Sunday, December 12, 2010

எஸ்.எம்.பாக்கர் ஹைதர் அலி முன்னிலையில் சூளை மேடு அல்-புர்கானில் பைத்துல்மால் துவக்கம்.!

12122010178.jpg12122010183.jpg
12122010179.jpg12122010182.jpg

சூளை மேடு பகுதியில் பல் வேறு மார்க்கப் பணிகளையும் , இந்திய தவ்ஹீத் ஜமாத்தோடு இணைந்து பல்வேறு சமுதாய பணிகளிலும் , செயல் பட்டு வரும் அல்-புர்கான் அசோசியேசன் , அர்ரஹ்மான் பைத்துல்மால் எனும் பெயரில் நேற்று 12.12.10 ஞாயிறு மாலை துவக்க நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது ! இதில் எஸ்.எம்.பாக்கர், எஸ்.ஹைதர் அலி , கேப்டன் அமீர் அலி , மதார் பிர்தவ்சி, மற்றும் செங்கிஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இஸ்லாமிய பொருளாதாரம் குறித்தும் , ஜகாத் பற்றியும் வட்டியில்லா வங்கி குறித்தும், பைத்துல்மாலின் அவசியம் குறித்தும் விரிவாக கருத்துரைகள் வழங்கப்பட்டன. இறுதியில் வந்திருந்த சகோதரர்கள் அனைவரும் பைத்துல்மாலின் துவக்க நிதியாக சுமார்.முப்பதினாயிரம் வழங்கினர். நிகழ்ச்சியை அல்புர்கான் நிர்வாகி சம்சு தப்ரேஸ் தொகுத்து வழங்கினார்.பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குரான் மொழியாக்கத்தை படித்த கேரளாவை சேர்ந்த ஒரு சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்! அவருக்கு முஹம்மத் சாதிக் எனும் பெயர் சூட்டப்பட்டது ! அவருக்கு திருக்கலிமாவை மவ்லவி.அபூபக்கர் ரஷாதி சொல்லிக்கொடுத்தார்.

0 comments:

Post a Comment