Thursday, December 2, 2010

நான் அய்யோக்கியன் தான் ஒப்புக்கொண்ட அண்ணன் பீ ஜே

க்கள் ரிப்போர்ட் நவ 19 -25 தேதியிட்ட இதழில் `ஐஎன்டிஜே வின் அசுர வளர்ச்சியும் அண்ணனின் அய்யோக்கியத்தனமும்' என்ற தலைப்பில் அண்ணனின் அயோக்கியத்தனங்களை பட்டியலிட்ட நாம் அதற்ககான சான்றுகளை அடுக்கி பல கேள்விகளை எழுப்பி இருந்தோம்.இன்னும் வெளிப்படையாகவே ,"நாம் அயோக்கியன் அய்யோக்கியன் என்று சொல்கிறோமே; அதை பொய்யாக்கி நான் யோக்கியன் தான் என்பதை நிரூபிக்க திராணி இருக்கிறதா? என்று அறிவுப்பூர்வமாக,நேர்மையாக கேட்டிருந்தோம்.,நமது இந்த முகப்புக் கட்டுரையை எடுத்துக்காட்டி சகோ.அபு முஹைமினும் கேள்வி கேட்டிருந்தார்.இதற்கு,அண்ணன் நேரடியாக பதில் சொல்லாமல்,புதிதாக நிசார் அஹ்மத் என்ற சகோதரரை நமக்கும்,சகோ.அபு முஹைமினுக்கும் எதிராக கொம்பு சீவி விட்டு ,ஒரு புறம் சகோதரர்களுக்கிடையில் நபி வழிக்கு மாற்றமாக பகைமையை
உண்டாக்குவதோடு நிசார் அஹமதையும் ஜீரோவாக காட்டியிருக்கிறார்.

ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது.அண்ணனுக்கு நமது கட்டுரை நடு மண்டையில் `நச்' என்று அடித்திருக்கிறது.அதனால் தான் நமக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாமல்,தடுமாறி, தான் அயோக்கியன் தான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நாம் என்ன கேட்டிருந்தோம்?

1 . மோசடியாக ஆரம்பிக்கப்பட்ட இ.த.ஜ.நிர்வாகிகள் லிஸ்டில் சம்பந்தம் இல்லாத மூவர் பேர் கள்ள வெப்சைட்டில் போட்டிருகிறீர்களே நேர்மை இருந்தால் சங்கப்பதிவிலே பதிவு செய்யப்பட்ட நிர்வாகிகளின் லிஸ்டை வெளியிட்டிருக்க வேண்டுமா இல்லையா? வெளியிட்டால் மக்கள் அண்ணனின் முகத்தில் காறித்துப்பிவிடுவார்கள் என நினைத்து அவற்றை வெளியிடாமல் தவிர்த்திருக்கிறார்!
2 .இந்திய தௌஹீத் ஜமாத்தை தடை செய்யக்கோரி காவல் துறைக்கு இந்த யோக்கியன் அனுப்பிய புகார் மனுவில்;இந்த யோக்கியரின் மகன் தலைமையிலான இந்த அமைப்பு ரத்ததான முகாம்களை நடத்தி பல விருதுகளை வாங்கி இருக்கிறது. இவரது மகன் தலைமையில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான இட ஒதுக்கீட்டிற்காக போராடி,இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்திருக்கிறது.என்றெல்லாம் மோசடியாக காவல் துறைக்கு பொய்யான தகவல்களை தந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டி,இந்த புகார் மனுவின் நகலை உணர்வு இதழிலும்,இணையதளத்திலும் வெளியிடத் திராணி இருக்கிறதா?

3 . தௌஹீத் கொள்கையை இவர்கள் கேவலப்படுத்திவிட்டார்கள்.அதற்கு இடமளித்துவிடக்கூடாது என்று தான் அதே பெயரில் பதிவு செய்தோம் என்று கூறும் அண்ணன் என்ன செய்திருக்க வேண்டும்? இவரது (கள்ள) அமைப்பிற்கு தௌஹீத்வாதிகளையல்லவா போட்டிருக்கவேண்டும்?இவரது மகன் முகம்மதுவுக்கும்,மச்சான் ஹிதாயத்துல்லாவிற்கும்-தவ்ஹீதுக்கும் என்ன சம்மந்தம்?இவர்கள் தொழுத நிலையில் எவரும் பார்த்ததில்லையே!


