்டும் கேள்விகளும்; பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பீஜேயும்!
வார்த்தைக்கு வார்த்தை குர்ஆன்- ஹதீஸ் என்று வார்த்தை ஜாலம் பேசும் வாய்ச்சொல் வீரர் பீஜே, பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை தனது குடும்ப உறுப்பினர்களை கொண்டு களவாடிய களவாணித்தனத்திற்கு மட்டும்
ஆனால் தனது அயோக்கியத்தனத்தை மறைக்க, 'திருடிக் கொண்டு ஓடுபவன்; திருடன்-திருடன் என கத்திக் கொண்டே ஓடுவது போல், நாங்கள் முதலிலேயே பதிவு செய்துவிட்டோம். பாக்கர் அதை சிந்திக்காமல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என அமைப்பை தொடங்கிவிட்டார் என்று ரீல் விட்டார். அதற்கு நாம்,
''முன்பே பதிவு செய்துவிட்டோம் என்று சொல்லும் இந்த பொய்யர்கள் வெளியிட்டுள்ள சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காலம் மார்ச் 2010 என்று உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா? என்று கேட்டவுடன்பல்டியடித்து 8 மாதம் முன்புதான் பதிவு செய்தோம் என்று ஒப்புக்கொண்டு அசடு வழிந்தார் பீஜே.
பின்பு திருடவந்தவனுக்கு தேள் கொட்டிய கதையாக, இப்போது பாக்கர் ஏன் டிரஸ்டில் பதிவு செய்தார் என்று கேட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பி, தனது அயோக்கியத்தனத்தை நியாயப் படுத்தப் பார்க்கிறார். மேலும், நாம் இவரை நோக்கியும், இவரது ஆதிக்கத்தில் தடுமாறும்,
அடுத்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் ஆக்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சான்றிதழை எடுத்துப் போட்டு, அதில் ஐந்து நிர்வாகிகள் தான் இருக்கிறார்கள் என்று புலனாய்வு[!] அறிக்கை வாசிக்கிறார். அதுசரி! இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை கைப்பற்ற, பதிவு செய்ய நிர்வாகிகளாக காட்டிய உண்மையான பட்டியலை வெளியிடத் தயாரா என்று கேட்டோம். இந்த யோக்கியர் வெளியிடவில்லை. பின்பு நாமே அபகரிக்கப்பட்ட அமைப்பின் உண்மையான நிர்வாகிகள் இப்போது மக்கள் முன்பு காட்டப்படுபவர்கள் அல்
இப்போது ஏதோ இதஜ டிரஸ்ட் உறுப்பினர்களை சி.ஐ.ஏ. ரீதியில் புலனாய்வு செய்து கண்டுபிடித்தது போன்று ஃபிலிம் காட்டும் இவர், நாம் இவரின் குடும்ப உறுப்பினர்களை பட்டியலிட்டபோது, அதை மறுக்கமுடியாமல் 'இதெல்லாம் எனது ஆன்மீக[!] பித்தலாட்டத்தில் சகஜமப்பா' என்ற ரீதியில், கண்டுகொள்ளாமல் விட்டார்.
இப்போது மீண்டும் இதஜ டிரஸ்ட் தொடர்பாகவும் , முபாஹலா, பிறை, உள்ளிட்ட சில விஷயங்களை பத்து கேள்விக்குள் அடங்குவதை பல கேள்விகளாக பட்டியலிட்டு, 'நல்லா பாத்துக்கங்க! நானும் கேள்வி கேட்டிருக்கேன்' என்று காட்ட முனைகிறார். அவரது கேள்விக்கு கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் பதிலளிப்போம்.
அதற்கு முன்பாக, இவரை நோக்கி நம்மாலும், நம் சகோதரர்களாலும் எழுப்பப்பட்ட கேள்விகளின் ஒரு பகுதியை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். அதற்கு அவர் பதிலளிக்கட்டும். பின்னர்தான் அவரது எந்த கேள்விக்கும் நாம் பதிலளிப்போம்.
2 அதிகமான சம்பளம் கேட்டு த த ஜ தாவா சென்டரில் இருந்து நான் விலகியதாக கூறுவது பச்சை பொய் இது விசயத்தில் பீ ஜெ முபாஹலாவுக்கு தயாரா ? நான் தயார்.
3 சேலத்திற்கு தாவா சென்டர் மாற்றப்பட்டதால் தான் தாவா சென்டரில் இருந்து விலகினேன் என்பதற்கு த த ஜ மாநில தலைவர் அல்தாபி சாட்சி மறுத்தால் முஹாபலாவிற்கு நான் தயார்.
