Tuesday, December 21, 2010

ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம்.


Copy of 19122010192.jpgCopy of 19122010189.jpgCopy of 19122010190.jpgCopy of 19122010192.jpg

ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம்.

காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் நேற்று மாலை இ.த.ஜ. சார்பில் தெரு முனை கூட்டம் நடை பெற்றது!
அதே நேரத்தில் அபகரிப்பு ஜமாத்தின் நிகழ்ச்சிக்கு பொய்.ஜே.வருகிறார் என பேனர்களும் கொடிகளும் கட்டி, முதல் நாளிருந்தே முட்டாள் அடிமைகள் முண்டா தட்டி வம்பிழுதனர்   பொறுமையை கையாண்ட நம் சகோதர்களால் சண்டை தவிர்க்கப் பட்டது! முடிவில் கூட்டத்தை தடுக்க காவல் துறையில் சென்று நம் மீது புகார் அளித்தனர். காவல் துறையினர் வசம் 'இவர்கள் டிரஸ்ட் கூட்டமெல்லாம் நடத்த கூடாது ' என்று கூற அதெல்லாம் கோர்ட் சொல்லட்டும், அரசாங்கம் முடிவெடுக்கும்! நீங்கள் சொல்ல கூடாது என கண்டித்து அனுப்பினர்.

மண்டபத்தில் நிகழ்ச்சி வைத்திருந்த அவர்கள் மழையாவது நம் தெரு முனைக் கூட்டத்தை தடுக்கும் 
என எதிர் பார்த்து ஏமாந்தனர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் மழையையும் பொருட் படுத்த மக்கள் இது தெருமுனை கூட்டமா ? அல்லது பொதுக்கூட்டமா ? என வியக்கும் வண்ணம் குவிந்தனர். இடையிடையே மழை வந்த போதும் மக்கள் அகலாமல் தொடர்ந்து கூட்டத்தை சிறப்பித்தனர்.

சுவனம் யாருக்கு ? என்ற தலைப்பில் மசுதா ஆலிமாவும், பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு? என்ற தலைப்பில் பொருளாளர் தொண்டியப்பாவும் , INTJ  யாருக்கு? என்ற தலைப்பில் செங்கிஸ் கானும் உரை நிகழ்த்தினர். ஆலந்தூர் மதரசாவில் த.த.ஜ.தன் மீது நிகழ்த்திய வன்முறை மற்றும் பொய்.ஜே. நடந்து கொண்ட விதம் பற்றியும் பேசிய கமாலுதீன் மன்பயி மிகுந்த ஆவேசத்துடன் நிகழ்த்திய உரை நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது!   
         

0 comments:

Post a Comment