Friday, December 17, 2010

கனி மொழியை சந்தித்த மாநில நிர்வாகிகள்.

கனி மொழியை சந்தித்த மாநில நிர்வாகிகள்
Untitled-2.jpg
Untitled-3.jpg
Untitled-1.jpg

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் முஹம்மத் முனீர் மற்றும் ,மாநில செயலாளர் வேளச்சேரி சிராஜ் ஆகியோர் , மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும் ,
முதல்வரின் மகளுமாகிய கனிமொழி எம்.பி.யை சந்தித்து சமுதாயத்திற்கான பல் வேறு
 கோரிக்கைகளை   வலியுறுத்தினர்.
முக்கியமாக மத்தியில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது! மேலும் வேளச்சேரி முஸ்லிம்களின் கோரிக்கையான அடக்கஸ்தலம் பற்றியும் வலியுறுத்தினர். கவனமாக அனைத்தையும் கேட்ட கனி மொழி
தந்தையும் ,தமிழக முதல்வருமான கலைஞரிடத்தில் இது குறித்து பேசுவதாக கூறினார்.

சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு நம்பிக்கை அளித்ததாக வேளச்சேரி கபர்ஸ்தான் கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

2G  விவகாரத்தில் நாடு முழுதும் இருந்து அவரை சந்திக்கவும் , தொலை பேசி தொடர்புகளும்  வந்து கொண்டிருக்கும் நிலையில் ,அவர் தன்னுடைய நேரத்தை ஒதுக்கி தந்தது குறிப்பிடத் தக்கது.    
,

0 comments:

Post a Comment