-இப்படி நமது கட்டுரை முழுவதும் அண்ணனின் மோசடிகளை தோலுரித்துக்காட்டி இருந்தோம்.ஆயினும் மேற்கண்ட மூன்றுக்கு மட்டும் நியாயமான காரணங்களோடு பதில் சொல்லி, அபு பைசல் சொல்வது பொய்,நான் யோக்கியன் தான் என்று நிரூபிப்பார் எனநினைத்திருந்தோம் ஆனால் தான் மகா அயோக்கியன் என்பதை சகோ.நிசரை வைத்து வெளிப்படுத்தியுள்ளார் .நிசாரும் அறிவுகெட்டதனமாக உளறிக் கொட்டியுள்ளார்.நாம் கேட்ட கேள்வி அண்ணனுக்கு புரிந்து விட்டது.பாவம் நிசார். ஒரிஜினல் நிர்வாகிகளின் பெயரை ஏன் வெளியிடவில்லை என்று கேட்டால்.. பதிவு அலுவலகத்தில் யார் போய் கேட்டாலும் இன்னொரு அமைப்பின் நிர்வாகிகள் லிஸ்டை கொடுத்துவிடுவார்களாம்.(யார் போய் கேட்டாலும் தரமாட்டார்கள் என்பது தனி விஷயம்) ஆனால் நமது கேள்வி கூட புரியாமல் பதில் சொல்லப் புகுந்த்திருகிறார்கள்.
சரி,இவர்களது இதே பதிலை நமது இரண்டாவது கேள்விக்கும் எடுத்துக்கொள்வோமா?
கமிஷனர்,டி ஜி பி அலுவலகத்திலும் யார் போய்க் கேட்டாலும் இவர்கள் அளித்த புகார் மனுவின் நகலை கொடுத்துவிடுவார்களா? அதற்கு ஏன் பதில் சொல்லவில்லை?இப்பொழுது இவரது யோக்கியத்தனம் சந்தி சிரிக்கிறதா?

இன்னொரு விஷயம்... ஒரு அமைப்பை இன்னொரு தரப்பு விமர்சனம் பண்ணினால் அந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் தான் பதில் சொல்லவேண்டும். இப்படி பதில் சொல்வதுதான் உலக நியதி.மரபும் கூட.இந்த சாதாரண அறிவுகூட இல்லாமல் நிசாரை பதிலடி கொடுக்க தேர்ந்தெடுத்த அண்ணனின் அறிவை பாராட்டத்தான் வேண்டும்.இந்த லட்சணத்தில் சகோ.அபு முஹைமினை அரை வேக்காடு என்று சொல்பவர்கள் கால் வேக்காடு தானே? நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கள்ள சங்கத்தின் ஒரிஜினல் நிர்வாகிகள் ஓடி ஒளிவது கோழைத்தனம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.அடுத்தவனை வைத்து ஆதாயம் அடைவது கேவலம் இல்லையா? நாம் இவ்வளவு கேட்கிறோமே மானம்,ரோஷம்,சூடு ,சொரணை எதுவுமே இல்லையா அந்த நிர்வாகிகளுக்கு ? இரண்டு முஸ்லிம் சகோதரர்களுக்கு இடையில் சண்டை மூட்டி விடுவது யார் செய்யும் காரியம்? இது மார்க்க வரம்பை மீறுவது ஆகாதா? ஒரு மார்க்க அறிஞர் செய்யும் காரியமா இது? நமக்கும் சகோ. நிசாருக்கும் என்ன பகை?அபு முஹைமீனுக்கும் நிசாருக்கும் என்ன சண்டை?கள்ள சங்கத்திற்கும் நிசாருக்கும் என்ன சம்மந்தம்? மார்கத்தின் சாதாரண பண்பை மீறும் இவர்கள் யார்?முஸ்லிம் என்று அழைக்கக்கூட தகுதி உண்டா?