என்ற அப்துல் ஹமீதின் முபாஹலா அழைப்பை கண்டு, அழைத்த அந்த மூன்று விஷயத்திற்கு மட்டும் முபாஹலாவிர்கு வராமல், தனது தோல்வியை மறைக்க 'பட்டியல்' கதை விட்டு வெருண்டோடியது ஏன் என்று கேட்டோம். பதில் எங்கே?
என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டிய 19 முஸ்லிம்
அமைப்புகளை சமூக விரோத அமைப்புகள் என்று கூறி போஸ்டர் ஒட்டிய அண்ணன் ஜமாத்திற்கு, இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களின் கையை பிடித்துக்கொண்டு பிரதமரையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்திக்கும்போது தேசிய லீக் சமூக விரோத அமைப்பாக அண்ணன் ஜமாஅத்திற்கு தெரியவில்லையா? என்று கேட்டோம். பதில் எங்கே?
இரவு நடந்த விளக்க[!]உரையில், கொலையாளியை 'தற்காப்புவாதி' என்றார்.
அதே விளக்க உரையில் ஆரம்பத்தில் கொலையாளி 'லைசன்ஸ் ஹோல்டர்' என்றார்.
அதே உரையின் இறுதிப்பகுதியில், கொலையாளி 'லைசன்ஸ் ஹோல்டர்' இல்லாமலும் இருக்கலாம் என்றார்.
பிறகு கொலையை கண்டிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியபோது, கொலையாளி துப்பாக்கியுடன் வந்தார்; கொல்லப்பட்டவர்களோ அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயதங்களுடன் இருந்தனர். எனவே கொன்றவர்- கொல்லப்பட்டவர் இருவரும் குற்றத்தில் சமமானவர்கள். எனவே நபிவழிப்படி இந்த படுகொலையை கண்டிக்கக் முடியாது என்றார்.
செங்கல்பட்டில் நடந்த செயற்குழுவில் திருவிடைச்சேரி படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
அமைப்புகள் சார்பாக போஸ்டர் ஓட்டப்பட்டவுடன், இந்த போஸ்டர பாத்து எங்கமேல அரசாங்கம் கை வைச்சுருமா என்று கர்சித்தார்.
எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஒப்புக்கொண்டு, அரசாங்கம் கை வைத்ததை ஒப்புக்கொண்டார்.
எங்கள் மீது திருவிடைச்சேரி ஜமாஅத்தை வழக்குப் போடச்சொல் பார்க்கலாம் என்று பொய்யன் டிஜே மூலம் சவால் விட்டார்.
எங்கள் அமைப்பு உள்ளூர் நிர்வாகிகள் மீது, ஜமாஅத் வழக்கு போட்டுள்ளது என்று அசடு வழிந்தார்.
குத்புதீன் சும்மா எங்க மர்கசுக்கு தொழவந்தவர். அவருக்கும் ஜமாஅத்துக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்றார்.
இன்று குத்புதீன் எங்கள் இயக்க அனுதாபி என்றார். இப்படி பீஜே உளறிய அடுக்கடுக்கான இந்த உளறல்களுக்கு பதில் எங்கே?
குறிப்பு; பீஜே நாம் வைத்துள்ள கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லவேண்டும். திசை திருப்பும் வகையில் பழைய தேய்ந்த ரிக்காடுகளை மீண்டும் ஓடவிடக் கூடாது என்று கூறிக்கொள்கிறோம்.
இன்னும் கேள்விக்கணைகள நீளும் இன்ஷா அல்லாஹ்.
Friday, December 10, 2010
விரட்டும் கேள்விகளும்; பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பீஜேயும்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.இதுவரை ஒரு ஆயத்தையோ- ஒரு ஹதீஸையோ ஆதாரமாக காட்டி தன்னை யோக்கியர் என்று காட்டமுடியவில்லை. ததஜவை நோக்கியும் ஏற்கனவே தொடுத்த கேள்விகளில் ஒன்றுக்கு கூட பதில் சொல்லாமல் மவ்னம் காத்து விட்டு இப்போது தனது கள்ள அமைப்பின் இந்த வார மாநிலச்செயலாளர் பெயரில் கேள்விகள் அடுக்குகிறார். ஐயோ பாவம்! இவர் மாநிலச்செயலாளர் என்று அறிமுகப் படுத்தியவரை குறைந்த பட்சம் தனது கள்ள வெப்சைட்டில் நிர்வாகிகள் பட்டியலில் கூட போடக்காணோம் என்பது தனிக்கதை.ல. மாறாக, அவர்கள் சாட்சாத் பீஜேயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே என்று பட்டியலிட்டோம்.
0 comments:
Post a Comment