நமது சவால் அப்படியே உள்ளது.மீண்டும் கேட்கிறோம் நாம் கேட்ட படி,நேரடியாக,நேர்மையாக உணர்வு இதழில் காவல் துறைக்கு இவர்கள் அனுப்பிய புகார் மனுவை-ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட அந்த புகரரின் பிரதியை அப்படியே வெளியிட்டு, தான் யோக்கியன் தான் என்பதை நிரூபிக்க முன் வரவேண்டும்.அதை பார்த்து யார் யோக்கியன் என்று மக்கள் முடிவு செய்யட்டும். இப்படி வெளியிடாதவரை அண்ணன் அய்யோக்கியன் என்று நாம் சொன்னதில் கடுகளவும் மாற்றமும் இல்லை.

இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டியது உள்ளது.
நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு...அபு பைசல் புகையிலை போடுகிறான்-புடலங்காய் புடுங்குகிறான் என்று சொல்வது பதிலாகாது.நாம் மறுக்க மாட்டோம்.புகையிலை பயன்படுத்தியது உண்மைதான்.எங்கள் நிர்வாகிகள் சிலர் மார்க்கத்திற்கு விரோதமான காரியம் மட்டுமல்ல;மாநில நிர்வாகி பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சுட்டிக்காட்டிய போது அந்த காரியத்தை நிறுத்தி விட்டோம்.வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்களாம்.அதை உங்கள் இமயம் டி வி யில் மகராசனாக போடுங்கள். இதற்கு முன் சிகரட் பிடித்தோம்(அண்ணனைப் போன்று துண்டு பீடி அடிக்கவில்லை எனபது தனி விஷயம் ) அதையும் சேர்த்தே போடுங்கள். இந்த தவறை எல்லாம் செய்ததை மறுக்க மாட்டோம்.ஆனால் இன்றும் அவர்களது மேலாண்மைக்குழு உறுப்பினர் அன்வர் பாஷா சிகரட் பிடிக்கிறாரே அந்த அழகை வீடியோ எடுத்துப்போடட்டும்.
அபு பைசலுக்கும்,அண்ணனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.அபு பைசல்
மார்கத்தை சொல்லி தவறை சுட்டிக்காட்டினால் தன்னை திருத்திக் கொள்வார்.அண்ணன் திருந்த மாட்டார் என்பதற்கு நிறைய உதாரணம் உண்டு.இருப்பினும் உலகம் முழுக்க சொல்லும் அந்த பிரச்சித்தி பெற்ற உதாரணத்தை நாமும் சொல்வோம்.பல பேர் எடுத்துச்சொல்லியும் இன்றும் கூட தொழச் சொன்னால் அதை மறுத்து அடம் பிடிக்கிறார். இன்னும் கெட்டுப்போவேன் என்ன பந்தயம் என்பவரை யார் தான் திருத்துவது? தம்பி நிசார்..நீங்களாவது ட்ரை பண்ணிப்பாருங்கள்!

உணர்வு இதழை தமு மு க விடமிருந்து அபகரித்த அண்ணன் அதற்காக டிரஸ்ட் உருவாகிய அண்ணன்,மக்கள் ரிபோர்ட் அபகரித்ததாக சொல்வதும் கேவலம்,மோசடி. RNI of india என்று கூகுளில் டைப் செய்தாலே அவர் சொல்லும் மக்கள் ரிபோர்ட் பதிவு செய்த தேதியும்,நமது சமுதாய மக்கள் ரிபோர்ட் பதிவு செய்த தேதியையும் பார்த்தாலே உண்மை நிலையை அறிந்துகொள்ளலாம் ..( மக்கள் ரிபோர்டையும் அபகரிக்கப் பார்த்திருக்கிறார்.அதற்காக முயற்சி செய்திருக்கிறார் எனபது இதன் மூலம் தெரிகிறது )இதை எல்லாம் பார்க்காமல் கோபம் தலைக்கேறி உளறினால் நச் என்று தான் அடி விழும்.நமக்கு முன்பே தெரியும்; மக்கள் ரிப்போர்ட்டில் நாம் இவரைப் பற்றி எழுதும் போதே நமது நண்பர்களிடத்தில்,அண்ணன் அடுத்து நம் மீது பாய்வார் என்று சொன்னோம்,அப்படியே நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்.இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்!

-அபு பைசல்

0 comments:

Post a Comment